முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக ஆர்வலர்' செய்யார் கே.ஆர்.ராமசாமி எனும் டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் காலமானார்.








`சமூக ஆர்வலர்' செய்யார் கே.ஆர்.ராமசாமி எனும் டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் காலமானார். வயது 88. `கோட் போடாத வக்கீல்' என்றழைக்கப்பட்டவரின் மரணம் நீதித்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விதிமீறிய கட்டடங்கள், கட்டுப்பாடில்லாத மீன்பாடி வாகனங்கள், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, ஹெல்மெட் விவகாரம், அரசியல் கட்சிகளின் பேனர் என கையில் எடுத்த வழக்குகளின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டும்.

2004 ஆம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்றத்தையே தனது வீடாக பாவிக்கும் அளவுக்கு  வலம் வந்தவர். இவரது கதை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் திரைப்படமாகவும் வந்தது.

தனக்குப் பின்னால் பாதுகாவலராக வரும் பி.எஸ்.ஓ, சட்டைப் பையில் நீண்டிருக்கும் வழக்கு கட்டுகள் என எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவது அவரது வழக்கம். கடந்த ஓராண்டாக கொரோனா பெருந்தொற்று காரணமாக நீதிமன்றங்கள் முடங்கினாலும் ஆன்லைன் மூலமாக வழக்குகளை நடத்தி வந்த நிலையில், தியாகராய நகர் வீட்டில் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி சுயநினைவின்றிக் கிடந்தவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  உதவியாளர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்ததையடுத்து, அவசரச் சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் தொற்று, கல்லீரல் பிரச்னை, சர்க்கரை அளவு அதிகரிப்பென பல உடல் உபாதைகளுக்கும்  சிறுநீரில் உள்ள யூரியா கிரியாட்டினும் 3,000 என்ற அளவில், மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சையில்  உடல்நலம் தேறி வந்தார்.

இடையில்  ஒருமுறை மட்டும் அவரது மகள் பார்க்க வந்துள்ளார். அதுவும், `உங்கள் தந்தை சீரியஸாக இருக்கிறார். கையெழுத்துப் போட வாருங்கள்' என மருத்துவமனையில்  தகவல் தந்ததால் பார்க்க வந்துள்ளார்.

டிராஃபிக் ராமசாமி கடந்த இரண்டு வாரங்களாக வழக்கறிஞர் கணேசன் திரைப்பட இயக்குனர் ஆகாஷ் சுதாகர் உள்ளிட்ட சிலர் தான்  கவனித்து வந்துள்ளனர். இடையில் சற்று உடல்நலம் தேறவே வழக்குகளைப் பார்க்க வேண்டும். ஆபீஸ் போகலாம்' எனக் கூறியுள்ளார். ஆனால், அவரால் எழுந்து நடமாடக் கூட முடியவில்லை என்கின்றனர்  உதவியாளர்கள்.

இன்று காலை மே 4 ஆம் தேதி 9 மணியளவில் பால் அருந்தியுள்ளார். பிறகு 11 மணியளவில் அவரது உடல்நிலையில் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது. மிகவும் கவலைக்கிடமான சூழலில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் டிராஃபிக் ராமசாமி இரவு இறந்துவிட்டார்.

நண்பரும் அவரது வழக்கறிஞருமான `யானை' ராஜேந்திரனிடம் விசாரிக்கவே அவர் கூறியதாவது.......

"நீதிமன்றங்களுக்குவர் வருவதற்கு முன்பாக, பட்டா மாறுதல் உள்ளிட்ட சில பொதுப் பிரச்னைகளில் அதிகாரிகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்தார். இதனால் அவருக்கு சில அதிகாரிகள் தொல்லை கொடுத்து வந்தனர். அப்போது அவரிடம், ` நீங்கள் அதிகாரிகளிடம் சண்டை போட வேண்டாம். நீதிமன்றத்தில் அவர்களை நிற்க வைத்துக் கேள்வி கேட்கலாம்' என்றதும் அதை சரியென ஏற்றுக் கொண்டார்.

