முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் நாளை பதவியேற்கவுள்ள திமுக புதிய அமைச்சரவை



தமிழகத்தில் நாளை பதவியேற்கவுள்ள





































திமுக அமைச்சரவைப் பட்டியல்                 எட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு  வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தமிழக முதலமைச்சராக நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்கிறார். கொரோனா பரவல் காரணமாக நாளை காலை ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் எளிமையாக  பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

முதல்வராக பதவி ஏற்கும் திமுக தலைவருடன் 34 பேர் தமிழக அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர். அவர்களின் துறைகளும் அறிவிக்கப்படப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் முக்குலத்தோருக்கு 4  கவுண்டருக்கு 4 வன்னியர் மற்றும் நாயுடு தலா 3 யாதவர் மற்றும் இஸ்லாமியர் தலா 2 என பல சமூகத்திற்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

மண்டல வாரியாக பிரதிநிதித்துவம்

இதில் மண்டல வாரியாக கிட்டதட்ட அனைத்து மண்டலங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்தே உருவாக்கப்பட்டுள்ளது.                        தமிழக அமைச்சரவையில் வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 பேர், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த 8 பேர், தெற்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 பேர், மத்திய மண்டலத்தைச் சேர்ந்த 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை கோயமுத்தூர் மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. இதனால் அமைச்சரவையில் யாரும் இடம் பெறவில்லை.

காவிரி பாயும் டெல்டா மாவட்டங்களில்

தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 18 தொகுதிகளில் திமுக 15 தொகுதிகள் வென்றிருந்தது. இருப்பினும், இந்த பகுதியிலிருந்தும் மேலும் தேனி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் யாருக்கும் வாய்ப்புத் தரப்படவில்லை.

இந்த அமைச்சரவையில், கடந்த முறை திமுக அரசில் அமைச்சர்களாக இருந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 15 புதுமுகங்களுக்கும் இந்த முறை அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

திமுக அமைச்சரவை சமூக ரீதியாக  பட்டியல் திரு

மு.க.ஸ்டாலின் , முதல்வர் 

கொங்கு வேளாள கவுண்டர்கள் :(04)

1.சக்கரபாணி , உணவுத்துறை

2.சு.முத்துசாமி, வீட்டு வசதித்துறை

3.வெள்ளாக்கோவில் சாமிநாதன் , செய்தித்துறை

4.செந்தில்பாலாஜி , மின்சாரத்துறை முக்குலத்தோர்கள் : (04)

1.ஐ.பெரியசாமி , கூட்டுறவுத்துறை

2.பி.மூர்த்தி , பத்திரப்பதிவு துறை

3.மகேஷ் பொய்யா மொழி , பள்ளிக்கல்வி துறை

4) தங்கம் தென்னரசு , தொழில்துறை

வன்னியர்கள் : (03)

1.துரைமுருகன் , நீர்வளத்துறை

2.பன்னீர்செல்வம் , வேளாண்மை துறை

3.சிவசங்கர் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

நாயுடு : (03)

1.வேலு , பொதுப்பணித்துறை

2.காந்தி , கைத்தறித்துறை 

3.சேகர்பாபு , அறநிலையத்துறை

யாதவர்கள் : (02)

1.இராஜகண்ணப்பன் , போக்குவரத்து துறை

2.பெரியகருப்பன் , ஊரக வளர்ச்சி துறை

இஸ்லாமியர்கள்: (02)

1.நாசர் , பால்வளத்துறை

2.மஸ்தான் , சிறுபான்மையினர் துறை

கிறித்தவ நாடார்கள் : (02)

1.கீதா ஜீவன் , சமுக நலத்துறை

2.மனோ தங்கராஜ் , தகவல் தொழில்நுட்ப துறை

ரெட்டியார்கள் : (02)

1.நேரு , நகர்புற வளர்ச்சி துறை

2.இராமச்சந்திரன் , வருவாய்த்துறை

இந்து நாடார் : (01)

1.அனிதா ராதாகிருஷ்ணன் , மீன்வளத்துறை

துளுவ வேளாளர் : (01)

1.பொன்முடி , உயர்கல்வித்துறை

நகரத்தார் : (01)

1.இரகுபதி , சட்டத்துறை

செங்குந்தர் : (01)

1.அன்பரசன் , ஊரக தொழிற்துறை

படுகர் : (01)

1.இராமச்சந்திரன் , வனத்துறை

சைவ வேளாளர் : (01)

1.தியாகராஜன் , நிதித்துறை

முத்தரையர் : (01)

1.மெய்யநாதன் , சுற்றுச்சூழல் துறை

மீனவர் : (01)

1.சுப்பிரமணியன் , சுகாதாரத்துறை

தேவேந்திர குல வேளாளர் : (01)

1.கயல்விழி செல்வராஜ் , ஆதிதிராவிடர் நலத்துறை

ஆதிதிராவிடர் : (01)

1.கணேசன் , தொழிற்துறை

அருந்ததியர் : (01)

1.மதிவேந்தன் , சுற்றுலாத்துறை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...