மணல் விவகாரத்தில் அவசரமாக சேகர் ரெட்டியின் அறிவிப்பு.
பயத்தில் வந்த அறிவிப்பு மணல் குவாரி சம்பந்தப்பட்டு நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும்எஎ இதுவரை அரசிடமிருந்து பெற்றதுமில்லை. தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். இனி வரும் காலங்களில் நானும், எனது நிறுவனமும் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப் போவதில்லையென தொழிலதிபர் சேகர் ரெட்டி அறிவிப்பு வெளியிட.
சமீபத்தில் சேகர் ரெட்டிக்கு மணல் குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளதாகவும், ரகசியமாக டீல் முடிந்துவிடடதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல் பரவிய சூழலில் தன்னை பற்றியும் மணல் வியாபாரம் பற்றியும் வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று தொழில் அதிபர் சேகர் ரெட்டி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அப்போது வந்த ஆடியோ ஒன்றில்... அந்த உரையாடல் பதிவில் உள்ளபடி...
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘போய்விட்டார்களா... இருக்காங்களா?’’
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘முடிந்தது’’
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘தமிழ்நாடு முழுக்கவா... நாலு மாவட்டம் மட்டுமா? 'படிக்காசு' (மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த ஒரு நபரின் பெயர்) என்னாச்சு?’’
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘தமிழ்நாடு முழுக்கத்தான். அவருக்கும் பிரிச்சி தருவாங்க.
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘மொத்தம் மூணு பேரா?’’
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘இல்லை. நாலு பேர்’’
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘யார் யாரு?’’
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘ராமச்சந்திரன், கரிகாலன், ரத்தினம், அப்புறம் வேலூர்காரர் சேகர்ரெட்டி. இதுக்கெல்லாம் சேகர்ரெட்டிதான் ஹெட்டு.’’
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘சேகர்ரெட்டி வந்தாரா?’’
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘அவர் வர்லை. முன்ன ஒரே முறை மட்டும் வந்துட்டுப் போனாரு. அவங்களே பிரிச்சி கொடுப்பாங்க.’’
எதிர் முனையில் பேசுபவர்: ‘‘எது இருந்தாலும், ஐயா கிட்ட கேட்டுச் சொல்லுங்க.
உதவியாளர் எனக்கூறப்படும் நபர்: ‘‘வாங்கிக்கிலாம்... வாங்கிக்கலாம்’’ என்பதுடன் அந்த உரையாடல் பதிவு முடிகிறது..இத் தகவல் பரவிய நிலையில் இப்போது நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றது இல்லை. தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இனி வரும் காலங்களில் நானும், எனது நிறுவனமும் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தொழில் அதிபர் சேகர் ரெட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக சேகர் ரெட்டி குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் பரவி வருகிறது. சேகர் ரெட்டிக்கு மணல் குவாரிக்கு அனுமதி கொடுக்கப்பட உள்ளதாகவும், ரகசியமாக டீல் முடிந்துவிடடதாகவும் தகவல்கள் பரவின
தன்னை பற்றியும் மணல் வியாபாரம் பற்றியும் வரும் தகவல்களில் உண்மை இல்லை என்று தொழில் அதிபர் சேகர் ரெட்டி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின்
முதல்வரிடம் ரூபாய். ஒரு கோடி நிதி கொடுத்த சில நாளில் அவர் மீது வழக்கும் பாய்ந்தது.
இதுகுறித்து, தொழில் அதிபர் சேகர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் மிக அற்புதமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி சமூக ஊடகங்களிலும், சில பத்திரிகைகளிலும் எனக்கும் மற்ற சிலருக்கும் தமிழக அரசின் பொதுப்பணித் துறையில் மணல் குவாரிகள் ஒப்பந்தம் கொடுத்ததாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
நாங்கள் வாங்கியதில்லை
எனது பெயரிலோ, என் நிறுவனத்தின் பெயரிலோ கடந்த 15 வருடத்தில் தமிழகத்திலுள்ள மணல் குவாரிகளை இதுவரை எந்த ஒரு ஒப்பந்தமும் நாங்கள் பெற்றதில்லை. வேண்டுமென்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பொதுப்பணி துறையில் கேட்டு வாங்கிக்கொள்ளலாம்.
