திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 12 மே 2021 ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், தி.மு.க. சார்பில் பேரவைத் தலைவராக திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.அப்பாவு அவர்களும் - துணைத் தலைவராக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கு.பிச்சாண்டி அவர்களும் போட்டியிடுகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 133 இடங்களையும் திமுக கூட்டணி 159 இடங்களிலும் வென்றுள்ளது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11 ஆம் தேதியான இன்று காலை 10.00 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கின் மூன்றாவது தளத்தில் நடப்பதில், தேர்தலில் வெற்றிபெற்ற புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பதவியேற்றுக் கொள்பவர்களுக்குத் தற்காலிக சபாநாயகர் கு. பிச்சாண்டி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். கொரோனா பாதித்த எம்.எல்.ஏ.,க்கள் தனியாகப் பின்னொரு நாளில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள். சட்டப்பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கு நாளை மனுத்தாக்கல் நடைபெறுகிறது. இதில் தலைவர் பதவிக்கு மு.அப்பாவுவும், துணைத் தலைவர் பதவிக்கு கு.பிச்சாண்டியும் போட்டியிடுகின்றனர். இருவரும் போட்டியின்றி நாளை (12 மே 2021) காலை 10.00 மணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பின்னோக்கிய பார்வை 2016 ஆம் ஆண்டில் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்க
முடிவுகள் அறிவிப்பதற்கு முன்னரே பிரதமரிடமிருந்து ஜெ.ஜெயலலிதாவிற்கு வாழ்த்து வருகிறது. முடிவு அறிவிக்கப்படாத தொகுதிகளில் திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாக அவசர அவசரமாக அறிவிக்கப்படுகிறது.அதில் ஒன்றுதான் இராதாபுரம். திமுகவின் வேட்பாளர் பி.எஸ்.அப்பாவு 41 ஓட்டுகளில் தோற்றதாக அறிவிக்கிறார்கள். தபால் ஓட்டுகளை எண்ணி முடித்த பிறகு முடிவு அறிவிக்கலாம் என வாதிடுகிறார். அவரது வாதம் மறுக்கப்படுகிறது. காவல்துறையால் பலவந்தமாக அப்போது வெளியேற்றப்படுகிறார்.
நீதி கேட்டு நீதி மன்றம் செல்கிறார் மறு வாக்கு எண்ணிக்கை கேட்டு .வழக்கு நான்கு ஆண்டுகள் நடக்கிறது ,பிறகு ஒரு நாள் நீதி மன்றம் மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடுகிறது.
நீதிமன்றத்தில் வாக்குககள் எண்ணப்படுகிறது.திடீரென்று எதிர்கட்சியினர் மறு வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்கத் தடை கோரி வழக்கு மேல் முறையீடு செய்யப்படுகிறது . மறு முறை எண்ணிய முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அதற்குள் ஐந்தாண்டுகள் கடந்து ஆட்சியும் முடிந்தது..2021 தேர்தலில் அப்பாவு அதே எதிர் வேட்பாளர் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இம்முறை வெற்றி பெறுகிறார். அனைவரும் அவருக்கு மந்திரி பதவி வருமென எதிர்பார்த்தனர். தரவில்லை. முதல்வர் முன்தினம் அறிவிக்கிறார் அப்பாவுதான் அடுத்த சபாநாயகர் என்று.
எந்த சட்டசபையில் அப்பாவுவை நுழைய விடாமல் நீதி கிடைக்க காலதாமதமாகித் தடுத்ததோ அதே இடத்தில் அப்பாவு அடுத்த ஐந்தாண்டுகள் சபையின் நாயகர் .அவர் உள்ளே நுழையும் போது 234 MLAக்களும் என் (முதல்வர் உட்பட) அனைவரும் எழுந்து நிற்பார்கள்.
நீதிமன்றம் விரைந்து தராத நீதியை, மக்கள் தந்துவிட இந்த மரியாதையை, தன் முடிவின் மூலம் சரியான படி திமுக தலைமை தேர்வு செய்துள்ளது. இதில் பொதுநீதி யாதெனில் ' 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்' இது இன்பதுரைக்கும் பொருந்தும்.
கருத்துகள்