இதன்பிறகு தொடர்ந்து அவருக்கு அச்சுறுத்தல் இருந்ததால் 2007 ஆம் ஆண்டு போலீஸ் பாதுகாப்பு வாங்கிக் கொடுத்தோம். சென்னையில் வரையறையில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கில் நான் ஆஜரானானேன். அதேபோல், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்தும் விவகாரத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இன்று பாண்டி பஜார் சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவர் தொடர்ந்த அந்த வழக்குதான். தனக்குத் தவறு என்று தெரியவந்தால் அதைத் தட்டிக் கேட்க அவர் தயங்கியதில்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், `` உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் நாகேஸ்வர ராவ், பாப்டே ஆகியோர் கையாண்ட ஒரு வழக்கில், ` நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்' என டிராபிஃக் ராமசாமி கூறினார். அப்போது நீதியரசர்கள், ` உடல்நிலையை பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். உண்ணாவிரதம் எல்லாம் வேண்டாம்' என அக்கறை காட்டினர்.

உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த பல வழக்குகளை நீதியரசர்கள் பாராட்டியுள்ளனர். இதில், அவர் தொடர்ந்த சில வழக்குகள் டிஸ்மிஸ் ஆகிவிடும். அதனால் சோர்ந்து போகாமல் அடுத்த வழக்கைக் கையில் எடுப்பார். அரசியல் கட்சியினர் வைக்கும் பேனர் கலாசாரத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றமும் சென்றோம். இந்த வழக்கில் ரஞ்சன் கோகாய் சிறப்பான உத்தரவைப் பிறப்பித்தார்.

சமூகத்தின் நன்மைக்காகவே பல்வேறு வழக்குகளைத் தொடர்ந்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கதீட்ரல் சாலையில் அ.தி.மு.கவினர் வைத்த பேனரை நேரடியாகவே சென்று கிழித்தார். இதனால் வரக் கூடிய பிரச்னைகளைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை. அவரது வழக்குகளில் அவரே வாதாடி வந்தார்.

`தமிழில் வாதாடுங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் வாதாடுங்கள்' என்றேன். மனுதாரராக இருப்பதால் தனது வழக்குகளுக்கு அவரே ஆஜராவதில் ஆர்வம் காட்டினார். அவர் மீது பல்வேறு அவதூறுத் தகவல்களும் பரப்பப்பட்டு வந்தது. அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அவர் தனது குடும்பத்தினரிடம் இருந்து விலகி தனியே வசித்து வந்தார்.

இந்த வயதிலும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். தெருவில் எங்காவது பேனர் வைக்கப்பட்டிருந்தால் உடனே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, `உடனே அகற்றுங்கள். இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்வேன் என எச்சரிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

உடனே அந்த இடத்தில் இருந்து பேனர் அகற்றப்பட்டுவிடும். இதுவரையில் ஏராளமான பொதுநல வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்புகூட ஓர் அரசியல் கட்சிக்கு எதிராக வழக்கை நடத்துவது தொடர்பாக விவாதித்தோம். `இந்தநேரத்தில் வழக்கு தொடர்ந்தால் குறிப்பிட்ட கட்சிக்கு சாதகமாக வழக்கு தொடர்கிறோம் எனப் பேசுவார்கள். அதனால் தேர்தல் முடிந்ததும் வழக்கை தாக்கல் செய்வோம்' என்றார். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது" என்றார் வேதனையுடன். இன்று இரவு 7.45 அளவில் டிராபிக் ராமசாமி  உயிர் பிரிந்தது அதிகாரப்பூர்வமான செய்தி உறவுகள் ஏதும் உடன் இல்லை எல்லோரும் இருந்தும் அனாதையாக பொதுமக்கள் அஞ்சலிக்காக அய்யாவின் பூதவுடலை கொண்டுபோக மறுக்கிறார்கள்  ஐயாவின் சொந்தங்கள் உயிர் பிரிந்து பிணவறையில் தவிக்கிறது ஐயாவின் பூதவுடல் போராளிக்கு இந்த நிலை என்றால் சாமானியனுக்கு....? நான் மிகப்பெரிய ஒரு பலத்தை இழந்து விட்டேன் என ஆகாஷ் சுதாகர் திரைப்படஇயக்குநர் தகவல்.. பத்து ரூபாய் இயக்கத்தின் சார்பிலும் ஊடக உரிமைக் குர்ல் சார்பில் அரசுக்கு கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...