ஒப்பந்தம் பெறவில்லை
2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் அனுமதி பெற்று மணல் கிடங்கு நடத்தி வந்தவர்களிடம் மணல் வாங்கி நாங்கள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தோம். இதைத் தவிர நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றதில்லை
இனி ஈடுபட மாட்டேன்
இனி வரும் காலங்களிலும் நானும் எனது நிறுவனமும் தமிழக அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளோம். எனவே, இதுபோன்ற செயல்களில் எனது பெயரை பயன்படுத்தி ஒரு பரபரப்பை உருவாக்க வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தொழில் அதிபர் சேகர் ரெட்டி அவரது அறிக்கையில் கூறியுள்ளார் நேரடியாக நாங்கள் எந்த ஒரு ஒப்பந்தமும் இதுவரை அரசிடமிருந்து பெற்றது இல்லை. தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இனி வரும் காலங்களில் நானும், எனது நிறுவனமும் அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தொழில் அதிபர் சேகர் ரெட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். மணல் திருட்டு உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் ஏற்படுவதாக அறியப்படுகிறது. இது ஜமைக்கா மற்றும் இந்தியாவூன் ஆற்றங்கரையிலும் கடல் கரையிலுமுள்ள மணலை சட்டத்திற்கு புறம்பாக திருடும் செயல்.. ஆற்றங்கறையில்
கொள்ளையடிக்கப்படும் மணல் வகைகள்
கடல் சுற்றுச்சூழல் மற்றும் வாழ்விடங்களில் கட்டுப்பாடற்ற மணல் எடுக்க இருந்து சரி செய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன
பல தீவுகள் இல்லாமலே போய் விட்டன
நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சினையும், உழவுத் தொழில் பாதிக்கப்படுவதாக அறியப்படுகிறது.
கடலோரங்களில் மணல் அள்ளப்படுவதால் கடல்நீர் உள்ளே புகுந்து மீனவர் குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாவதும் நடைபெறுகிறது.
கடற்கரையில் மணல் அகழ்வினால் வெப்ப மண்டல சூறாவளிகளும் சுனாமியுடன் தொடர்புடைய அலைகளும் புயலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாதுகாப்பு அற்ற நிலையை ஏற்படுத்துகின்றன.
சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளுதல் மற்றும் திருடுதலை இந்திய குற்றப்பபிரிவின் கீழும் பதிவு செய்யலாம்.
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் சீரமைப்பு), 1957 சட்டம்
தமிழகத்தில் மணற்கொள்ளையில் ஈடுபடும் கும்பல்களுக்கு அரசியல் ஆதரவுள்ளது. இதனைத் தடுக்க முயலும் நேர்மையான அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதுமுண்டு.
கனிம வளம் கொண்ட பகுதியில் உள்ள மணலை அதிகமாக அள்ளுவது தாது மணற்கொள்ளை தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோரத் தேரிப் பகுதிகளில் பல ஆண்டுகளாக இந்த வகை மணற்கொள்ளை நடந்து பிரச்சனைக்குள்ளானது. தாது வளம் கொரியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா முதலான வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றது.தமிழ்நாடு கனிம நிறுவனம், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இரண்டும் அப்பழுக்கற்ற அதிகாரிகளின் ஆணைப்படி செயல்பட்டால் மட்டுமே தமிழ்நாட்டின் வளங் களைக் காப்பாற்ற முடியும். கடந்த ஆட்சியில் ஒரு யூனிட் மனலுக்கு பில் மூன்று யூனிட் மனலுடன் வெளியில் ரூபாய்.40.000 விற்பனை செய்த கொள்ளைக்காரன் பங்கு மீதம் ரூபாய் 30,000 அப்போது அடித்த கொள்ளைக்காரன் யார் கூட்டாளிகள் யா என்பதை நாம் மட்டுமல்லாமல் ஊரரியும் யாரும் அடுத்த ஆட்சியில் வந்துவிடும் நிலை தற்போது இல்லை. என்ற இப்போது உள்ள நிலையில் கண்ணில் மண் தூவி கண நேரத்தில் கடந்தது மனல் லாரி வெளிச்சமில்லா இரவிலும் ஆளை மதிக்காமல் வேகமாய் செல்கிறது அவசரமாய் அடித்து செல்லப்படுவது அந்த ஆற்றுப் படுகையின் அடித்தள மணல். வெள்ளம் வந்தா .. இல்லையில்லை பள்ளம் தோண்டிய கொள்ளைக்காரனால். அதே வழியில் நடந்து சென்ற நால்வர் நகர்ந்து நின்று வேடிக்கை பார்த்தது மனிதம் இல்லா மணல் கொள்ளையை..ஏதோ ஓர் இரவில் நிலவை ரசிக்க அடுத்த தலைமுறை மணல் மேல் பாதம் பதிக்கும் முன். ஆறும் அதில் வரும் நீரும் ஆழமாய் அழிந்து போகும் அதுவரை வேடிக்கை பார்ப்போம்.. ஆற்றங்கரை கொள்ளைக்காரனை...
கருத்துகள்