முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்ளொளியை கண்டறிதல்: மனநலமும் பெருந்தொற்றும்" எனும் தலைப்பில் இணைய கருத்தரங்கு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

"உள்ளொளியை கண்டறிதல்: மனநலமும் பெருந்தொற்றும்" எனும் தலைப்பில் இணைய கருத்தரங்கு





கருணையும் புரிந்து கொள்ளுதலும் தான் ஒரு சமூகமாக நாம் மேம்பட வேண்டிய மிகவும் முக்கியமான விஷயமாகும். நாம் அனைவரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எதிர்கொள்ளும் சர்வதேச பிரச்சினையாக கொவிட்-19 அமைந்துள்ளது என்று

"உள்ளொளியை கண்டறிதல்: மனநலமும் பெருந்தொற்றும்" எனும் தலைப்பில் இன்று நடைபெற்ற இணைய கருத்தரங்கில் பேசிய மனநல நிபுணர்கள் தெரிவித்தனர்.  

பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல கள விளம்பர அலுவலகம், மகாராஷ்டிரா மற்றும் கோவா மண்டலம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த இணைய கருத்தரங்கில், பெங்களூரு நிமான்சின் மனநல நிபுணர்களான உளவியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான டாக்டர் பிரதிமா மூர்த்தி மற்றும் இணை பேராசிரியர் டாக்டர் ஜோத்ஸ்னா அகர்வால் ஆகியோர் பேசினர்.

கொவிட் காரணமாக ஒருவர் எதிர்கொள்ளும் மன நல பிரச்சனைகளில் முக்கியமானது அச்சம் என்று டாக்டர் பிரதிமா மூர்த்தி கூறினார். மருத்துவமனையில் படுக்கை கிடைக்குமா, நுரையீரல் மற்றும் இதர உடல் உறுப்புகளுக்கு என்ன ஆகும் என்பது போன்ற பயங்கள் அதிகளவில் நிலவுவதாக மருத்துவர் தெரிவித்தார்.

ஏராளமான தகவல்கள் மூலம் குழப்பம் ஏற்படுவதாகவும் சரியான தகவல்களை ஒருவர் பெறுவது மிகவும் அவசியம் என்றும் மனநல நிபுணர் மேலும் தெரிவித்தார்.

மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் ஒரு நபர், மன அழுத்தம், படபடப்பு போன்ற சிக்கல்களை எதிர் கொள்வதாக அவர் தெரிவித்தார்.

கொவிட் காரணமாக  எதிர்கொள்ளும் மன நல சிக்கல்களை எதிர்கொள்வதற்கு இவர்கள் வழங்கிய வழி முறைகள் வருமாறு: 

இந்த காலகட்டத்தில் நமது அன்றாட பழக்க வழக்கங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

நல்ல உணவு, போதுமான தூக்கம், ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், போதுமான உடற்பயிற்சி, அமைதியான சிந்தனைகள், சிக்கல்களை அடையாளம் கண்டு, எதிர்கொண்டு அவற்றை சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவை அவசியமாகும்.

நல்ல தூக்கம் மிகவும் அவசியம். அடிக்கடி உங்கள் உடல் நிலையை கண்காணித்து கொள்ளுங்கள், முறையான உணவு முறையை கடைபிடியுங்கள், நீர் சக்தியை தக்க வைத்துக் கொள்ளுங்கள், ஆக்சிஜன் அளவை அவ்வப்போது சரி பார்த்துக் கொள்ளுங்கள், தேவை ஏற்படின் மருத்துவ உதவியை கோருங்கள் என்று நிபுணர்கள் மக்களை கேட்டுக் கொண்டார்கள்

தங்களுக்கு நெருக்கமானவர்களின் உயிரிழப்பு, நிதி ரீதியான நஷ்டங்கள் ஆகியவற்றை சந்தித்து வரும் மக்களுக்கு மன நல ஆலோசனை மிகவும் முக்கியம். இதுபோன்றவர்களுக்கு உதவுவது அவசியமாகும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். 

குழந்தைகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும், அவர்கள் நல்ல பொழுதுபோக்குகளை வளர்த்துக்கொள்ள உதவ வேண்டும்.

உங்கள் கவலைகளை குறித்துக் கொள்ள ஒரு புத்தகத்தையோ அல்லது பெட்டியையோ உருவாக்கிக் கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களை, உண்மையான எண்ணங்கள் மூலம் எதிர் கொள்ளலாம். உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நாம் அனைவரும் இதில் ஒன்றாக இருக்கிறோம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

யோகா இசை மற்றும் மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். முன் களப் பணியாளர்களுக்கு ஆதரவு அளியுங்கள். உண்மையான செய்தி ஆதாரங்களை தேர்ந்தெடுங்கள், நேர்மறை எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள் என்று மனநல நிபுணர்கள் தெரிவித்தனர். ஆன்மீகத்தில் மனதை செலுத்துவதும் நிம்மதி அளிக்கும்.

நிமான்ஸ் கட்டணமில்லா உதவி எண் 080-46110007-ஐ மனங்கள் ஆலோசனைக்கு அழையுங்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் உதவி எண் உள்ளது.

சுகாதார பணியாளர்களுக்காக நிமான்ஸ் வெளியிட்டுள்ள கையேட்டை https://nimhans.ac.in/wp-content/uploads/2021/04/FHW-Manual-Final.pdf எனும் இணைப்பில் காணலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த