முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐ நா சபையின் 75 வது அமர்வில் எச்ஐவி / எய்ட்ஸ் தடுப்பு குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஐ நா சபையின் 75 வது அமர்வில் எச்ஐவி / எய்ட்ஸ் தடுப்பு குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

டாக்டர் ஹர்ஷ் வர்தன்,  ஐக்கிய நாடுகள் சபையின்  75வது அமர்வில், காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார் .


எச்.ஐ.வி/எய்ட்ஸ் மீதான உறுதிப்பாட்டு பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த அரசியல் அறிவிப்புகள் தொடர்பான  75/260 தீர்மானம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் பேசினார் .

அவரது உரை பின்வருமாறு:

” ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இந்த மதிப்புமிக்க மன்றத்தில் இன்று உரையாற்றுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எனது அரசின் சார்பாக, உங்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்தக் கூட்டத்தைத் திட்டமிடுவதில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி. எய்ட்ஸ் தொடர்பான இந்த உயர்மட்டக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்பதில் மகிழ்ச்சி.

எச்.ஐ.வி தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது பொதுவான கருத்து என்றாலும், தொற்றுநோய்கள் மீண்டும் உயிர்ப்பிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன, எனவே, தொடர்ந்து விழிப்புடன், சரியான நேரத்தில் தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகும்.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருந்து பெறுவதை உறுதி செய்வதற்காக, இந்த கொவிட்-19 இன் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து, அயராது பணியாற்றிய முன்களத் தொழிலாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள்  மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டி எனது உரையைத் தொடங்குகிறேன்.  சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த காலகட்டத்தில் எச்.ஐ.வி-எய்ட்ஸ் நோயால் உயிர் இழந்தவர்களுக்கு  நான் அஞ்சலி செலுத்துகிறேன்.

தொற்றுநோய்களுக்கு எதிரான போராட்டத்தில், ஏற்றத்தாழ்வுகளையும்,  இடைவெளிகளையும் சரி செய்வதற்கு வலுவான அரசியல் தலைமை மிகவும் முக்கியமானது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. கொவிட்-19 தொற்றுகாலத்தில்,  எச்.ஐ.வி சேவைகள் பாதிக்கப்படாமலிருக்க சமூகங்கள், சிவில் சமூகம் மற்றும் மேம்பாட்டு பங்காளர்களை ஈடுபடுத்தி இந்தியா விரைவான மற்றும் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்தது.  இந்தியாவில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம், 2017, தொற்றாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க, சட்டபூர்வமான மற்றும் செயல்படுத்தும் கட்டமைப்பை வழங்குகிறது.

இந்தியாவின் தனித்துவமான எச்.ஐ.வி தடுப்பு மாதிரியானது,  'சமூக ஒப்பந்தம்' என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது.  இதன் மூலம் சிவில் சமூகத்தின் ஆதரவுடன் 'இலக்கு நோக்கிய திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.  நடத்தை மாற்றம், தகவல் தொடர்பு,  பாதிக்கப்பட்டோரை சென்றடைதல், சேவை வழங்கல், ஆலோசனை, சோதனை போன்ற எச்.ஐ.வி பராமரிப்புக்கான இணைப்புகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது இந்தத் திட்டம்.

14 லட்சம் மக்களுக்கு இந்தியா இலவசமாக ஆன்டி- ரெட்ரோ-வைரல் சிகிச்சையை வழங்குகிறது.  இந்திய மருந்துகள்,  ஆப்பிரிக்காவில்  எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களை சென்றடைகின்றன.  சென்றடைவதற்கு கடினமான, பாதிக்கப்படக்கூடிய மக்களின் மீது கவனம் செலுத்துவதற்காக, இந்தியாவின் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டமானது,  திருத்தப்பட்டு, புத்துயிர் அளிக்கப்பட்டு, மறுசீரமைக்கப்பட்டுள்ளது.  எச்.ஐ.வி உடன் வாழும் மக்களை, படிப்படியாக, பாதுகாப்பான மற்றும் திறமையான ஆன்டி-ரெட்ரோ-வைரல் மருந்து முறையான டோலூடெக்ராவிருக்கு மாற்றுகிறோம்.

வைரல்-லோடு சோதனை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் எச்.ஐ.வி ஆலோசனை, பரிசோதனை மற்றும் ஆரம்பகால நோயறிதலுக்கான சமூக அடிப்படையிலான பரிசோதனை ஆகியவை எச்.ஐ.வி நோய், தாயிலிருந்து குழந்தை பரவுவதைத் தடுப்பது என்ற இலக்கை அடைவதற்காக விரைவுபடுத்தப்பட்டுள்ளன. 'அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் நம்பிக்கையுடனும்' என்ற இந்திய அரசின் குறிக்கோளுக்கு இணங்க, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம், எச்.ஐ.வி தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான ஆதரவைத் திரட்டுவதற்காக பொது மற்றும் தனியார் துறை தொழில்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்த பயங்கரமான நோயுடன் வாழும்  மக்களை நூறு சதவிகிதம் சென்றடைய, எச்.ஐ.வி சிகிச்சையை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது.

அடுத்த 10 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமானால், இலக்கை அடைய 115 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், எச்.ஐ.வி பரவுதலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதை நாங்கள் முழுமையாக அறிவோம் . எங்களது ஒரு நீண்ட பயணம். பெரிய பொது சுகாதார அச்சுறுத்தலாக உள்ள எய்ட்ஸ் தொற்றுநோயை 2030க்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நிலையான மேம்பாட்டு இலக்கை அடைவதற்கு, எங்கள் சவால்களையும் இடைவெளிகளையும் முன்கூட்டியே கண்டறிந்து அடையாளம் காண வேண்டும்;  எங்கள் திட்டத்தை தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும்; அறிவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்;  சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

எச்.ஐ.விக்கு எதிரான இந்த போராட்டத்தில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த