மேற்கு வங்காளத்தில் 33 நாட்கள்
,8 கட்டங்களாகத் தேர்தலில் பிரதமர், 22 மத்திய மந்திரிகள்,6 முதலமைச்சர்கள், மத்திய ஏஜென்சிகள் கோப்ரா (மிதுன்) 10,000 மத்திய ராணுவப்படை, அதைவிடவும் அதிகம் பணம் தண்ணீர்போல் வாரி இறைக்கப்பட்டது, ஊடகங்கள் அனைத்தும் பாஜக ஆதரவாக செயல்பட ஒரு டசனுக்கும் அதிகமான ஹெலிகாப்டர்கள்,
294 மண்டலங்களிலும் விட்டெறிந்த பணக்கட்டு 600 க்கும் மேற்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், சொந்தக் கட்சியிலிருந்து நேரம்பார்த்து பாஜக வுக்கு தாவிய தலைவர்கள்,
இதெல்லாம் போதாதென்று கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொடிய வகுப்புவெறி வன்முறை
ஹவாய் சப்பல் அணிந்த எளிமையின் மறு உருவமான ஒரு பெண் வீராங்கனையாக மம்தா பானர்ஜி,
அப்படியிருந்தும் ஆட்சியை பாஜக கைப்பற்றமுடியாமல்
மீண்டும் அவரே முதல்வரானார் .மேற்கு வங்காளத்தில் மம்தாவின் தொண்டர்கள் பாடமெடுத்து ஆடி வருகின்றனர், கடந்த நான்கு நாட்களாக பாஜக தலைவர்கள் பலபேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, பாஜக நிர்வாகிகளின் வீடுகள் கடைகள் சூறையாடப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது, மேற்கு வங்காளத்தில் பாஜக வை வங்காளிகளின் எதிரி எனவும் பாஜக வினரை இனத் துரோகிகள் எனவும் பிரகடனம் செய்யப்பட்டு, அனைத்துக் கொலைகளும் வன்முறைகளும் பொது மக்களின் கண் முன்னே பொது மக்களின் ஆதரவுடனேயே நடந்தேறின என்பது திகிலான செய்தி, உக்கிரமாக கலவரம் நடந்துக்கொண்டிருந்த வேளையில் மம்தா வின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒட்டு மொத்த கலவரமும் நொடிப் பொழுதில் நிறுத்தப்பட்டு அமைதி திரும்பியதும் ஆச்சர்யம் தான்.குறிப்பாக தெற்கு கொல்கத்தா காந்திநகர் பகுதியில் ஒரு பாஜக தலைவரை 4 பேர் கொண்ட கும்பல அடித்து பெட்ரோல் ஊற்றி எரிக்க தீக்குச்சியை பற்ற வைக்கும் பொழுது மம்தாவின்ன் அறிவிப்பு வரவே, அந்தக் கும்பல் பாஜக தலைவரை எரிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்துள்ளனர். அனைத்து வன்முறை சம்பவங்களும் வீடியோ பதி செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறதும் பயம் கலந்த சோகம் தான். மம்தா பானர்ஜி பாஜகவுக்கு சொல்ல நினைத்த செய்தியை சொல்லி விட்டார்."என்னை சீண்டினால் ஆபத்து" என்பதே அந்த செய்தியாக இருக்க கூடும்... தான்தோன்றித் தனமாக அராஜக போக்கை கையிலெடுத்து ஆணவத்தில் ஆடியதற்கு இதெல்லாம் தேவை தான் என மக்களின் கூட்டு மனசாட்சி மம்தாவுக்கு ஆதரவாக நிற்கிறது.சாது மிரண்டாலே காடு தாங்காது, பாஜக வினர் வம்பு வளர்ப்பதோ வங்கத்தின் பிராந்திய சக்திகளிடம். தாங்குவார்களா? மையம் தேசியம் எனும் பெயரில் மண்ணின் மைந்தர்களை அடக்கி ஒடுக்க நினைத்தால் இது தான் நடக்கும் போல்.
மேற்கு வங்காளத்தில் திரிணமூல் கட்சி யினர் பாஜக வினரை தாக்கிக் கொன்று குவித்ததால் கண்டனங்களையும் அனுதாங்களையும் மட்டுமே தெரிவிக்க முடியும்.
கல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடக்கும் தொடர்ச்சியான வன்முறைகளைக் கண்டித்து மகாத்மா காந்தி சிலை முன் அறவழிப் போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி ரூபா கங்குலி மற்றும் மேற்கு வங்க மாநில மகளிரணித் தலைவி அக்னிமித்ரா பால் ஆகியோரை முன்னறிவிப்பு ஏதுமின்றி கொல்கத்தா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பிரதமர் வாழ்த்து இப்போது போராட்டம். யாராயினும் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்து அரசியல் நடத்த வேண்டும்.பிரதமர் அலுவலகம்
முதல்வராக பதவியேற்றுள்ள திருமிகு மம்தா பானர்ஜிக்கு பிரதமர் வாழ்த்து
பிரதமர் திரு.நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள திருமிகு மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றுள்ள சகோதரி மம்தா அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
கருத்துகள்