முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்?' டெல்லி அறிவிப்பு விரைவில் வரும்





தமிழக சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 ல் வென்றது. தற்போது சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளதையடுத்து, `சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்?'







என்பதை முடிவு செய்வதற்காக, கடந்த வாரம் சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் நடைபெற்றது. தற்போது எம்.எல்.ஏக்களில் 13 பேர் புதிய முகம் `மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாகத் தேர்வான சீனியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்ற வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில்.

மூத்த எம்.எல்.ஏக்களான பிரின்ஸ், விஜயதரணி, முனிரத்தினம் ஆகியோர் இடையே அப்போது போட்டி நிலவியது. மேலும் கிள்ளியூர் ராஜேஷ், செல்வப் பெருந்தகை, மயிலாடுதுறை ராஜ்குமார் தற்போது தங்கள் வழியில் டில்லியில் முயற்சி செய்து வருகின்றனர். போட்டி அதிகமாக இருந்ததால், சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தலைவர் பதவிக்கு பிரின்ஸ், விஜயதரணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த 12 ஆம் தேதி கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரில்  சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பி.எஸ்.அப்பாவுவை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசினர். அப்போது காங்கிரஸ் சார்பாக பேசுவதற்கு பிரின்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் விஜயதரணியும் கையை உயர்த்தியதால் அப்போது இவர்கள் இருவர் தலைவர் பதவிக்கு முயற்சி செய்வது வெளிப்பட்டது..  சத்தியமூர்த்தி பவனில் மே 7 ஆம் தேதி முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் சோனியாகாந்திக்கு வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு நிகரான பதவி  என்பதனால் கடுமையான போட்டி நிலவுவதால்

காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் தேசிய தலைமையின் உத்தரவின் பேரில், புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக நேற்று மே 19 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்ததையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் எம்.எல்.ஏ.க்களின் கருத்து அறியும் கூட்டம் நடைபெற்றதில், தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவிக்கு விஜயதாரணி, எஸ்.ஆர்.முனிரத்தினம், ராஜேஷ்குமார், பிரின்ஸ், செல்வப்பெருந்தகை  இடையே மீண்டும் கடுமையான போட்டி நிலவியதனால், கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான படிவம் எம்.எல்.ஏ.க்களிடம் அளிக்கப்பட்டு அவர்கள் யாரை சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்ய விரும்புகிறார்களோ அவருடைய பெயரை எழுதித் தரும்படி கோரப்பட்டது. இதையடுத்து, சட்டமன்றக் குழுத் தலைவர் யார் என்பதை பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பதாக இருந்தது. ஆனால், அறிவிக்கப்படவில்லை. எம்.எல்.ஏ.க்கள் எழுதிக் கொடுத்ததை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியாவிடம் கொடுத்து அதன் பிறகே சட்டமன்றக் குழு தலைவர் யார் என்று அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இப்படி, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இழுபறியில் முடிந்தது. ஆனால், இறுதியாக ஒன்று மட்டும் உறுதியானது, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் யார் இருந்தாலும், சோனியா காந்தி தான் அறிவிப்பார் என்பதால்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில்  தொண்டர்களின் விருப்பம் என்னவாக இருக்கிறது. சட்டமன்றக் குழு தலைவராக யாரை அறிவிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தால்“இப்போது அமைந்துள்ள சட்டப் பேரவை சாதாரணமான சட்டப் பேரவை அல்ல. 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ள சட்டப் பேரவை. பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்க காத்திருக்கிறார்கள். திமுகவில் அத்தனை பேரும் நன்றாகப் பேசுபவர்கள். எழுவர் விடுதலை உள்ளிட்ட விஷயங்களில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதனால், அவற்றை எல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு வாதத் திறமை உள்ள ஒருவர் தான் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி பார்த்தால், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதற்கான வாதத் திறமை உள்ளவர்கள் என்றால் அது இப்போதுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் விஜயதாரணி தான். ஆனால், மற்றவர்களும் போட்டியிடுகிறார்கள்.

இதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் குமாருக்கு வாய்ப்பு உள்ளது என்ற தொனியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஊடகங்களில் தெரிவித்தார். அதற்கு அவரிடம் பணம் வாங்கிவிட்டீர்களா என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விமர்சனங்களும் வைக்கப்பட்டது.

