முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏப்ரலில் அமெரிக்காவிற்கான இந்திய பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 400%, சீனாவிற்கு 143% அதிகரிப்பு




ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கான இந்திய பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 400%, சீனாவிற்கு 143% அதிகரிப்பு

கப்பல்கள், படகுகள், மிதவை கட்டமைப்புகளைத் தவிர அனைத்துப் பிரிவுகளும் நேர்மறையான வளர்ச்சி

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 25 முக்கிய நாடுகளுள் 23 நாடுகளுக்கு பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி 2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கணிசமான வளர்ச்சி அடைந்தது. நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகம், அடிப்படை விளைவுகளினால் பெரும் உச்சத்தை எட்டியது.

இந்தியாவின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் முதல் சிறந்த 25  நாடுகளுள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் மட்டுமே எதிர்மறை வளர்ச்சி பதிவானது.

அமெரிக்காவும் அதைத் தொடர்ந்து சீனாவும் இந்தியப் பொறியியல் பொருட்களின் மிகப் பெரிய ஏற்றுமதித் தளமாக விளங்குகின்றன. கடந்த ஆண்டைவிட இந்த நிதி ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் எண்ணிக்கை 400 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அதைத்தொடர்ந்து இதே காலக்கட்டத்தில் சீனாவிற்கான ஏற்றுமதி 143.3 சதவீதமாக வளர்ச்சி அடைந்தது.

“கப்பல்கள், படகுகள் மற்றும் மிதவை கட்டமைப்புகளைத் தவிர அனைத்து பிரிவுகளும் இந்த காலகட்டத்தில் நேர்மறை வளர்ச்சி அடைந்தன. கொவிட் பெருந்தொற்று காலகட்டத்திலும் கடந்த சில மாதங்களாக வளர்ச்சி தொடர்ந்து உத்வேகம் அடைந்துள்ளது. நிதியாண்டு 21 இல் குறைந்த ஆதாரத்தின் காரணத்தால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளின் விகிதம் அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. எனினும் அதன் மீள்தன்மை மிகவும் திருப்திகரமாக உள்ளது. சர்வதேச நிலவரத்தை அது பிரதிபலிக்கிறது”, என்று இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் திரு மகேஷ் தேசாய் கூறினார்.

நேர்மறை வளர்ச்சியை பதிவு செய்த 32 பொறியியல் சரக்கு பிரிவுகளுள் இரும்பும், எஃகும் ஏப்ரல் 2021 மாதம், கடந்த ஆண்டு இதே காலத்தை விட 210% பிரம்மாண்ட வளர்ச்சி அடைந்தன. அலுமினியம், துத்தநாகம், நிக்கல், ஈயம், தகரம் போன்ற இரும்பு சாரா பிரிவுகளின் ஏற்றுமதி இந்த காலகட்டத்தில் 110.5 சதவீத வளர்ச்சியை அடைந்தது.

தொழில்துறை உபகரணங்களின் மாத ஏற்றுமதி, 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 146.21 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 2021 ஏப்ரல் மாதத்தில் 1174.23 மில்லியன் அமெரிக்க டாலராக சுமார் 703 சதவீதம் வளர்ச்சியை எட்டியது. மின்னணு உபகரணங்கள் பிரிவின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் 245.43 மில்லியன் அமெரிக்க டாலரை விட 247 சதவீதம் கூடுதலாக நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் 853.1  மில்லியன் அமெரிக்க டாலராக பதிவானது.

விமானம், விண்கலம் மற்றும் அவற்றின் பாகங்களின் ஏற்றுமதி 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 24.1 மில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 200 சதவீதம் அதிகரித்து 2021 ஏப்ரல் மாதத்தில் 74.5 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.

கப்பல்கள், படகுகள் மற்றும் மிதவை கட்டமைப்புகளின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 677.4 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவை விட நடப்பாண்டு 32.8% குறைந்து, 455.4 மில்லியன் அமெரிக்க டாலராக எதிர்மறை வளர்ச்சியை பதிவு செய்தது.

இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தரவுகளின் அடிப்படையில், பொறியியல் சரக்குகளின் ஏற்றுமதியின் மதிப்பு கடந்த ஆண்டின் 2.31 பில்லியன் அமெரிக்க டாலரை விட 229.74 சதவீதம் உயர்ந்து 7.60 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்தது. நாட்டின் மொத்த வர்த்தகங்களின் ஏற்றுமதியில்  பொறியியல் பொருட்கள் நான்கில் ஒரு பங்கு வகிப்பதால், நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் மீட்சி அடைவதில் இது குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

2021 ஏப்ரல் மாதத்தில் ஒட்டு மொத்த ஏற்றுமதியின் வர்த்தகம் 30.63 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10.36 பில்லியன் அமெரிக்க டாலரை விட மூன்று மடங்கு அதிகமாகும். 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஏற்றுமதி 17.62 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. பெருந்தொற்றின் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தாக்கத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஏற்றுமதி வீழ்ச்சியை சந்தித்தது. சர்வதேச நிலவரத்தின்படி இந்தியாவின் வெளிநாடுகளுக்கான வர்த்தகம் வலுவான மீள் தன்மையை எடுத்துரைக்கிறது.

இந்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டில் நாட்டின் வர்த்தகம் 400 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

அந்நிய வர்த்தகக் கொள்கை உள்ளிட்ட முக்கிய வர்த்தக கொள்கைகளின் வாயிலாக நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், ஏற்றுமதி சமூகத்திற்கு பெரும் உதவிகரமாக இருப்பதாக பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் திரு தேசாய் குறிப்பிட்டார்.

நடப்பு நிதியாண்டின் வளர்ச்சி பற்றி நம்பிக்கை தெரிவித்த திரு தேசாய், பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் கடந்த சில வாரங்களாக அதிகரிக்கும் பாதிப்புகளால் ஐயம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“பொது முடக்கம் மற்றும் கட்டுப்பாடுகளால் பொருளாதார நடவடிக்கைகள் பாதிப்படையாத வகையில் மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதும், வர்த்தகங்கள் முழுவதும் பாதிப்பில் இருந்து தப்பவில்லை. எனவே ஏற்றுமதியாளர்களுக்கு போதிய ஆதரவை அரசு அளிப்பது மிகவும் முக்கியம்”, என்று தேசாய் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...