தமிழக சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 18 ல் வென்றது. தற்போது சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ளதையடுத்து, `சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்?'
என்பதை முடிவு செய்வதற்காக, கடந்த வாரம் சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் நடைபெற்றது. தற்போது எம்.எல்.ஏக்களில் 13 பேர் புதிய முகம் `மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாகத் தேர்வான சீனியர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்ற வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில்.
மூத்த எம்.எல்.ஏக்களான பிரின்ஸ், விஜயதரணி, முனிரத்தினம் ஆகியோர் இடையே அப்போது போட்டி நிலவியது. மேலும் கிள்ளியூர் ராஜேஷ், செல்வப் பெருந்தகை, மயிலாடுதுறை ராஜ்குமார் தற்போது தங்கள் வழியில் டில்லியில் முயற்சி செய்து வருகின்றனர். போட்டி அதிகமாக இருந்ததால், சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. தலைவர் பதவிக்கு பிரின்ஸ், விஜயதரணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த 12 ஆம் தேதி கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரில் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட பி.எஸ்.அப்பாவுவை, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசினர். அப்போது காங்கிரஸ் சார்பாக பேசுவதற்கு பிரின்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நேரத்தில் விஜயதரணியும் கையை உயர்த்தியதால் அப்போது இவர்கள் இருவர் தலைவர் பதவிக்கு முயற்சி செய்வது வெளிப்பட்டது.. சத்தியமூர்த்தி பவனில் மே 7 ஆம் தேதி முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் நிர்வாகிகளை நியமிப்பதற்கான அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் சோனியாகாந்திக்கு வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு நிகரான பதவி என்பதனால் கடுமையான போட்டி நிலவுவதால்
காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் தேசிய தலைமையின் உத்தரவின் பேரில், புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக நேற்று மே 19 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்ததையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் எம்.எல்.ஏ.க்களின் கருத்து அறியும் கூட்டம் நடைபெற்றதில், தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், கே.வி.தங்கபாலு, கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் பதவிக்கு விஜயதாரணி, எஸ்.ஆர்.முனிரத்தினம், ராஜேஷ்குமார், பிரின்ஸ், செல்வப்பெருந்தகை இடையே மீண்டும் கடுமையான போட்டி நிலவியதனால், கூட்டத்தின் முடிவில், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவரை தேர்வு செய்வதற்கான படிவம் எம்.எல்.ஏ.க்களிடம் அளிக்கப்பட்டு அவர்கள் யாரை சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்ய விரும்புகிறார்களோ அவருடைய பெயரை எழுதித் தரும்படி கோரப்பட்டது. இதையடுத்து, சட்டமன்றக் குழுத் தலைவர் யார் என்பதை பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பதாக இருந்தது. ஆனால், அறிவிக்கப்படவில்லை. எம்.எல்.ஏ.க்கள் எழுதிக் கொடுத்ததை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சோனியாவிடம் கொடுத்து அதன் பிறகே சட்டமன்றக் குழு தலைவர் யார் என்று அறிவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இப்படி, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் இழுபறியில் முடிந்தது. ஆனால், இறுதியாக ஒன்று மட்டும் உறுதியானது, காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் யார் இருந்தாலும், சோனியா காந்தி தான் அறிவிப்பார் என்பதால்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களின் விருப்பம் என்னவாக இருக்கிறது. சட்டமன்றக் குழு தலைவராக யாரை அறிவிக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது என காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தால்“இப்போது அமைந்துள்ள சட்டப் பேரவை சாதாரணமான சட்டப் பேரவை அல்ல. 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ள சட்டப் பேரவை. பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சிக்க காத்திருக்கிறார்கள். திமுகவில் அத்தனை பேரும் நன்றாகப் பேசுபவர்கள். எழுவர் விடுதலை உள்ளிட்ட விஷயங்களில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதனால், அவற்றை எல்லாம் எதிர்கொள்ளும் அளவுக்கு வாதத் திறமை உள்ள ஒருவர் தான் சட்டமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி பார்த்தால், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பதற்கான வாதத் திறமை உள்ளவர்கள் என்றால் அது இப்போதுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் விஜயதாரணி தான். ஆனால், மற்றவர்களும் போட்டியிடுகிறார்கள்.
இதில் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் குமாருக்கு வாய்ப்பு உள்ளது என்ற தொனியில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஊடகங்களில் தெரிவித்தார். அதற்கு அவரிடம் பணம் வாங்கிவிட்டீர்களா என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விமர்சனங்களும் வைக்கப்பட்டது.
