முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரகசிய இடத்தில் ஆந்திர ஆயுர்வேத மருத்துவர்.முழு வீச்சில் மருந்து தயாரிப்பு. கள்ளச்சந்தையில் ரூ.2000-க்கு விற்பனை!



இரகசியமாகத் தங்க வைக்கப்பட்டுள்ள ஆந்திர ஆயுர்வேத மருத்துவர்.முழு வீச்சில் மருந்து தயாரிப்பு. கள்ளச்சந்தையில் ரூ.2000-க்கு விற்பனை! 





   இரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆந்திர ஆயுர்வேத மருத்துவர்; முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் பார்சலில் கரோனா மருந்து- நெல்லூரில் கள்ளச்சந்தை விற்பனை அதிகரிப்பு  

ஆந்திரா மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மருந்து தயாரித்த ஆயுர்வேத வைத்தியர், தற்போது ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும். அவர் தயாரிக்கும் மருந்துகள் மிக முக்கிய பிரமுகர்களுக்கு (விஐபி) மட்டும் பார்சலில் அனுப்பி வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், கிருஷ்ணப்பட்டினம் முத்துக்கூறு கிராமத்தில் ஆனந்தய்யா என்பவர் பல ஆண்டுகளாக மக்களுக்கு ஆயுர்வேத வைத்தியம் பார்த்து வருகிறார். சமீபத்தில் இவர் கரோனாவுக்காக  மூலிகை மருந்து தயாரித்தார்.  நல்ல பலன் தந்ததால் அவரிடம் மருந்து வாங்க பல மாநிலங்களிலிருந்து மக்கள் கூட்டம் கிருஷ்ணப்பட்டினம் வந்தனர். தகவலறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்யுமாறு ஐசிஎம்ஆர் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார். அதுவரை மருந்து விநியோகத்தை நிறுத்துமாறும் அவர் அறிவுறுத்தியதால், காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் தலையிட்டு மருந்து விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்திய

நிலையில், ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவக் குழு கிருஷ்ணப்பட்டினம் சென்று, ஆனந்தய்யாவின் ஆயுர்வேத மருந்தை ஆய்வு செய்தது. இந்த மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் இல்லை என்றும், இவை முற்றிலும் முறையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படுவதாகவும் குழு அறிவித்த சூழலில், தற்போது ஆனந்தய்யா நெல்லூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் இரகசியமாக தங்கவைக்கப்பட்டிருப்பதை தெலுங்கு செய்தி ஒன்று அம்பலப்படுத்தியது. அங்கு அவர், தனது சிஷ்யர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் கொரோனா மூலிகை மருந்தைத் தயாரிப்தையும்  ஒளிபரப்பியது. இந்த ரகசிய இடத்தில் ஆளும் கட்சியினரின் கட்டுப்பாட்டிலுள்ள ஆனந்தய்யா, கொரோனா மருந்து தயாரித்து, அவற்றை ஆந்திரா, தெலங்கானா, டெல்லியிலுள்ள முக்கிய நபர்களுக்கு மட்டும் ஆளும் கட்சியினர் ரகசியமாக அனுப்பி வைப்பதாகவும் ஆதரங்களுடன் செய்தியை வெளியிட்டது.

இச் சூழலில், வைத்தியர் ஆனந்தய்யா தயாரிக்கும் மருந்தை திருப்பதியிலுள்ள ஆயுர்வேதப் பல்கலைக்கழகத்தில் எலிகள், முயல்களுக்கு கொடுத்து முதல் கட்டமாக பரிசோதனை நடத்தி வருவதாகவும்  முழுமையாக அனைத்து பரிசோதனைகளையும் செய்த பிறகு, இதுதொடர்பான அறிக்கை மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், அரசுகள் அனுமதி வழங்கினால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியுடன் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் மருந்து தயாரித்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்குவோம் என்றும் சந்திரகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் ரெட்டி தெரிவித்தார்.

நெல்லூரில் தற்போது ஆனந்தய்யா தயாரித்த மருந்துகள் பாக்கெட் ஒன்றுக்கு ரூபாய்.1,500 முதல் 2,000 வரை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.   ஆந்திர மாநிலம் நெல்லூரில் கிருஷ்ணபட்டினம் தாலுக்காவிலுள்ள கிராமத்தில் பல மக்களைக் குணமாக்கிய மூலிகை மருந்து..

