இரகசிய இடத்தில் ஆந்திர ஆயுர்வேத மருத்துவர்.முழு வீச்சில் மருந்து தயாரிப்பு. கள்ளச்சந்தையில் ரூ.2000-க்கு விற்பனை!
இரகசியமாகத் தங்க வைக்கப்பட்டுள்ள ஆந்திர ஆயுர்வேத மருத்துவர்.முழு வீச்சில் மருந்து தயாரிப்பு. கள்ளச்சந்தையில் ரூ.2000-க்கு விற்பனை!
இரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆந்திர ஆயுர்வேத மருத்துவர்; முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் பார்சலில் கரோனா மருந்து- நெல்லூரில் கள்ளச்சந்தை விற்பனை அதிகரிப்பு
ஆந்திரா மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மருந்து தயாரித்த ஆயுர்வேத வைத்தியர், தற்போது ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும். அவர் தயாரிக்கும் மருந்துகள் மிக முக்கிய பிரமுகர்களுக்கு (விஐபி) மட்டும் பார்சலில் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தில் ஆனந்தய்யா என்பவர் பல ஆண்டுகளாக மக்களுக்கு ஆயுர்வேத வைத்தியம் பார்த்து வருகிறார். சமீபத்தில் இவர் கரோனாவுக்காக மூலிகை மருந்து தயாரித்தார். நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல மாநிலங்களிலிருந்து மக்கள் கூட்டம் கிருஷ்ணப்பட்டினம் வந்தனர். தகவலறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்யுமாறு ஐசிஎம்ஆர் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார். அதுவரை மருந்து விநியோகத்தை நிறுத்துமாறும் அவர் அறிவுறுத்தியதால், காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் தலையிட்டு மருந்து விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திய
நிலையில், ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவக் குழு கிருஷ்ணப்பட்டினம் சென்று, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்தது. இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்றும், இவை முற்றிலும் முறையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் குழு அறிவித்த சூழலில், தற்போது ஆனந்தய்யா நெல்லூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் இரகசியமாக தங்கவைக்கப்பட்டிருப்பதை தெலுங்கு செய்தி ஒன்று அம்பலப்படுத்தியது. அங்கு அவர், தனது சிஷ்யர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் கொரோனா மூலிகை மருந்தைத் தயாரிப்தையும் ஒளிபரப்பியது. இந்த ரகசிய இடத்தில் ஆளும் கட்சியினரின் கட்டுப்பாட்டிலுள்ள ஆனந்தய்யா, கொரோனா மருந்து தயாரித்து, அவற்றை ஆந்திரா, தெலங்கானா, டெல்லியிலுள்ள முக்கிய நபர்களுக்கு மட்டும் ஆளும் கட்சியினர் ரகசியமாக அனுப்பி வைப்பதாகவும் ஆதரங்களுடன் செய்தியை வெளியிட்டது.
இச் சூழலில், வைத்தியர் ஆனந்தய்யா தயாரிக்கும் மருந்தை திருப்பதியிலுள்ள ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தில் எலிகள், முயல்களுக்கு கொடுத்து முதல் கட்டமாக பரிசோதனை நடத்தி வருவதாகவும் முழுமையாக அனைத்து பரிசோதனைகளையும் செய்த பிறகு, இதுதொடர்பான அறிக்கை மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அரசுகள் அனுமதி வழங்கினால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியுடன் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் மருந்து தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவோம் என்றும் சந்திரகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ரெட்டி தெரிவித்தார்.
நெல்லூரில் தற்போது ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்றுக்கு ரூபாய்.1,500 முதல் 2,000 வரை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் கிருஷ்ணபட்டினம் தாலுக்காவிலுள்ள கிராமத்தில் பல மக்களைக் குணமாக்கிய மூலிகை மருந்து..
