மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பரவுவதால் கட்டுப்படுத்தும் நடவடிக்கை நேற்று முதல் இரவு மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்
முழு ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. கடந்த ஒரு நாளில் கொரோனாவால் ஒரு லட்சம் பேருக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா, மத்திய பிரதேசம், கேரள மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாகப் பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 50,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை நான்கு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் நோய் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி முதல் வெள்ளி வரை இரவு மற்றும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். ஊரடங்கில் மால், ஹோட்டல், திரையங்கம், உடற்பயிற்சி கூடம், பூங்கா, மைதானம், மதுபான பார்கள் மூடப்படும்.
அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் செயல்படும். மும்பை மாகாணத்தில் ரயில்கள் செயல்படும். அரசு அலுவலங்களில் 50 சதவிகித ஊழியர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். ஆலைகள் செயல்படும். வேலை செய்யும் நிறுவனங்களில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
ஊழியர்கள் யாருக்காவது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அதற்கான பொறுப்பை நிர்வாகமே ஏற்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மக்கள் கொரோனா குறித்த கட்டுப்பாடு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதுகுறித்த அதிகாரபூர்வ வழிமுறைகளை அரசு விரைவில் வெளியிடுமெனத்தெரிவித்தார்
இந்த ஊரடங்கு அறிவிப்பு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் முதல்வர் உத்தவ் தாக்கரே தொழில்துறையினருக்கு சில முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொருளாதாரத்தை விட மனித உயிர் முக்கியமானது. அனைத்து தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து கொரோனாவை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும்”, இவ்வாறு தெரிவித்தார்.
கருத்துகள்