விஜயதாரணி, காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தியாவார். இவர் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக தேர்வாகியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து தமாகா மூப்பனார் தலைமையில் பிரிந்து சென்றபோது, காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வாடகை கொடுத்தவர் விஜயதாரணி. அன்று காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்திக்கு தனது காரைக் கொடுத்து காங்கிரஸ் கட்சியை வளர்க்க உதவியவர். அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சிக்கு விரோதமாக செயல்படாதவர். அவர் மீது காங்கிரஸ் தொண்டர்கள் சிலருக்கு அதிருப்தி இருக்கலாம்.
விஜயதாரணி சரியாக செயல்படாதவர் என்றால், மூன்றாவது அவர் பல எதிர்ப்புகளை மீறி முறையாக அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது. கட்சியின் விசுவாசி என்ற வகையில் விஜயதாரணி தான் பொருத்தமானவர்” என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு போட்டியில் இருக்கும் மற்றவர்களைப் பற்றி தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, எஸ்.ஆர். முனிரத்தினம் பெரிய தொழிலதிபர், இரண்டு முறை தமாகா சார்பில் எம்.எல்.ஏ-வாகவும் இரண்டு முறை காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார். ஆனால், சடமன்றத்தில் திறமையாக வாதங்களை எடுத்து வைக்க முடியுமா என்பது சந்தேகம். அதே போல, அடுத்ததாக போட்டியில் உள்ள மற்றொருவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த ராஜேஷ் குமார். இவர் மூத்த காங்கிரஸ் தலைவர் பொன்னப் நாடாரின் மகள் வழிப் பேரன். இரண்டாவது முறையாக காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாகியுள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள 18 எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதனால் நாடார் சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமாருக்கு சட்டமன்றக் குழு வழங்கப்படும். அப்போதுதான், நாடார் சமூகத்தினரை திருப்திப்படுத்தும் படியாக இருக்கும் என்ற பார்வையில் தான் அந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் கருத்துக்கள் தெரிவித்தார். ஆனால், இவர் சட்டமன்றத்தில் விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்துப் பேசுவாரா என்றால் அது பின்னர் தான் தெரியும்.
அதே போல, சட்டமன்றக்குழு தலைவர் பதவிக்கான போட்டியில் செல்வப் பெருந்தகையும் இடம்பெற்றுள்ளார். நல்ல பேச்சாளர். சட்டமன்றத்தில், காங்கிரஸ் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு சரியாக பதிலடி கொடுப்பார். எதற்கும் அஞ்சாதவர். காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ளார். அவர் இதற்கு முன்பு 2006-2011 சட்டப் பேரவையில் விசிக சார்பில் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் முதல்முறை எம்.எல்.ஏ என்பதைத் தாண்டி வேறு எதுவும் அவருக்கு வாய்ப்பு மறுப்பதற்கான கரரணங்கள் இல்லை. ஒரு மூத்த தலைவரின் ஆதரவாளர். ஆகவே இவரும் தலைவராக வாய்ப்புண்டு
இதையெல்லாம் தாண்டி, ஒரு மாநிலத்தில் 18 எம்.எல்.ஏக்களில் சட்டமன்றக் குழுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கே இவ்வளவு போட்டிகள் இருக்கிறது என்றால், தேசத்தைக் காக்க இந்திய அளவில் எவ்வளவு போட்டியிருக்கும் எனும்போது காங்கிரஸ் எப்படி மக்கள் நம்பிக்கையைப் பெறும். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை கட்சியில் இப்படி அதிகாரத்தைக் குவித்து வைத்திருக்கக் கூடாது. மாநில தலைவரிடம் அதிகாரத்தை கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இது போன்ற போட்டிகள் இருக்காது” என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பலரும் கருதும் நிலையில். தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார் என்று விரைவில் மேலிட அறிவிப்பு வரும் அப்போது வென்றவர் ஒரு கோஷ்டி போராடியும் பதவி பெறமுடியாதவர் மறு கோஷ்டி டில்லியின் அரசியல் என்பது காலகாலமாக அதிகார மையம் ஆக இதுவே காரணம். தற்போதய போட்டியில் கிள்ளியூர் ராஜேஷ் முந்தும் நிலை அது எப்போதும் மாறலாம். முடிவு டில்லியின் கைகளில்.
கருத்துகள்