முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

201 இயற்கை எரிவாயு நிலையங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர்



பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் 201 இயற்கை எரிவாயு நிலையங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கெயில்  குழுமத்தின் 201 இயற்கை எரிவாயு நிலையங்களைத் தொடங்கிவைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.  ஜான்சியில் குழாய் வழி எரிவாயுத் திட்டம் மற்றும் ராய்கடில் வாகனங்களுக்கான நடமாடும் எரிவாயு நிரப்பும் பிரிவுகளையும் திரு பிரதான் தொடங்கி வைத்தார்.

ஜான்சியில் குழாய் வழி எரிவாயுத் திட்டத்தின் பயனாளிகளுடன் திரு தர்மேந்திர பிரதான் உரையாடுகையில், தடையற்ற எரிவாயு தங்களது வீடுகளுக்கு வழங்கப்படுவதற்கு அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ராய்கட் மற்றும் தில்லியில் உள்ள நடமாடும் எரிவாயு நிரப்பும் பிரிவுகளை இயக்குபவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன், இந்தப் பிரிவுகளில் இருந்து வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு நிரப்பப்படுவதையும் பார்வையிட்டார்.  இன்று தொடங்கிவைக்கப்பட்ட நடமாடும் எரிவாயு நிரப்பும் பிரிவுகள், ஐஜிஎல் மற்றும் மகாநகர் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமானவையாகும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இதுவரை மெட்ரோ நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இயற்கை எரிவாயு நிலையங்கள் மற்றும் குழாய் வழி இயற்கை எரிவாயு திட்டம், அரசின் நடவடிக்கைகளினால் தற்போது நகரங்களையும் சென்றடைகின்றன. மக்களின் வாழ்வை எளிதாக்குவதை நோக்கி பிரதமர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள், பசுமையான எதிர்காலம் மற்றும் மக்களின் வாழ்வை எளிதாக்குதல் ஆகிய இரட்டை நோக்கங்களை முன்னிறுத்திய திட்டங்கள் என்று கூறினார்.

நடமாடும் எரிவாயு நிரப்பும் திட்டத்திற்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகக் கூறிய அவர், இதுபோன்ற வசதிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் பற்றிப் பேசினார்.  நடமாடும் எரிவாயு நிரப்பும் நிலையங்களின் வாயிலாகக் குறைந்த கட்டணத்தில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் இதர இடங்களிலும் பொதுமக்களை சென்றடையலாம் என்று அவர் குறிப்பிட்டார். வரும் காலங்களில், நடமாடும் மின்கலன் மாற்றிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “எரிசக்தியின் சில்லரை வியாபாரத்தில் நாம் புதுமையை உருவாக்கி வருவதோடு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும், வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் வகையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம்”, என்று திரு பிரதான் மேலும் கூறினார்.

பருவநிலை மாநாட்டில் (சிஓபி-21) இந்தியாவின் உறுதித்தன்மையை பூர்த்தி செய்வதற்காக சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுவைக் குறைக்க உதவும் வகையில் நிலையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்காக 2030-ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எரிசக்தி பயன்பாட்டில் 15% இயற்கை எரிவாயுவை உபயோகப்படுத்துவதில் இந்தியா உறுதிபூண்டிருப்பதாக திரு பிரதான் தெரிவித்தார்.

தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் குறைந்த வெளியிடல்களை உறுதி செய்வதற்காக டீசல்/பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை இயற்கை எரிவாயு/திரவ இயற்கை எரிவாயுவிற்கு தகுந்தவாறு மாற்றுவது அவசியம் என்று அவர் கூறினார். அந்த வழியில், குழாய் இணைப்புகள் இன்னும் வழங்கப்படாத பகுதிகள் அல்லது இயற்கை எரிவாயு நிலையங்களை அமைப்பதில் இடப்பற்றாக்குறை ஏற்படும் இடங்களில், நடமாடும் எரிவாயு நிரப்பும் பிரிவுகள் உதவிகரமாக இருக்கும். இந்தப் பிரிவுகள் 1500 கிலோ கிராம் இயற்கை எரிவாயு வரை சேமிக்கும் திறன் கொண்டதாகவும், நாளொன்றுக்கு 150 முதல் 200 வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பும் தன்மையுடையதாகவும் உள்ளன. நாட்டில் நடமாடும் எரிவாயு நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...