முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொவிட்-19 தடுப்பூசி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு விளக்கம்


சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொவிட் தடுப்பூசி பற்றிய விளக்கம் கொவிட்-19 தடுப்பூசி குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒவ்வாமை இருப்பவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா?

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கொவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாமா?

தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு போதிய நோய் எதிர்ப்புத்தன்மை எனக்கு உருவாகுமா?

தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு ரத்தம் உறைவது இயல்பானதா?

எனக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தால், எத்தனை நாட்கள் கழித்து தடுப்பூசியை  போட்டுக் கொள்ளலாம்?

இவை, கொவிட் தடுப்பூசி பற்றி அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளாகும்.

டிடி நியூஸ் தொலைக்காட்சியில்  சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜூன் 6, ஞாயிற்றுக்கிழமை அன்று  கொவிட்-19 தடுப்பூசிகள் சம்பந்தமான பல்வேறு சந்தேகங்களுக்கு நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா ஆகியோர் விளக்கமளித்தனர்.

சரியான தகவல்களைப் பெற்று, தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு, தொடர்ந்து வாசிக்கவும். இவை மற்றும் மேலும் பல கேள்விகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவில் (https://www.mohfw.gov.in/covid_vaccination/vaccination/faqs.html) பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வாமை இருப்பவர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா?

டாக்டர் பால்: யாரேனும் ஒருவருக்குக் குறிப்பிடத்தக்க ஒவ்வாமைப் பிரச்சனை இருந்தால் போதிய மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு கொவிட் தடுப்பூசியை அவர் போட்டுக் கொள்ளலாம். எனினும், சளி, சரும ஒவ்வாமை போன்ற சிறிய பிரச்சினைகள் இருந்தால், தயக்கமில்லாமல் ஒருவர் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.





டாக்டர் குலேரியா: ஒவ்வாமை பிரச்சினைக்கு தொடர் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், அவற்றை எடுத்துக்கொண்டே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசியால் ஏற்படும் ஒவ்வாமையின் மேலாண்மைக்காக அனைத்துத் தடுப்பூசி மையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தீவிரமான ஒவ்வாமை இருந்தாலும் அதற்குரிய மருந்தை எடுத்துக் கொண்டு, நீங்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கர்ப்பிணிப் பெண்கள், கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாமா?

டாக்டர் பால்: நமது தற்போதைய வழிகாட்டுதலின்படி கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளக்கூடாது. தடுப்பூசி சோதனையிலிருந்து பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் சமூகத்தினரால் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசியைப் பரிந்துரைக்க இயலவில்லை. எனினும் புதிய அறிவியல் தரவுகளின் அடிப்படையில் இந்த சூழ்நிலையை இந்திய அரசு தெளிவுபடுத்தும்.

பல்வேறு கொவிட்- 19 தடுப்பூசிகள் கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பது தெரியவந்துள்ளது. இதே நிலை நமது இரண்டு தடுப்பூசிகளுக்கும் வரும் என்று  நம்புகிறோம். நமது தடுப்பூசிகள் வெகு குறைவான நாட்களிலேயே தயாரிக்கப்பட்டதாலும், பாதுகாப்பு காரணத்தால் தடுப்பூசிகளின் சோதனையில் கர்ப்பிணிப் பெண்கள் பொதுவாக உட்படுத்தப்பட மாட்டார்கள் என்பதாலும், பொதுமக்கள் பொறுமையாக இருக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

டாக்டர் குலேரியா: கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசிகளை செலுத்தும் பணியை பல்வேறு நாடுகள் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தொடர்பான  தரவுகளும் விரைவில் வெளியிடப்படும். ஒரு சில தரவுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன, இந்தியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தேவையான தரவுகளும், ஒப்புதல்களும் விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

பாலூட்டும் தாய்மார்கள் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாமா?

டாக்டர் பால்:  பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்தத் தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது என்று ஒரு தெளிவான வழிகாட்டுதல் தெரிவிக்கிறது. இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகோ அல்லது அதற்கு முன்போ பாலூட்டுவதை நிறுத்தத் தேவையில்லை.

தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு போதிய நோய் எதிர்ப்புத்தன்மை எனக்கு உருவாகுமா?

டாக்டர் குலேரியா: நோய் எதிர்ப்புத்தன்மை உருவாவதை வைத்து மட்டுமே தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பிடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். தடுப்பூசிகள் பல்வேறு விதமான பாதுகாப்பை வழங்குகிறது. அதாவது உயிரணுக்களுடன் இணைக்கப்பட்ட எதிர்ப்புத்திறன் மற்றும் நினைவாற்றல் உயிரணுக்கள். (நமக்கு தொற்று ஏற்படும்போது அதிக எதிர்ப்புத்தன்மைகளை உருவாக்குவது) மேலும் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள செயல்திறன் முடிவுகள், சோதனைகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ஒவ்வொரு சோதனையின் ஆய்வு வடிவமும் மற்றவற்றில் இருந்து வேறுபட்டதாக இருக்கும்.

