முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏப்ரலில் அமெரிக்காவிற்கான இந்திய பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 400%, சீனாவிற்கு 143% அதிகரிப்பு




ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கான இந்திய பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 400%, சீனாவிற்கு 143% அதிகரிப்பு

கப்பல்கள், படகுகள், மிதவை கட்டமைப்புகளைத் தவிர அனைத்துப் பிரிவுகளும் நேர்மறையான வளர்ச்சி

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 25 முக்கிய நாடுகளுள் 23 நாடுகளுக்கு பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கணிசமான வளர்ச்சி அடைந்தது. நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகம், அடிப்படை விளைவுகளினால் பெரும் உச்சத்தை எட்டியது.

இந்தியாவின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் முதல் சிறந்த 25  நாடுகளுள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் மட்டுமே எதிர்மறை வளர்ச்சி பதிவானது.

அமெரிக்காவும் அதைத் தொடர்ந்து சீனாவும் இந்தியப் பொறியியல் பொருட்களின் மிகப் பெரிய ஏற்றுமதித் தளமாக விளங்குகின்றன. கடந்த ஆண்டைவிட இந்த நிதி ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் எண்ணிக்கை 400 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அதைத்தொடர்ந்து இதே காலக்கட்டத்தில் சீனாவிற்கான ஏற்றுமதி 143.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்தது.

“கப்பல்கள், படகுகள் மற்றும் மிதவை கட்டமைப்புகளைத் தவிர அனைத்து பிரிவுகளும் இந்த காலகட்டத்தில் நேர்மறை வளர்ச்சி அடைந்தன. கொவிட் பெருந்தொற்று காலகட்டத்திலும் கடந்த சில மாதங்களாக வளர்ச்சி தொடர்ந்து உத்வேகம் அடைந்துள்ளது. நிதியாண்டு 21 இல் குறைந்த ஆதாரத்தின் காரணத்தால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளின் விகிதம் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும் அதன் மீள்தன்மை மிகவும் திருப்திகரமாக உள்ளது. சர்வதேச நிலவரத்தை அது பிரதிபலிக்கிறது”, என்று இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் திரு மகேஷ் தேசாய் கூறினார்.

நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்த 32 பொறியியல் சரக்கு பிரிவுகளுள் இரும்பும், எஃகும் ஏப்ரல் 2021 மாதம், கடந்த ஆண்டு இதே காலத்தை விட 210% பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்தன. அலுமினியம், துத்தநாகம், நிக்கல், ஈயம், தகரம் போன்ற இரும்பு சாரா பிரிவுகளின் ஏற்றுமதி இந்த காலகட்டத்தில் 110.5 சதவீத வளர்ச்சியை அடைந்தது.

தொழில்துறை உபகரணங்களின் மாத ஏற்றுமதி, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 146.21 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2021 ஏப்ரல் மாதத்தில் 1174.23 மில்லியன் அமெரிக்க டாலராக சுமார் 703 சதவீதம் வளர்ச்சியை எட்டியது. மின்னணு உபகரணங்கள் பிரிவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் 245.43 மில்லியன் அமெரிக்க டாலரை விட 247 சதவீதம் கூடுதலாக நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 853.1  மில்லியன் அமெரிக்க டாலராக பதிவானது.

விமானம், விண்கலம் மற்றும் அவற்றின் பாகங்களின் ஏற்றுமதி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 24.1 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 200 சதவீதம் அதிகரித்து 2021 ஏப்ரல் மாதத்தில் 74.5 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

கப்பல்கள், படகுகள் மற்றும் மிதவை கட்டமைப்புகளின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 677.4 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவை விட நடப்பாண்டு 32.8% குறைந்து, 455.4 மில்லியன் அமெரிக்க டாலராக எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்தது.

இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தரவுகளின் அடிப்படையில், பொறியியல் சரக்குகளின் ஏற்றுமதியின் மதிப்பு கடந்த ஆண்டின் 2.31 பில்லியன் அமெரிக்க டாலரை விட 229.74 சதவீதம் உயர்ந்து 7.60 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. நாட்டின் மொத்த வர்த்தகங்களின் ஏற்றுமதியில்  பொறியியல் பொருட்கள் நான்கில் ஒரு பங்கு வகிப்பதால், நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் மீட்சி அடைவதில் இது குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

2021 ஏப்ரல் மாதத்தில் ஒட்டு மொத்த ஏற்றுமதியின் வர்த்தகம் 30.63 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10.36 பில்லியன் அமெரிக்க டாலரை விட மூன்று மடங்கு அதிகமாகும். 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஏற்றுமதி 17.62 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. பெருந்தொற்றின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தாக்கத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்தது. சர்வதேச நிலவரத்தின்படி இந்தியாவின் வெளிநாடுகளுக்கான வர்த்தகம் வலுவான மீள் தன்மையை எடுத்துரைக்கிறது.

இந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டில் நாட்டின் வர்த்தகம் 400 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

அந்நிய வர்த்தகக் கொள்கை உள்ளிட்ட முக்கிய வர்த்தக கொள்கைகளின் வாயிலாக நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், ஏற்றுமதி சமூகத்திற்கு பெரும் உதவிகரமாக இருப்பதாக பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் திரு தேசாய் குறிப்பிட்டார்.

நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி பற்றி நம்பிக்கை தெரிவித்த திரு தேசாய், பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் கடந்த சில வாரங்களாக அதிகரிக்கும் பாதிப்புகளால் ஐயம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“பொது முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்படையாத வகையில் மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும், வர்த்தகங்கள் முழுவதும் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. எனவே ஏற்றுமதியாளர்களுக்கு போதிய ஆதரவை அரசு அளிப்பது மிகவும் முக்கியம்”, என்று தேசாய் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...