சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தேசிய அளவில் மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்தது
நாட்டில் செலுத்தப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை இன்று 19 கோடியைக் ( 19,18,79,503) கடந்துள்ளதால், இந்தியா தனது தடுப்பூசி இயக்கத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
தற்காலிக அறிக்கையின்படி, இன்று காலை 7 மணி வரை, மொத்தம் 19,18,79,503 தடுப்பூசி மருந்துகள் 27,53,883 அமர்வுகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. மொத்த எண்ணிக்கையில் 66.32 சதவிகிதம், பத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 20.61 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இது, ஒரே நாளில் நடத்தப்பட்ட மிக அளவிலான சோதனைகள் என்ற புதிய மைல்கல்லாகும். தினசரி தொற்று விகிதம் 12.59% ஆகக் குறைந்துள்ளது.
நம் நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 3,57,295 பேர் குணமடைந்துள்ளனர். இது புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைவிட அதிகம்.
நாட்டில் மொத்தம் 2,27,12,735 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தேசிய குணமடையும் விகிதம் 87.25 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியா தொடர்ந்து ஐந்து நாளாக, 3 லட்சத்துக்கும் குறைவான புதிய தொற்றாளர்களைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2,59,551 பேர் கொவிட் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்
கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாட்டில் அதிக அளவாக 35,579 பேரும், கேரளாவில் 30,491 பேரும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்..
நாடு முழுவதும், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 30,27,925 ஆக சரிந்துள்ளது.
கருத்துகள்