ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிப்பு சென்னையிலிருந்து 1,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழகத்தின் பிற பகுதிகளில் இன்றும் நாளையும் 4,500 சிறப்பு பஸ்கள் இயக்கம். மருந்தகம், பால், குடிநீர், பத்திரிகைக விநியோகத்திற்கு தடையில்லை
தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததால் ஊரடங்கை நீட்டித்து தீவிரப்படுத்த மருத்துவ குழு அறிவுறுத்திய படி தமிழகத்தில் ஒரு வாரம் தளர்வுகளற்ற' முழு ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்துக் கடைகள், கால்நடை மருந்தகங்கள் பால் விநியோகம், குடிநீர் மற்றும் தினசரிப் பத்திரிக்கை விநியோகம்
பொது மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத் துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்
தலைமைச் செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்
தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்தே பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மின்னணு சேவை காலை 08.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.
உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் வாங்கிச் செல்லும் விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படும்
செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்.
தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படும்.
பொது மக்கள் நலன் கருதி, வெளியூர் செல்லும் பயணிகளின் நலன் கருதி, இன்று 22 மே 2021 மற்றும் நாளை 23 மே 2021 தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.
கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனையோ அல்லது சிகிச்சையோ பெற வேண்டும். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்வதாக தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.மே மாதம் 25 ஆம் தேதி முதல் எந்த விதமான தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல் : மே 24 ஆம் தேதி நாளை இயல்பாக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி
தமிழகத்தில் ஒருவார காலத்துக்கு முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் எந்நவிதமா தளர்வுகளுமின்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பொதுமக்கள் நலன் கருதி இன்றிரவு 9 மணி வரை ஞாயிறு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய ஊரடங்கு திங்கட்கிழமை காலை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி இன்றும் நாளையும் அரசு தனியார் பேருந்துக்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்தகம், நாட்டு மருந்து கடைகள், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளருது. உணவகங்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 வரை உணவு கட்டப்பட்டது (parcel) மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள், விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் பார்சல் சேவையில் ஈடபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள், ஐ.டி. நிறுவனங்கள் வீட்டிலிருந்தபடியே பணிபுரியவும் வேண்டுக்கோளுடன். பெட்ரோல் நிலையம், ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உரிய மருத்துவக் காரணங்கள், இறப்புகளுக்கு மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இணையவழிப் பதிவுடன் அனுமதி வழங்கப்படுவதாகவும். மருத்துவக் காரணங்களுக்காக மாவட்டங்களுக்குள் பயணிக்க இணைய வழிப் பதிவு தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசியமான துறைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.
கருத்துகள்