12 ஆம்வகுப்புப் பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது தொடர்பாக அனைத்துப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
2019ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவலால் பிளஸ் 2 தவிர அனைத்து பள்ளி மாணவர்களும் 2019-20 ஆம் கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி ஆனார்கள். 2020-21 ஆம் கல்வியாண்டில் இணைய வழி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்ட போதிலும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் முழுமையான பலனில்லை.
தனியார் பள்ளிகள் மட்டுமே முறைப்படி இணைய வழி வகுப்புகளை நடத்தின. அரசு பள்ளிகளில் கல்வித் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன. முதல் வகுப்பு துவங்கி பிளஸ் 1 வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி போடப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பின் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் தனியார் பள்ளி மாணவர்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்தல் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உயர் கல்வித்துறை (கூடுதல்) செயலாளர் அபூர்வா , அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் 12 ஆம்வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்த வேண்டும் என்பது தொடர்பாக அனைத்துப் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை
நடத்தப்பட்டதாகவும், மாணவர்களின் எதிர்காலம் முக்கியம் என்றாலும் கூட மாணவர்கள் உடல் நலம் அதைவிட முக்கியமானது என்பதால் நன்றாக ஆலோசித்து மட்டுமே எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலுள்ளோம். இது தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்திய பின்பு முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வருவதில் சிக்கல் உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு வந்தாலும் கூட அதனால் வீட்டில் உள்ளவர்களையும், மற்ற மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக மற்ற மாநிலங்களில் எப்படிப் பட்ட நிலை கையாளப்பட்டுள்ளது என்பதை ஆராய துறைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
நீட் தேர்வு மற்றும் சிறப்பு வகுப்புத் தொடர்பாக எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை நீட் தேர்வுக்கு விலக்கு குறித்து முடிவு எடுக்கப்பட்ட பின்னரே தேர்வு குறித்து விவாதிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கருத்துகள்