முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக ஆர்வலர்' செய்யார் கே.ஆர்.ராமசாமி எனும் டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் காலமானார்.








`சமூக ஆர்வலர்' செய்யார் கே.ஆர்.ராமசாமி எனும் டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் காலமானார். வயது 88. `கோட் போடாத வக்கீல்' என்றழைக்கப்பட்டவரின் மரணம் நீதித்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விதிமீறிய கட்டடங்கள், கட்டுப்பாடில்லாத மீன்பாடி வாகனங்கள், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, ஹெல்மெட் விவகாரம், அரசியல் கட்சிகளின் பேனர் என கையில் எடுத்த வழக்குகளின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டும்.

2004 ஆம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்றத்தையே தனது வீடாக பாவிக்கும் அளவுக்கு  வலம் வந்தவர். இவரது கதை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் திரைப்படமாகவும் வந்தது.

தனக்குப் பின்னால் பாதுகாவலராக வரும் பி.எஸ்.ஓ, சட்டைப் பையில் நீண்டிருக்கும் வழக்கு கட்டுகள் என எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவது அவரது வழக்கம். கடந்த ஓராண்டாக கொரோனா பெருந்தொற்று காரணமாக நீதிமன்றங்கள் முடங்கினாலும் ஆன்லைன் மூலமாக வழக்குகளை நடத்தி வந்த நிலையில், தியாகராய நகர் வீட்டில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி சுயநினைவின்றிக் கிடந்தவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  உதவியாளர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்ததையடுத்து, அவசரச் சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் தொற்று, கல்லீரல் பிரச்னை, சர்க்கரை அளவு அதிகரிப்பென பல உடல் உபாதைகளுக்கும்  சிறுநீரில் உள்ள யூரியா கிரியாட்டினும் 3,000 என்ற அளவில், மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையில்  உடல்நலம் தேறி வந்தார்.

இடையில்  ஒருமுறை மட்டும் அவரது மகள் பார்க்க வந்துள்ளார். அதுவும், `உங்கள் தந்தை சீரியஸாக இருக்கிறார். கையெழுத்துப் போட வாருங்கள்' என மருத்துவமனையில்  தகவல் தந்ததால் பார்க்க வந்துள்ளார்.

டிராஃபிக் ராமசாமி கடந்த இரண்டு வாரங்களாக வழக்கறிஞர் கணேசன் திரைப்பட இயக்குனர் ஆகாஷ் சுதாகர் உள்ளிட்ட சிலர் தான்  கவனித்து வந்துள்ளனர். இடையில் சற்று உடல்நலம் தேறவே வழக்குகளைப் பார்க்க வேண்டும். ஆபீஸ் போகலாம்' எனக் கூறியுள்ளார். ஆனால், அவரால் எழுந்து நடமாடக் கூட முடியவில்லை என்கின்றனர்  உதவியாளர்கள்.

இன்று காலை மே 4 ஆம் தேதி 9 மணியளவில் பால் அருந்தியுள்ளார். பிறகு 11 மணியளவில் அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. மிகவும் கவலைக்கிடமான சூழலில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் டிராஃபிக் ராமசாமி இரவு இறந்துவிட்டார்.

நண்பரும் அவரது வழக்கறிஞருமான `யானை' ராஜேந்திரனிடம் விசாரிக்கவே அவர் கூறியதாவது.......

"நீதிமன்றங்களுக்குவர் வருவதற்கு முன்பாக, பட்டா மாறுதல் உள்ளிட்ட சில பொதுப் பிரச்னைகளில் அதிகாரிகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தார். இதனால் அவருக்கு சில அதிகாரிகள் தொல்லை கொடுத்து வந்தனர். அப்போது அவரிடம், ` நீங்கள் அதிகாரிகளிடம் சண்டை போட வேண்டாம். நீதிமன்றத்தில் அவர்களை நிற்க வைத்துக் கேள்வி கேட்கலாம்' என்றதும் அதை சரியென ஏற்றுக் கொண்டார்.

