முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ நா சபையின் 75 வது அமர்வில் எச்ஐவி / எய்ட்ஸ் தடுப்பு குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஐ நா சபையின் 75 வது அமர்வில் எச்ஐவி / எய்ட்ஸ் தடுப்பு குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

டாக்டர் ஹர்ஷ் வர்தன்,  ஐக்கிய நாடுகள் சபையின்  75வது அமர்வில், காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார் .


எச்.ஐ.வி/எய்ட்ஸ் மீதான உறுதிப்பாட்டு பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த அரசியல் அறிவிப்புகள் தொடர்பான  75/260 தீர்மானம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் பேசினார் .

அவரது உரை பின்வருமாறு:

” ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இந்த மதிப்புமிக்க மன்றத்தில் இன்று உரையாற்றுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எனது அரசின் சார்பாக, உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தக் கூட்டத்தைத் திட்டமிடுவதில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. எய்ட்ஸ் தொடர்பான இந்த உயர்மட்டக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பதில் மகிழ்ச்சி.

எச்.ஐ.வி தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது பொதுவான கருத்து என்றாலும், தொற்றுநோய்கள் மீண்டும் உயிர்ப்பிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன, எனவே, தொடர்ந்து விழிப்புடன், சரியான நேரத்தில் தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும்.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருந்து பெறுவதை உறுதி செய்வதற்காக, இந்த கொவிட்-19 இன் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து, அயராது பணியாற்றிய முன்களத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள்  மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி எனது உரையைத் தொடங்குகிறேன்.  சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த காலகட்டத்தில் எச்.ஐ.வி-எய்ட்ஸ் நோயால் உயிர் இழந்தவர்களுக்கு  நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

தொற்றுநோய்களுக்கு எதிரான போராட்டத்தில், ஏற்றத்தாழ்வுகளையும்,  இடைவெளிகளையும் சரி செய்வதற்கு வலுவான அரசியல் தலைமை மிகவும் முக்கியமானது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. கொவிட்-19 தொற்றுகாலத்தில்,  எச்.ஐ.வி சேவைகள் பாதிக்கப்படாமலிருக்க சமூகங்கள், சிவில் சமூகம் மற்றும் மேம்பாட்டு பங்காளர்களை ஈடுபடுத்தி இந்தியா விரைவான மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தது.  இந்தியாவில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம், 2017, தொற்றாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க, சட்டபூர்வமான மற்றும் செயல்படுத்தும் கட்டமைப்பை வழங்குகிறது.

இந்தியாவின் தனித்துவமான எச்.ஐ.வி தடுப்பு மாதிரியானது,  'சமூக ஒப்பந்தம்' என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது.  இதன் மூலம் சிவில் சமூகத்தின் ஆதரவுடன் 'இலக்கு நோக்கிய திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.  நடத்தை மாற்றம், தகவல் தொடர்பு,  பாதிக்கப்பட்டோரை சென்றடைதல், சேவை வழங்கல், ஆலோசனை, சோதனை போன்ற எச்.ஐ.வி பராமரிப்புக்கான இணைப்புகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது இந்தத் திட்டம்.

14 லட்சம் மக்களுக்கு இந்தியா இலவசமாக ஆன்டி- ரெட்ரோ-வைரல் சிகிச்சையை வழங்குகிறது.  இந்திய மருந்துகள்,  ஆப்பிரிக்காவில்  எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களை சென்றடைகின்றன.  சென்றடைவதற்கு கடினமான, பாதிக்கப்படக்கூடிய மக்களின் மீது கவனம் செலுத்துவதற்காக, இந்தியாவின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டமானது,  திருத்தப்பட்டு, புத்துயிர் அளிக்கப்பட்டு, மறுசீரமைக்கப்பட்டுள்ளது.  எச்.ஐ.வி உடன் வாழும் மக்களை, படிப்படியாக, பாதுகாப்பான மற்றும் திறமையான ஆன்டி-ரெட்ரோ-வைரல் மருந்து முறையான டோலூடெக்ராவிருக்கு மாற்றுகிறோம்.

வைரல்-லோடு சோதனை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் எச்.ஐ.வி ஆலோசனை, பரிசோதனை மற்றும் ஆரம்பகால நோயறிதலுக்கான சமூக அடிப்படையிலான பரிசோதனை ஆகியவை எச்.ஐ.வி நோய், தாயிலிருந்து குழந்தை பரவுவதைத் தடுப்பது என்ற இலக்கை அடைவதற்காக விரைவுபடுத்தப்பட்டுள்ளன. 'அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் நம்பிக்கையுடனும்' என்ற இந்திய அரசின் குறிக்கோளுக்கு இணங்க, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், எச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான ஆதரவைத் திரட்டுவதற்காக பொது மற்றும் தனியார் துறை தொழில்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த பயங்கரமான நோயுடன் வாழும்  மக்களை நூறு சதவிகிதம் சென்றடைய, எச்.ஐ.வி சிகிச்சையை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமானால், இலக்கை அடைய 115 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், எச்.ஐ.வி பரவுதலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதை நாங்கள் முழுமையாக அறிவோம் . எங்களது ஒரு நீண்ட பயணம். பெரிய பொது சுகாதார அச்சுறுத்தலாக உள்ள எய்ட்ஸ் தொற்றுநோயை 2030க்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிலையான மேம்பாட்டு இலக்கை அடைவதற்கு, எங்கள் சவால்களையும் இடைவெளிகளையும் முன்கூட்டியே கண்டறிந்து அடையாளம் காண வேண்டும்;  எங்கள் திட்டத்தை தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும்; அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்;  சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

எச்.ஐ.விக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...