விஜயதாரணி, காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியாவார். இவர் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்வாகியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து தமாகா மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்றபோது, காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வாடகை கொடுத்தவர் விஜயதாரணி. அன்று காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திக்கு தனது காரைக் கொடுத்து காங்கிரஸ் கட்சியை வளர்க்க உதவியவர். அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக செயல்படாதவர். அவர் மீது காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்கு அதிருப்தி இருக்கலாம்.

விஜயதாரணி சரியாக செயல்படாதவர் என்றால், மூன்றாவது அவர் பல எதிர்ப்புகளை மீறி முறையாக அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது. கட்சியின் விசுவாசி என்ற வகையில் விஜயதாரணி தான் பொருத்தமானவர்” என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.

காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு போட்டியில் இருக்கும் மற்றவர்களைப் பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, எஸ்.ஆர். முனிரத்தினம் பெரிய தொழிலதிபர், இரண்டு முறை தமாகா சார்பில் எம்.எல்.ஏ-வாகவும் இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார். ஆனால், சடமன்றத்தில் திறமையாக வாதங்களை எடுத்து வைக்க முடியுமா என்பது சந்தேகம். அதே போல, அடுத்ததாக போட்டியில் உள்ள மற்றொருவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் குமார். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் பொன்னப் நாடாரின் மகள் வழிப் பேரன். இரண்டாவது முறையாக காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாகியுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள 18 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதனால் நாடார் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமாருக்கு சட்டமன்றக் குழு வழங்கப்படும். அப்போதுதான், நாடார் சமூகத்தினரை திருப்திப்படுத்தும் படியாக இருக்கும் என்ற பார்வையில் தான் அந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் கருத்துக்கள் தெரிவித்தார். ஆனால், இவர் சட்டமன்றத்தில் விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்துப் பேசுவாரா என்றால் அது பின்னர் தான் தெரியும்.

அதே போல, சட்டமன்றக்குழு தலைவர் பதவிக்கான போட்டியில் செல்வப் பெருந்தகையும் இடம்பெற்றுள்ளார். நல்ல பேச்சாளர். சட்டமன்றத்தில், காங்கிரஸ் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு சரியாக பதிலடி கொடுப்பார். எதற்கும் அஞ்சாதவர். காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ளார். அவர் இதற்கு முன்பு 2006-2011 சட்டப் பேரவையில் விசிக சார்பில் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் முதல்முறை எம்.எல்.ஏ என்பதைத் தாண்டி வேறு எதுவும் அவருக்கு வாய்ப்பு மறுப்பதற்கான கரரணங்கள் இல்லை. ஒரு மூத்த தலைவரின் ஆதரவாளர். ஆகவே இவரும் தலைவராக வாய்ப்புண்டு

இதையெல்லாம் தாண்டி, ஒரு மாநிலத்தில் 18 எம்.எல்.ஏக்களில் சட்டமன்றக் குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கே இவ்வளவு போட்டிகள் இருக்கிறது என்றால், தேசத்தைக் காக்க இந்திய அளவில் எவ்வளவு போட்டியிருக்கும் எனும்போது காங்கிரஸ் எப்படி மக்கள் நம்பிக்கையைப் பெறும். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை கட்சியில் இப்படி அதிகாரத்தைக் குவித்து வைத்திருக்கக் கூடாது. மாநில தலைவரிடம் அதிகாரத்தை கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இது போன்ற போட்டிகள் இருக்காது” என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பலரும் கருதும் நிலையில்.   தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்று விரைவில் மேலிட அறிவிப்பு வரும் அப்போது வென்றவர் ஒரு கோஷ்டி போராடியும் பதவி பெறமுடியாதவர் மறு கோஷ்டி டில்லியின் அரசியல் என்பது காலகாலமாக அதிகார மையம் ஆக  இதுவே காரணம். தற்போதய போட்டியில் கிள்ளியூர் ராஜேஷ் முந்தும் நிலை அது எப்போதும் மாறலாம். முடிவு டில்லியின் கைகளில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்