முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

201 இயற்கை எரிவாயு நிலையங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர்



பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம் 201 இயற்கை எரிவாயு நிலையங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், கெயில்  குழுமத்தின் 201 இயற்கை எரிவாயு நிலையங்களைத் தொடங்கிவைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.  ஜான்சியில் குழாய் வழி எரிவாயுத் திட்டம் மற்றும் ராய்கடில் வாகனங்களுக்கான நடமாடும் எரிவாயு நிரப்பும் பிரிவுகளையும் திரு பிரதான் தொடங்கி வைத்தார்.

ஜான்சியில் குழாய் வழி எரிவாயுத் திட்டத்தின் பயனாளிகளுடன் திரு தர்மேந்திர பிரதான் உரையாடுகையில், தடையற்ற எரிவாயு தங்களது வீடுகளுக்கு வழங்கப்படுவதற்கு அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ராய்கட் மற்றும் தில்லியில் உள்ள நடமாடும் எரிவாயு நிரப்பும் பிரிவுகளை இயக்குபவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன், இந்தப் பிரிவுகளில் இருந்து வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு நிரப்பப்படுவதையும் பார்வையிட்டார்.  இன்று தொடங்கிவைக்கப்பட்ட நடமாடும் எரிவாயு நிரப்பும் பிரிவுகள், ஐஜிஎல் மற்றும் மகாநகர் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமானவையாகும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இதுவரை மெட்ரோ நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இயற்கை எரிவாயு நிலையங்கள் மற்றும் குழாய் வழி இயற்கை எரிவாயு திட்டம், அரசின் நடவடிக்கைகளினால் தற்போது நகரங்களையும் சென்றடைகின்றன. மக்களின் வாழ்வை எளிதாக்குவதை நோக்கி பிரதமர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், இன்று தொடங்கி வைக்கப்பட்ட திட்டங்கள், பசுமையான எதிர்காலம் மற்றும் மக்களின் வாழ்வை எளிதாக்குதல் ஆகிய இரட்டை நோக்கங்களை முன்னிறுத்திய திட்டங்கள் என்று கூறினார்.

நடமாடும் எரிவாயு நிரப்பும் திட்டத்திற்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகக் கூறிய அவர், இதுபோன்ற வசதிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் பற்றிப் பேசினார்.  நடமாடும் எரிவாயு நிரப்பும் நிலையங்களின் வாயிலாகக் குறைந்த கட்டணத்தில் வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் இதர இடங்களிலும் பொதுமக்களை சென்றடையலாம் என்று அவர் குறிப்பிட்டார். வரும் காலங்களில், நடமாடும் மின்கலன் மாற்றிகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “எரிசக்தியின் சில்லரை வியாபாரத்தில் நாம் புதுமையை உருவாக்கி வருவதோடு, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும், வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் வகையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம்”, என்று திரு பிரதான் மேலும் கூறினார்.

பருவநிலை மாநாட்டில் (சிஓபி-21) இந்தியாவின் உறுதித்தன்மையை பூர்த்தி செய்வதற்காக சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசுவைக் குறைக்க உதவும் வகையில் நிலையான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்காக 2030-ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எரிசக்தி பயன்பாட்டில் 15% இயற்கை எரிவாயுவை உபயோகப்படுத்துவதில் இந்தியா உறுதிபூண்டிருப்பதாக திரு பிரதான் தெரிவித்தார்.

தூய்மையான சுற்றுச்சூழல் மற்றும் குறைந்த வெளியிடல்களை உறுதி செய்வதற்காக டீசல்/பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை இயற்கை எரிவாயு/திரவ இயற்கை எரிவாயுவிற்கு தகுந்தவாறு மாற்றுவது அவசியம் என்று அவர் கூறினார். அந்த வழியில், குழாய் இணைப்புகள் இன்னும் வழங்கப்படாத பகுதிகள் அல்லது இயற்கை எரிவாயு நிலையங்களை அமைப்பதில் இடப்பற்றாக்குறை ஏற்படும் இடங்களில், நடமாடும் எரிவாயு நிரப்பும் பிரிவுகள் உதவிகரமாக இருக்கும். இந்தப் பிரிவுகள் 1500 கிலோ கிராம் இயற்கை எரிவாயு வரை சேமிக்கும் திறன் கொண்டதாகவும், நாளொன்றுக்கு 150 முதல் 200 வாகனங்களுக்கு எரிவாயு நிரப்பும் தன்மையுடையதாகவும் உள்ளன. நாட்டில் நடமாடும் எரிவாயு நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த