AYUSH.   (Ayurveda,Yoga,Unani, Siddha, Homeopathy) நிறுவனம் ஒப்புதல் அளித்து இருக்கிறது .ஏற்கனவே துணைக் குடியரசு தலைவரும் இந்த மருந்தை அங்கீகரிக்க பரிந்துரை செய்துள்ளார். தற்போது ICMR ன் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது விரைவில் ஒரு நல்ல முடிவு ஏற்படும்

நெல்லூருக்கு கூட்டம் கூட்டமாக போகும் கொரோனா நோயாளிகள்.. காலியாகும் ஹாஸ்பிட்டல்கள். காரணம் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணாபட்டினத்தில் கொரோனாவிற்கு இலவசமாக வழங்கப்படும் ஆயுர்வேத மருந்து வாங்க ஏராமானோர் குவிந்தார்கள். இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா உடனே சரியாகிவிடுவதாக வாய் வழித் தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கனோர் குவிந்தார்கள்.

சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று மக்கள் மருத்து வாங்கியதால் அந்தப் பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாபட்டினத்தில் ஆனந்தையா என்பவரது குடும்பம் கொரோனாவிற்கு ஆயுர்வேத மருந்து கொடுத்து வந்துள்ளது. இந்த மருந்தை சாப்பிட்ட பலர் நோயிலிருந்து குணமடைந்தவிட்டதாக தகவல்கள்    பரவத் தொடங்கியதால்

மக்கள் வெள்ளம். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் கிருஷ்ணாபட்டினத்தில் குவிந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஆனந்தையா குடும்பம் மருந்து கொடுத்தது. பலர் மருத்துவமனைகளுக்கு போகாமல் நேராக நெல்லூர் கிருஷ்ணாபட்டினம் வருவதால் அங்கு மக்கள் வெள்ளம் காணவே

இப்படி கூடும் கூட்டத்தால் கொரோனா மீண்டும் உச்சம் அடையுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஏற்பட்டுள்ளது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மக்கள் வரிசையில் நின்று மருந்தை பெறுகிறார்கள். போக்குவரத்தை ஒழுங்கப்படுத்தவும், மக்களை வரிசையில் நிற்கவைக்கவும் காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநில உளவுத்துறைத் தகவலின் படி இதுவரை சுமார் 50000 முதல் 60000 நபர்கள் வந்து சிகிச்சை பெற்று சென்றிருப்பார்கள்  இந்த நிகழ்ச்சியை உள்ளூர் எம்எல்ஏ தொடங்கி வைத்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மருந்தால் எந்த பக்க விளைவும் இல்லை என்றும் கூறுகிறார்கள். ஆனந்தையா மருந்தை கண்ணில் விட்ட உடன் உடனடியாக ஆக்சிஜன் லெவல் உடலில் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆயுர்வேத மருந்தை எடுத்துக்கொள்வதற்காக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் மருத்துவமனையில் இருந்து நேராக வந்துள்ளார், ஆக்சிஜன் இல்லாமல் இரண்டு நிமிடம் கூட சுவாசிக்க முடியாமல் இருந்த தான் இப்போது முழுமையாக மூச்சுவிட முடிகிறது. நன்றாக உள்ளேன் என்று பேசும் வீடியோவும் வைரலாகியது.

ஆந்திராவில் இந்த மருந்து வாங்க எல்லா கொரோனா நோயாளிகளும் சென்றுவிட்டதால் நெல்லூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டுகள் காலியாக உள்ளன. 

 மருந்து வாங்க  வாய் வழித் தகவல் கேட்டு, சுமார் 50ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர்(கொரோனா நோயாளிகள் உள்பட) வரிசையில் நின்றார்கள்.

வைத்தியர் என்ன மருந்து தருகிறார் என லோக் ஆயுக்தாவிடம் மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கையின்படி, ஆனந்தையா மருந்தை இலவசமாக எல்லோருக்கும் விநியோகிக்கிறார். ஆயுர்வேத மருத்துவம் படித்த நிபுணர் அல்ல. அவர் அதிகாரிகளிடம் ஆயுர்வேத மருத்துவத்  தயாரிப்பு முறைகளில் பயன்படுத்தப்படும் எந்தவொரு நிலையான தயாரிப்பு முறைகளிலும் இல்லாத வகையில் மருந்தை தயாரித்துள்ளார். அவர் மருந்து தயாரிக்க சில மூலிகைகளைப் பயன்படுத்துகிறார் . மருந்தைத் தயாரிக்க சில வித்தியாசமான முறைகளைப் பின்பற்றுகிறார். அவர் நோயாளிகளின் ஆக்சிஜன் லெவலை அதிகரிக்க கண்ணில் விடும் திரவ மருந்தை நீண்ட காலமாக பயன்படுத்தினால் கண்பார்வையை மோசமாக பாதிக்கும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.ஆனால் அதைப் பயன்படுத்தியவர்கள் யாரும் எந்தப் புகாரும் செய்யவில்லை. அரசின் அனுமதி பெறாமல் மருந்து விநியோகிக்க முடியாது என்று ஆய்வுக் குழு. அந்த மருந்து குறித்து விரிவான அறிக்கையை வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் லோகாயுக்தாவுக்கு தெரிவித்துள்ளார். எனினும் தொடர்ந்து அங்கு மருந்து மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த