கோவேக்சின், கோவிஷீல்டு அல்லது ஸ்புட்னிக் வி அனைத்துத் தடுப்பூசிகளின் செயல்திறனும் ஏறக்குறைய சமமாக இருப்பதாகவே இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே குறிப்பிட்ட தடுப்பூசியை தான் போட்டுக்கொள்ள வேண்டும் என்று இல்லாமல் உங்கள் பகுதியில் எந்தத் தடுப்பூசி போடப்படுகிறதோ அதனை செலுத்திக்கொண்டு, உங்களையும் உங்களது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

டாக்டர் பால்: தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு ஒரு சிலர் நோய் எதிர்ப்புத்தன்மை பரிசோதனையை மேற்கொள்வது குறித்து சிந்திக்கிறார்கள். நோய் எதிர்ப்புத்தன்மை மட்டுமே ஒருவரது எதிர்ப்பு ஆற்றலை  குறிக்கவில்லை என்பதால் இந்த சோதனையை செய்யத் தேவையில்லை.  டி-செல்ஸ் அல்லது நினைவாற்றல் உயிரணுக்களே இதற்குக் காரணம்; நாம் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும்போது இவை குறிப்பிட்ட மாற்றங்களை நிகழ்த்துகின்றன, அதிக ஆற்றல் பெற்று நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறுகின்றன. டி-செல்ஸ் எலும்பு மஜ்ஜையில் காணப்படுவதால் நோய் எதிர்ப்புத்தன்மை பரிசோதனைகளில் அவற்றைக் கண்டறிய முடியாது. எனவே தடுப்பூசி போடுவதற்கு முன்போ அல்லது பிறகோ எதிர்ப்புத்தன்மை பரிசோதனைகளை மேற்கொள்ளும் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என்றும், எந்தத் தடுப்பூசி கிடைக்கிறதோ அதனை இரண்டு டோஸ்களும் உரிய நேரத்தில் போட்டுக்கொண்டு கொவிட் சரியான நடத்தை விதிமுறையைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்கிறோம். கொவிட்- 19 தொற்று ஏற்பட்ட ஒருவருக்குத் தடுப்பூசி தேவை இல்லை என்ற தவறான கருத்தை நம்ப வேண்டாம்.

தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு ரத்தம் உறைவது இயல்பானதா?

டாக்டர் பால்: இது சம்பந்தமாக ஒரு சில நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன, குறிப்பாக, ஆஸ்ட்ரா-ஜெனேக்கா தடுப்பூசி குறித்து. ஐரோப்பாவில் இளைய சமூகத்தினரிடையே அவர்களது வாழ்வியல், உடல் மற்றும் மரபணு கட்டமைப்பினால் அந்நாட்டில் இந்தப் பிரச்சனை எழுந்தது. எனினும் இந்தியாவில் நாம் இந்தத் தரவை முறையாக ஆராய்ந்து இதுபோன்ற ரத்தம் உறையும் நிகழ்வுகள் மிக குறைவானது என்பதைக் கண்டறிந்துள்ளோம். யாரும் இதனால் கவலை கொள்ளத் தேவையில்லை என்று உறுதியளிக்கிறேன்.  ஐரோப்பிய நாடுகளில் இந்தப் பிரச்சனை இந்தியாவை விட 30 மடங்கு அதிகமாகக் காணப்பட்டது.

டாக்டர் குலேரியா: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மக்களுடனும் ஒப்பிடுகையில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இந்திய மக்களிடையே ரத்தம் உறையும் பிரச்சினை குறைவாக இருப்பது ஏற்கனவே தெரியவந்துள்ளது. தடுப்பூசியால் ரத்தம் உறைவது அல்லது த்ராம்போசைட்டோபீனியா என்று அழைக்கப்படும் இந்த பக்கவிளைவு, இந்தியாவில் மிகவும் அரிதானது, ஐரோப்பாவைவிட குறைந்த அளவிலேயே ஏற்படும். எனவே இதனால் பயப்படத் தேவையில்லை. முன்கூட்டியே இந்தப் பிரச்சனையைக் கண்டறிந்துவிட்டால் இதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம்.

எனக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தால், எத்தனை நாட்கள் கழித்து தடுப்பூசியை நான் போட்டுக் கொள்ளலாம்?

டாக்டர் குலேரியா: கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தது முதல் மூன்று மாதங்கள் கழித்துத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று அண்மைய வழிகாட்டுதல்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவடைவதுடன் தடுப்பூசியின் செயல் திறனும் மேம்படும். 

இதுவரை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள உருமாற்றம் அடைந்துள்ள தொற்றுக்களை எதிர்க்கும் தன்மையை நமது தடுப்பூசிகள் பெற்றிருப்பதாக டாக்டர் பால் மற்றும் டாக்டர் குலேரியா ஆகிய இரண்டு நிபுணர்களும் உறுதிபடத் தெரிவித்தனர். தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பிறகு நமது எதிர்ப்பு ஆற்றல் வலுவிழந்து மக்கள் உயிரிழக்க நேரிடும் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளால்  ஊரகப் பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதியில் வசிக்கும் மக்களிடையே தவறான கருத்து நிலவி வருவதை சுட்டிக்காட்டி, இது முற்றிலும் பொய்யான தகவல் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த