ரூ.3.42 கோடி டிடிஎஸ் ரீபண்ட் மோசடி: ராமநாதபுரத்தை சேர்ந்த வரிச்சேவை நிறுவன உரிமையாளர் மீது சிபிஐ வழக்குப் பதிவு
.ரூ.3.42 கோடி டிடிஎஸ் ரீபண்ட் மோசடியில் ஈடுபட்டதாக, வருமானவரித்துறை அளித்த புகார் அடிப்படையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வரி சேவை நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட சிலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
ராமநாதபுரத்தில் திரவியம் டேக்ஸ் சர்வீஸஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் பஞ்சாட்சரம். இவர் அரசு ஊழியர்கள் உட்பட சிலருடன் சேர்ந்து, வருமானவரித்துறையை ஏமாற்றி டிடிஎஸ் ரீபண்ட் மோசடியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை, டான் கணக்கு வைத்திருப்பவர்கள் சார்பில், அவர்களுக்கு தெரியாமலேயே இ-டிடிஎஸ் திருத்த கணக்குகளை தாக்கல் செய்து மற்றவர்களின் பெயரில் வரி ரீபண்ட் ரூ. 3,42,77,901 பெற்று வருமானவரித்துறைக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த மோசடி குறித்து வருமானவரித்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து பஞ்சாட்சரம் உட்பட சிலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த டிடிஎஸ் ரீபண்ட் மோசடி குறித்து தொடர்ந்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.
கருத்துகள்