முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெள்ளாட்டுப் பண்ணையும் விவசாயிகளின் தற்சார்பு பொருளாதார உயர்வும்.தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,


செய்தியாளர்:- எஸ்.மணிகண்டன்,    நாகபட்டினம். 
                        வெள்ளாட்டுப் பண்ணையும் விவசாயிகளின் தற்சார்பு பொருளாதார உயர்வும்... கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சா





வூர் இணைய வழியில் நடத்தும் கால்நடை பண்ணையாளர்களுக்கு வெள்ளாடு பண்ணை முறை வளர்ச்சி.

மாமிச பிரியர்களால் பெரிதும் விரும்பப்படுவது வெள்ளாட்டிறைச்சி என்றால் அது மிகையல்ல. சந்தையில் ஒரு கிலோ வெள்ளாட்டிறைச்சியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதை அறிவோம். இந்த சூழ்நிலை இளைய தலைமுறை தொழில் முனைவோர்களை வெள்ளாட்டுப் பண்ணையம் நோக்கி ஈர்க்கிறது. அவர்களுக்கு வழிகாட்டும் பொருட்டு தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இணையவழி சந்திப்பு ஒன்றை கூகுள் வழியாக நிகழ்த்தப்படவுள்ளது

தலைப்பு: வெள்ளாட்டுப் பண்ணையம் தொழில் முனைவோர்கள்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்

சந்திப்பு நாள்: 11.06.2021. நேரம்: காலை 11 மணி முதல் 12 மணி வரை

சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/sdu-ojmv-erb

சந்திப்பிற்கான குறியீடு: 28317

தொழில் முனைவோர்கள் அனைவரும் இணையவழி சந்திப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 

மேலும் தொடர்புக்கு: தொலைபேசி; 9566082013 ஆகும்.                ஆடுகளில் இரு வகைகள். செம்மறியாடு வகை ஆண்டுக்கு 1 முறை, 1 குட்டி மட்டுமே ஈனும். ஆனால் வேகமாக வளரும், விரைவில் அதிக எடை உடையதாகவும்.

வெள்ளாடுகள் ஆண்டுக்கு 2 முறை, ஓவ்வொரு ஆடும் 2 குட்டிகளை ஈனும். இதில் முதலில் ஈன்ற குட்டி அடுத்த 6 மாதங்களில் கருத்தரித்து குட்டி ஈனும். இவ்வாறு நாம் குறைந்தபட்சம் கணக்கிட்டால் 1 வெள்ளாட்டின் மூலம் ஆண்டுக்கு 6 குட்டிகள் வரை கிடைக்கும்.

பண்ணையில் 500 ஆடுகளை வளர்த்து குறைந்தபட்சம் ஆண்டுக்கு 3000 ஆடுகள் வரை  கிடைக்க வாய்ப்புள்ளது. ஓர் ஆடு சராசரியாக 18 முதல் 20 கிலோ வரை இருக்கும். ஆடுகளை எண்ணிக்கை அடிப்படையில் விற்பனை செய்வதில்லை. எடையின் அடிப்படையில் விற்பனை செய்ய.

கிலோ ரூபாய் .300 என விலை நிர்ணயித்தால். ஓரு ஆடு ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனை. அப்படியென்றால் 500 ஆடுகள் மூலம் குறைந்தபட்சம் ஓராண்டில் 3 ஆயிரம் ஆடுகள் கிடைக்கின்றன. இவற்றை குறைந்தபட்சமாக ஆண்டொன்றுக்கு ரூபாய்.4 ஆயிரம் என விற்பனை செய்தால் கூட ஆண்டுக்கு ரூபாய். 1 கோடி முதல் ஓன்றகால் கோடி வரை வருமானம்.

இதில், தொழிலாளர்களின் கூலி, ஆடுகளின் தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவு உழைப்பு அனைத்தயும் கழித்துப் பார்த்தால் கூட குறைந்தபட்சம் ரூபாய் .75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை தாராளமாக வருவாய்.குறைந்தபட்சம் 7 ஏக்கர் நிலம் வேண்டும், தரமான ஆட்டுக்குட்டிகளை வாங்கி, முறையாகப் பராமரித்தால் எண்ணிய லாபத்தை ஈட்ட முடியும்.

ஆடுகளுக்கு கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, கடலை உமி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துப் பொருள்களை வாங்கி, இவற்றை இயந்திரத்தில் அரைத்து ஆடுகளுக்கு வழங்குகின்றனர்.  நிலத்தில் ஆடுகளுக்காக மேய்ச்சல் நிலங்களில் தரமான  வகை புல் ரகங்களை வளர்த்து வர.

இவற்றை வாரத்தின்  நாள்களுக்கேற்றவாறு பிரித்து ஆடுகளை ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு பகுதியில் மேய விடுதல்.

கருத்தறித்த ஆடுகளை, மற்ற ஆடுகளில் இருந்து தனியாக பிரித்து அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்குவது. இதேபோல, குட்டி ஈன்ற ஆடுகளையும், அதன் குட்டிகளையும் தனித்தனியாக பிரித்து வைத்து பராமரித்தல். முறையான கால இடைவெளியில் அவற்றுக்கு தடுப்பூசி போன்றவை அளிப்பதால்  பண்ணையிலுள்ள ஆடுகள் மிகுந்த ஆரோக்கியமாக இருக்கும். 

ஆடுகள் சுகாதாரமான முறையில் வாழ, அவற்றின் கூண்டுகளை தரையில் இருந்து 6 அடி உயரத்தில் இரும்புச் சட்டங்கள் அமைத்து, அதில் யூக்ளிப்டஸ் எனும் மலைப் பகுதிகளில் வளரும் தைல மரங்களைக் கொண்டு, மரச்சட்டங்களை தரைத்தளமாக அரை அங்குல இடைவெளியில் அமைத்ததன் மூலம் ஆடுகளின் புழுக்கை போன்ற கழிவுகள் கீழே விழுந்துவிடும். அவற்றை சேகரித்து உரமாக பயன்படுத்தலாம். ஆடுகளும் நல்ல காற்றோட்டமான, சுகாதாரமான சூழலில் வசிக்க இயலும். ஆடு வளர்ப்பே நல்ல லாபம் தரும்  பிரதான தொழிலாகும். விவசாயிகள் விவசாயத்தை மட்டும் சார்ந்திருக்காமல், தங்களிடம் உள்ள நிலம் மற்றும் மூலதனத்தைப் பொறுத்து, ஆடு, வளர்ப்பு போன்ற தொழில்களிலும் ஈடுடவேண்டும் என மற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்த, ஆடு வளர்ப்பது குறித்து இணைய வகுப்புகளும்  நடத்தப்படும் இவ்வகுப்பில் ஆடு வளர்ப்பு தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்து மற்றவர்களையும் இத்தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள்.

விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருள்களுக்கு எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பதால், 5 ஏக்கர் நல்ல நீர் வசதியுள்ள நிலம் மட்டும் இருந்தால் போதும், விவசாயி, யாரையும் எதிர்பார்த்து வாழத் தேவையில்லை, தற்சார்புடன் வாழலாம் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...