இதன்பிறகு தொடர்ந்து அவருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் 2007 ஆம் ஆண்டு போலீஸ் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தோம். சென்னையில் வரையறையில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில் நான் ஆஜரானானேன். அதேபோல், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்தும் விவகாரத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இன்று பாண்டி பஜார் சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர் தொடர்ந்த அந்த வழக்குதான். தனக்குத் தவறு என்று தெரியவந்தால் அதைத் தட்டிக் கேட்க அவர் தயங்கியதில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் நாகேஸ்வர ராவ், பாப்டே ஆகியோர் கையாண்ட ஒரு வழக்கில், ` நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்' என டிராபிஃக் ராமசாமி கூறினார். அப்போது நீதியரசர்கள், ` உடல்நிலையை பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். உண்ணாவிரதம் எல்லாம் வேண்டாம்' என அக்கறை காட்டினர்.

உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த பல வழக்குகளை நீதியரசர்கள் பாராட்டியுள்ளனர். இதில், அவர் தொடர்ந்த சில வழக்குகள் டிஸ்மிஸ் ஆகிவிடும். அதனால் சோர்ந்து போகாமல் அடுத்த வழக்கைக் கையில் எடுப்பார். அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர் கலாசாரத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றமும் சென்றோம். இந்த வழக்கில் ரஞ்சன் கோகாய் சிறப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.

சமூகத்தின் நன்மைக்காகவே பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கதீட்ரல் சாலையில் அ.தி.மு.கவினர் வைத்த பேனரை நேரடியாகவே சென்று கிழித்தார். இதனால் வரக் கூடிய பிரச்னைகளைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவரது வழக்குகளில் அவரே வாதாடி வந்தார்.

`தமிழில் வாதாடுங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வாதாடுங்கள்' என்றேன். மனுதாரராக இருப்பதால் தனது வழக்குகளுக்கு அவரே ஆஜராவதில் ஆர்வம் காட்டினார். அவர் மீது பல்வேறு அவதூறுத் தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது. அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அவர் தனது குடும்பத்தினரிடம் இருந்து விலகி தனியே வசித்து வந்தார்.

இந்த வயதிலும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். தெருவில் எங்காவது பேனர் வைக்கப்பட்டிருந்தால் உடனே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, `உடனே அகற்றுங்கள். இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என எச்சரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

உடனே அந்த இடத்தில் இருந்து பேனர் அகற்றப்பட்டுவிடும். இதுவரையில் ஏராளமான பொதுநல வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்புகூட ஓர் அரசியல் கட்சிக்கு எதிராக வழக்கை நடத்துவது தொடர்பாக விவாதித்தோம். `இந்தநேரத்தில் வழக்கு தொடர்ந்தால் குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக வழக்கு தொடர்கிறோம் எனப் பேசுவார்கள். அதனால் தேர்தல் முடிந்ததும் வழக்கை தாக்கல் செய்வோம்' என்றார். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது" என்றார் வேதனையுடன். இன்று இரவு 7.45 அளவில் டிராபிக் ராமசாமி  உயிர் பிரிந்தது அதிகாரப்பூர்வமான செய்தி உறவுகள் ஏதும் உடன் இல்லை எல்லோரும் இருந்தும் அனாதையாக பொதுமக்கள் அஞ்சலிக்காக அய்யாவின் பூதவுடலை கொண்டுபோக மறுக்கிறார்கள்  ஐயாவின் சொந்தங்கள் உயிர் பிரிந்து பிணவறையில் தவிக்கிறது ஐயாவின் பூதவுடல் போராளிக்கு இந்த நிலை என்றால் சாமானியனுக்கு....? நான் மிகப்பெரிய ஒரு பலத்தை இழந்து விட்டேன் என ஆகாஷ் சுதாகர் திரைப்படஇயக்குநர் தகவல்.. பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பிலும் ஊடக உரிமைக் குர்ல் சார்பில் அரசுக்கு கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.