முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உச்சநீதிமன்றத்தின் மின்னணு-குழுவின் இலவச ‘‘மின்னணு-நீதிமன்றங்கள் சேவை கைபேசி செயலி’’-க்கான கையேடு

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இலவச ‘‘மின்னணு-நீதிமன்றங்கள் சேவை கைபேசி செயலி’’-க்கான கையேட்டை






தமிழ் உட்பட 14 மொழிகளில் வெளியிட்டுள்ளது உச்சநீதிமன்றத்தின் மின்னணு-குழு

மக்கள் மைய சேவைக்கு, இலவச ‘‘மின்னணு-நீதிமன்றங்கள் சேவை கைபேசி செயலி’’-க்கான கையேட்டை தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், காசி, மலையாளம், மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய 14 மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் மின்னணுக் குழு வெளியிட்டுள்ளது.

வழக்குதொடுப்பவர்கள்,  மக்கள், வழக்கறிஞர்கள்,  சட்ட நிறுவனங்கள், காவல்துறை, அரசு நிறுவனங்கள், வழக்கு தொடுக்கும் இதர நிறுவனங்கள் நலனுக்காக  உச்சநீதிமன்றத்தின் மின்னணு குழுவால்,  ஏற்கனவே வெளியிடப்பட்ட ‘‘மின்னணு-நீதிமன்றங்கள் சேவை கைபேசி செயலி’’ இதுவரை 57 லட்சம் பதிவிறக்கங்களை கடந்துள்ளது. 

இந்த கைபேசி செயலி மற்றும் அதன் கையேட்டை ஆங்கிலம் மற்றும் மாநில  மொழிகளில்  உச்சநீதிமன்றத்தின் மின்னணு-குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://ecommitteesci.gov.in/service/ecourts-services-mobile-application/ - லிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.

இந்த கையேடு பற்றி விளக்கியுள்ள, உச்சநீதிமன்ற நீதிபதியும், மின்னணு-குழுவின் தலைவருமான டாக்டர் நீதிபதி தனன்ஜெயா ஒய் சந்திராசூட், இந்த மக்கள் மைய இலவச கைபேசி செயலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதன் பயன்பாட்டை  சுட்டிக்காட்டியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்,  ‘‘ சட்டத்துறையில் டிஜிட்டல் சீர்திருத்தங்களை அறிமுகம் செய்வதில் உச்சநீதிமன்றத்தின் மின்னணு-குழு முன்னணியில் உள்ளது. கடந்த ஓராண்டில்,   ஊரடங்கு மற்றும் மக்கள் சுகாதார நலனை முன்னிட்டு, அலுவலகங்கள், நீதிமன்றங்கள் மூடப்பட்டதன் காரணமாக,  வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் வழக்கு தொடுப்பவர்கள் ஆகியோரை, இந்த கொரோனா ஹைடெக் தொழில்நுட்பத்துக்கு மாற வைத்துள்ளது.

தொலை தூரத்தில் இருந்து பணியாற்றுவது, டிஜிட்டல் பணியிடங்கள் மற்றும் மின்னணு வழக்கு  மேலாண்மை ஆகியவை ஒருங்கிணைந்து சட்டத் தொழில் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை காட்டியுள்ளது. இடைக்கால நடவடிக்கையாக மட்டும் இல்லாமால், சட்ட அமைப்பை அதிக திறம்படவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும், அணுகக் கூடியதாகவும், சுற்றுச்சூழல் ரீதியாக நீடித்து நிலைக்கக்கூடிய வகையிலும் நவீன தொழில்நுட்பத்துக்கு மாறும் அரிய வாய்ப்பை இந்த கொரோனா தொற்று நமக்கு வழங்கியுள்ளது.

இந்த நோக்கில்,  இந்த மின்னணு- நீதிமன்றங்கள் சேவை கைபேசி செயலி’’ ஒரு முக்கியமான நடவடிக்கை. இந்த செயலி மூலமாக மின்னணு நீதிமன்ற சேவைகளை, பல வழக்கறிஞர்கள், வழக்கு தொடுப்பவர்கள் ஏற்கனவே பயன்படுத்துகின்றனர். இதுவரை இந்த செயலி 57 லட்சம் பதிவிறக்கங்களை கண்டுள்ளது. வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், நமது சட்ட  அமைப்பு மேம்பட இந்த செயலி வழி வகுக்கும் ’’ என்றார்.

நீதித்துறை செயலாளர் திரு பருண் மித்ரா கூறுகையில், ‘‘ இந்த பலபரிமாண முயற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக, மின்னணு-நீதிமன்றங்கள் சேவைகள் கைப்பேசி செயலி, பயனுள்ள  மின்னணு வழக்கு மேலாண்மை கருவியாக (இசிஎம்டி) பாராட்டப்படுகிறது. இதன் மூலம் வழக்கு சம்பந்தமான தகவல்கள்,  ஆவணத்தை தொகுப்பது, தேதி குறிப்பது, வழக்கு நிலவரத்தை கண்காணிப்பது, தேவையானவற்றை பின்பற்றுவது போன்ற செயல்களை  ஒரு வழக்கறிஞரால் திறம்பட கையாள முடிகிறது.

இந்த செயலியை, 24 மணி நேரமும் செலவின்றி எங்கிருந்தும் பயன்படுத்த முடியும்’’ என்றார்.

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியின் கையேடு, அனைத்து அம்சங்களையும் சாதாரண மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ‘ஸ்கிரீன்-ஷாட்’ படங்களுடன் விளக்குகிறது.  இந்த செயலியை பயன்படுத்தி ஒருவர்,  வழக்கு எண்கள் மூலம் வழக்குகளின் முழு விவரங்களையும் அறிந்துக் கொள்ள  முடியும். மின்னணு-நீதிமன்றங்கள் சேவைகள் அனைத்தும், இந்த செயலி மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...