முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதிமுக சட்டமன்ற கட்சி துணை தலைவர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வத்தை தேர்வு செய்தனர்.

அதிமுக சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் சட்டமன்ற கட்சி துணை தலைவர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வத்தை தேர்வு செய்தனர்.


பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில் தான் செல்வாக்கு எனக் கூறிய வா.புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம். எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார் ஓ. பன்னீர் செல்வம். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதென  கடந்த கால அதிமுக அரசு முடிவு செய்த இடஒதுக்கீடு அறிவிப்பால் பாமகவுக்கு 23 தொகுதிகளை  அதிமுக கொடுத்தது. அப்போது பாமக, இது மிகவும் குறைவான தொகுதிகள்தான் என்றது.

பாமக செல்வாக்கு குறித்து விமர்சனம் வந்தது


 சட்டசபை தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் அடிப்படையிலும் அதிமுக அணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளே அதிகம்தான் என விமர்சிக்கப்பட்டது. அதுவும் தோற்றுப் போவோம் எனத் தெரிந்த திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியை பாமக பெற்றதென்கிற விமர்சனமும் அப்போது வந்தது.


பாமகவுக்கு 5 இடங்கள்தான்..

சட்டசபைத் தேர்தலில் அதிமுக பலமான மாவட்டங்களில் அதிமுகவின் தயவில் பாமகவும் 5 இடங்களில்தான் வென்றது. இது அப்பட்டமாக பாமகவின் செல்வாக்கு என்ன என்பதை வெளிப்படுத்துவதாகவும் ஆய்வுக் கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன. இருந்தாலும் அதிமுக தரப்பில் இருந்து பெரிய அளவுக்கு பாமக மீது விமர்சனங்கள் வைக்கப்படாமல் இருந்தன.


இந்த நிலையில் பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி, பாமக இல்லை எனில் 20 இடங்களில் தான் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என விமர்சித்தார். இது குறித்து அதிமுகவின் பெங்களூர் வா. புகழேந்தி அளித்த பேட்டியில், பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில் தான் செல்வாக்கு. ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்து போட்டதால் தான் அன்புமணி ராஜ்யசபா எம்.பியானார் என்பதை மறக்கலாமா?  என நேற்றுச் சாடினார்.


சட்டசபை தேர்தல் முடிவடைந்த ஒன்றரை மாதங்களிலேயே அதிமுக- பாமக இடையே முட்டல் மோதல் பகிரங்கமாக வெடித்ததனால் அடுத்தடுத்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக- பாமக கூட்டணி நீடிக்குமா என சந்தேகமே என மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து.


அதிமுக சார்பாக இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் கட்சியின் எதிர்காலம் குறித்து பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.. பொதுச்செயலாளர் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் வி.கே.சசிகலா நடராஜன் தினமும் கட்சியின் நிர்வாகிகள் பலருடன் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று நடந்த அதிமுக கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

3 மணி நேரம். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், வி.கே.சசிகலா நடராஜனுடன் பேசினால் கட்சியில் இருந்து நீக்கம்: வி.கே.சசிகலா நடராஜனுடன் தொலைபேசியில் உரையாடிய அதிமுகவினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவர் என முடிவு செய்யப்பட்டுள்ளது.அதிரடியாக அறிவித்துள்ளனர்.

அதோடு வி.கே.சசிகலா நடராஜனுடன் நெருக்கமாக இருந்தவர்கள் பலர் கட்சியில் நீக்கப்பட்டுள்ளனர். அதிமுக செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வி.கே.சசிகலா நடராஜனுடன் தொலைபேசியில் பேசிய 15 நிர்வாகிகள் நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், முன்னாள் எம்.பி. சின்னசாமி மற்றும் வி.கே.சசிகலா நடராஜனுடன் தொடர்பு கொண்ட 16 கட்சி செயற்பாட்டாளர்கள் இதே காரணத்திற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்சியின் செய்தித் தொடர்பாளர் வி.புகழேந்தியும் வெளியேற்றப்பட்டார்.ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி மிகவும் சூடாக பேசியதாக கூறப்படுகிறது. வி.கே.சசிகலா நடராஜன் கட்சிக்குள் வருவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது போல பேசி இருக்கிறார்.இன்னும் ஒரு தகவல் உலா வருகின்றன.முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட சமயம் ஜாமீன் பெற ஏதுவாக பெங்களூர் வா.புகழேந்திக்கு இரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகளை எழுதி வைத்தார்கள், அந்த சொத்துக்களின் மீதே ஜாமீன் பெற்றார்கள்.அது நாள் முதல் பெங்களூர் அடுக்கு மாடி குடியிருப்புகள் பெங்களூர் புகழேந்தியின் வசமானது. ஜெ மரணத்திற்கு பிறகு சர்ச்சைக்குரிய ஆவணங்களை தேடி அலைந்த பலருக்கு எதுவும் சிக்க வில்லை இறுதியாக சர்ச்சைக்குரிய ஆவணங்கள் வேதா இல்லத்தில் இருக்க கூடும் என நினைத்து வேதா இல்லத்தை கைப்பற்றி முயற்சி கைகூட வில்லை. அதை அரசின் உடமையாக்கி பூட்டு போட்ட. அந்த நேரத்தில் தான் பெங்களூர் வா.புகழேந்தி வி.கே.சசிகலா நடராஜனைத் தொடர்புக்கொண்டு பெங்களூர் அடுக்கு மாடி குடியிருப்புகளில் பாதுகாக்கப்படும் ஆவணங்கள் குறித்து கூற, சசிகலா அம்மையாரும் புகழேந்தியும் திட்டமிடுகிறார்கள்...

சர்ச்சைக்குரிய ஆவணங்கள் பெங்களூர் அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பதாகவும் அந்த குடியிருப்பு தன் பராமரிப்பில் இருப்பதாகவும் இரு தலைவர்களும் தனித்தனியே கூற இருவரும் புகழேந்தியை நம்பி அந்த ஆவணங்களைப் பெறவிலை பேசியுள்ளதாகவும் ஒரு தகவல் உலா, அது கை மாறினதும் புகழேந்தி யூ டர்ன் போட்டு தற்போது இருவரிடம் இது பற்றின உண்மைகளை வெளியிடுவேன் , ஆவணங்களை தேடி அலையும் ரகசியத்தை வெளியிடுவேன் என திரும்பி விட்ட நிலையில் வி.கே.சசிகலா நடராஜனுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பிரமானப் பத்திரங்களைப் பற்றின முழுத் தகவல்களையும் பெற்றுக்கொண்ட வா.புகழேந்தி.சேகரித்த பல தகவல்களை வி.கே. சசிகலா நடராஜனிடம் கூறி பிறகு நாடகத்தை முடித்துக்கொண்ட முதல் ஸ்லீப்பர் செல் அல்லது ஐந்தாம் படை வேலை முடித்த ஒரு முடிவோடு செய்தியாளர்களைச் சந்தித்த வா.புகழேந்தி பாமக வைச் சாடி ஒரு தலைவருக்கு ஆதரவாக பேசுவதை போல பாவனை செய்து கட்சியை விட்டு தன்னை தானே நீக்கிக்கொள்ளும் நிலை வைத்துக்கொண்டுள்ளார். என்ற விவாதம் அரசியல் களத்திலும் பலரால் பேசப்படுகிறது உண்மையான தகவல் தானா என்று வினா எழுகிறது இப்போது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...