AYUSH. (Ayurveda,Yoga,Unani, Siddha, Homeopathy) நிறுவனம் ஒப்புதல் அளித்து இருக்கிறது .ஏற்கனவே துணைக் குடியரசு தலைவரும் இந்த மருந்தை அங்கீகரிக்க பரிந்துரை செய்துள்ளார். தற்போது ICMR ன் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது விரைவில் ஒரு நல்ல முடிவு ஏற்படும்
நெல்லூருக்கு கூட்டம் கூட்டமாக போகும் கொரோனா நோயாளிகள்.. காலியாகும் ஹாஸ்பிட்டல்கள். காரணம் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணாபட்டினத்தில் கொரோனாவிற்கு இலவசமாக வழங்கப்படும் ஆயுர்வேத மருந்து வாங்க ஏராமானோர் குவிந்தார்கள். இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா உடனே சரியாகிவிடுவதாக வாய் வழித் தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கனோர் குவிந்தார்கள்.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று மக்கள் மருத்து வாங்கியதால் அந்தப் பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாபட்டினத்தில் ஆனந்தையா என்பவரது குடும்பம் கொரோனாவிற்கு ஆயுர்வேத மருந்து கொடுத்து வந்துள்ளது. இந்த மருந்தை சாப்பிட்ட பலர் நோயிலிருந்து குணமடைந்தவிட்டதாக தகவல்கள் பரவத் தொடங்கியதால்
மக்கள் வெள்ளம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கிருஷ்ணாபட்டினத்தில் குவிந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஆனந்தையா குடும்பம் மருந்து கொடுத்தது. பலர் மருத்துவமனைகளுக்கு போகாமல் நேராக நெல்லூர் கிருஷ்ணாபட்டினம் வருவதால் அங்கு மக்கள் வெள்ளம் காணவே
இப்படி கூடும் கூட்டத்தால் கொரோனா மீண்டும் உச்சம் அடையுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெறுகிறார்கள். போக்குவரத்தை ஒழுங்கப்படுத்தவும், மக்களை வரிசையில் நிற்கவைக்கவும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநில உளவுத்துறைத் தகவலின் படி இதுவரை சுமார் 50000 முதல் 60000 நபர்கள் வந்து சிகிச்சை பெற்று சென்றிருப்பார்கள் இந்த நிகழ்ச்சியை உள்ளூர் எம்எல்ஏ தொடங்கி வைத்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மருந்தால் எந்த பக்க விளைவும் இல்லை என்றும் கூறுகிறார்கள். ஆனந்தையா மருந்தை கண்ணில் விட்ட உடன் உடனடியாக ஆக்சிஜன் லெவல் உடலில் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆயுர்வேத மருந்தை எடுத்துக்கொள்வதற்காக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து நேராக வந்துள்ளார், ஆக்சிஜன் இல்லாமல் இரண்டு நிமிடம் கூட சுவாசிக்க முடியாமல் இருந்த தான் இப்போது முழுமையாக மூச்சுவிட முடிகிறது. நன்றாக உள்ளேன் என்று பேசும் வீடியோவும் வைரலாகியது.
ஆந்திராவில் இந்த மருந்து வாங்க எல்லா கொரோனா நோயாளிகளும் சென்றுவிட்டதால் நெல்லூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகள் காலியாக உள்ளன.
மருந்து வாங்க வாய் வழித் தகவல் கேட்டு, சுமார் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர்(கொரோனா நோயாளிகள் உள்பட) வரிசையில் நின்றார்கள்.
வைத்தியர் என்ன மருந்து தருகிறார் என லோக் ஆயுக்தாவிடம் மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையின்படி, ஆனந்தையா மருந்தை இலவசமாக எல்லோருக்கும் விநியோகிக்கிறார். ஆயுர்வேத மருத்துவம் படித்த நிபுணர் அல்ல. அவர் அதிகாரிகளிடம் ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு முறைகளில் பயன்படுத்தப்படும் எந்தவொரு நிலையான தயாரிப்பு முறைகளிலும் இல்லாத வகையில் மருந்தை தயாரித்துள்ளார். அவர் மருந்து தயாரிக்க சில மூலிகைகளைப் பயன்படுத்துகிறார் . மருந்தைத் தயாரிக்க சில வித்தியாசமான முறைகளைப் பின்பற்றுகிறார். அவர் நோயாளிகளின் ஆக்சிஜன் லெவலை அதிகரிக்க கண்ணில் விடும் திரவ மருந்தை நீண்ட காலமாக பயன்படுத்தினால் கண்பார்வையை மோசமாக பாதிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.ஆனால் அதைப் பயன்படுத்தியவர்கள் யாரும் எந்தப் புகாரும் செய்யவில்லை. அரசின் அனுமதி பெறாமல் மருந்து விநியோகிக்க முடியாது என்று ஆய்வுக் குழு. அந்த மருந்து குறித்து விரிவான அறிக்கையை வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் லோகாயுக்தாவுக்கு தெரிவித்துள்ளார். எனினும் தொடர்ந்து அங்கு மருந்து மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.
கருத்துகள்