தமிழகத்தில் ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
-தமிழக அரசு உத்தரவு. சிபிசிஐடி டிஜிபியாக ஷகீல் அக்தர், உள்நாட்டு பாதுகாப்பு உளவுத் துறை ஐஜியாக ஈஸ்வரமூர்த்தி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பி.கந்தசாமி ஆகியோர் நியமனம்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின், ஒன்பது ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
காவலர் பயிற்சி மைய கல்லூரியின் டிஜிபியான ஷகீல் அக்தர் ஐபிஎஸ் சிபிசிஐடி டிஜிபி யாகவும்.
நிர்வாகப்பிரிவில் சிறப்பு டிஜிபியான கந்தசாமி, ஊழல்கள் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாகவும்
உளவுத் துறை ஐஜியான ஈஸ்வர மூர்த்தி, உள்நாட்டுப் பாதுகாப்பு உளவுத் துறை ஐஜியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அந்தஸ்து பெற்றார் ஈஸ்வரமூர்த்தி. சிபிஐ மற்றும் உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற ஈஸ்வரமூர்த்தி. உண்மையான தகவல்களை மட்டுமே தருபவர் என்பதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் அதே துறையில் உள்நாட்டு பாதுகாப்பு உளவுத்துறை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
உளவுத்துறை டிஜிபியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு சிறப்பு அதிரடிப் படை கூடுதல் டிஜிபியான எம்.ரவி, சென்னை நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி எஸ்.பி சரவணன் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தன் உளவுத்துறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மயிலாப்பூர் இணை ஆணையர் ஆர். திருநாவுக்கரவு சிஐடி 1 பாதுகாப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். சாமிநாதன் ஐபிஎஸ் சிஐடி 2 பாதுகாப்பு பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்