வெள்ளாட்டுப் பண்ணையும் விவசாயிகளின் தற்சார்பு பொருளாதார உயர்வும்.தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
செய்தியாளர்:- எஸ்.மணிகண்டன், நாகபட்டினம். வெள்ளாட்டுப் பண்ணையும் விவசாயிகளின் தற்சார்பு பொருளாதார உயர்வும்... கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தஞ்சா
வூர் இணைய வழியில் நடத்தும் கால்நடை பண்ணையாளர்களுக்கு வெள்ளாடு பண்ணை முறை வளர்ச்சி.
மாமிச பிரியர்களால் பெரிதும் விரும்பப்படுவது வெள்ளாட்டிறைச்சி என்றால் அது மிகையல்ல. சந்தையில் ஒரு கிலோ வெள்ளாட்டிறைச்சியின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதை அறிவோம். இந்த சூழ்நிலை இளைய தலைமுறை தொழில் முனைவோர்களை வெள்ளாட்டுப் பண்ணையம் நோக்கி ஈர்க்கிறது. அவர்களுக்கு வழிகாட்டும் பொருட்டு தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் இணையவழி சந்திப்பு ஒன்றை கூகுள் வழியாக நிகழ்த்தப்படவுள்ளது
தலைப்பு: வெள்ளாட்டுப் பண்ணையம் தொழில் முனைவோர்கள்: செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்
சந்திப்பு நாள்: 11.06.2021. நேரம்: காலை 11 மணி முதல் 12 மணி வரை
சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/sdu-ojmv-erb
சந்திப்பிற்கான குறியீடு: 28317
தொழில் முனைவோர்கள் அனைவரும் இணையவழி சந்திப்பில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
மேலும் தொடர்புக்கு: தொலைபேசி; 9566082013 ஆகும். ஆடுகளில் இரு வகைகள். செம்மறியாடு வகை ஆண்டுக்கு 1 முறை, 1 குட்டி மட்டுமே ஈனும். ஆனால் வேகமாக வளரும், விரைவில் அதிக எடை உடையதாகவும்.
வெள்ளாடுகள் ஆண்டுக்கு 2 முறை, ஓவ்வொரு ஆடும் 2 குட்டிகளை ஈனும். இதில் முதலில் ஈன்ற குட்டி அடுத்த 6 மாதங்களில் கருத்தரித்து குட்டி ஈனும். இவ்வாறு நாம் குறைந்தபட்சம் கணக்கிட்டால் 1 வெள்ளாட்டின் மூலம் ஆண்டுக்கு 6 குட்டிகள் வரை கிடைக்கும்.
பண்ணையில் 500 ஆடுகளை வளர்த்து குறைந்தபட்சம் ஆண்டுக்கு 3000 ஆடுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ஓர் ஆடு சராசரியாக 18 முதல் 20 கிலோ வரை இருக்கும். ஆடுகளை எண்ணிக்கை அடிப்படையில் விற்பனை செய்வதில்லை. எடையின் அடிப்படையில் விற்பனை செய்ய.
கிலோ ரூபாய் .300 என விலை நிர்ணயித்தால். ஓரு ஆடு ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனை. அப்படியென்றால் 500 ஆடுகள் மூலம் குறைந்தபட்சம் ஓராண்டில் 3 ஆயிரம் ஆடுகள் கிடைக்கின்றன. இவற்றை குறைந்தபட்சமாக ஆண்டொன்றுக்கு ரூபாய்.4 ஆயிரம் என விற்பனை செய்தால் கூட ஆண்டுக்கு ரூபாய். 1 கோடி முதல் ஓன்றகால் கோடி வரை வருமானம்.
இதில், தொழிலாளர்களின் கூலி, ஆடுகளின் தீவனம் மற்றும் பராமரிப்புச் செலவு உழைப்பு அனைத்தயும் கழித்துப் பார்த்தால் கூட குறைந்தபட்சம் ரூபாய் .75 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை தாராளமாக வருவாய்.குறைந்தபட்சம் 7 ஏக்கர் நிலம் வேண்டும், தரமான ஆட்டுக்குட்டிகளை வாங்கி, முறையாகப் பராமரித்தால் எண்ணிய லாபத்தை ஈட்ட முடியும்.
ஆடுகளுக்கு கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, கடலை உமி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துப் பொருள்களை வாங்கி, இவற்றை இயந்திரத்தில் அரைத்து ஆடுகளுக்கு வழங்குகின்றனர். நிலத்தில் ஆடுகளுக்காக மேய்ச்சல் நிலங்களில் தரமான வகை புல் ரகங்களை வளர்த்து வர.
இவற்றை வாரத்தின் நாள்களுக்கேற்றவாறு பிரித்து ஆடுகளை ஓவ்வொரு நாளும் ஓவ்வொரு பகுதியில் மேய விடுதல்.
கருத்தறித்த ஆடுகளை, மற்ற ஆடுகளில் இருந்து தனியாக பிரித்து அவற்றுக்கு கூடுதல் கவனம் செலுத்தி, ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் வழங்குவது. இதேபோல, குட்டி ஈன்ற ஆடுகளையும், அதன் குட்டிகளையும் தனித்தனியாக பிரித்து வைத்து பராமரித்தல். முறையான கால இடைவெளியில் அவற்றுக்கு தடுப்பூசி போன்றவை அளிப்பதால் பண்ணையிலுள்ள ஆடுகள் மிகுந்த ஆரோக்கியமாக இருக்கும்.
ஆடுகள் சுகாதாரமான முறையில் வாழ, அவற்றின் கூண்டுகளை தரையில் இருந்து 6 அடி உயரத்தில் இரும்புச் சட்டங்கள் அமைத்து, அதில் யூக்ளிப்டஸ் எனும் மலைப் பகுதிகளில் வளரும் தைல மரங்களைக் கொண்டு, மரச்சட்டங்களை தரைத்தளமாக அரை அங்குல இடைவெளியில் அமைத்ததன் மூலம் ஆடுகளின் புழுக்கை போன்ற கழிவுகள் கீழே விழுந்துவிடும். அவற்றை சேகரித்து உரமாக பயன்படுத்தலாம். ஆடுகளும் நல்ல காற்றோட்டமான, சுகாதாரமான சூழலில் வசிக்க இயலும். ஆடு வளர்ப்பே நல்ல லாபம் தரும் பிரதான தொழிலாகும். விவசாயிகள் விவசாயத்தை மட்டும் சார்ந்திருக்காமல், தங்களிடம் உள்ள நிலம் மற்றும் மூலதனத்தைப் பொறுத்து, ஆடு, வளர்ப்பு போன்ற தொழில்களிலும் ஈடுடவேண்டும் என மற்ற விவசாயிகளுக்கு அறிவுறுத்த, ஆடு வளர்ப்பது குறித்து இணைய வகுப்புகளும் நடத்தப்படும் இவ்வகுப்பில் ஆடு வளர்ப்பு தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுத்து மற்றவர்களையும் இத்தொழிலில் ஈடுபட ஊக்குவிக்கிறார்கள்.
விவசாயிகள் தங்களின் உற்பத்தி பொருள்களுக்கு எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை என்பதால், 5 ஏக்கர் நல்ல நீர் வசதியுள்ள நிலம் மட்டும் இருந்தால் போதும், விவசாயி, யாரையும் எதிர்பார்த்து வாழத் தேவையில்லை, தற்சார்புடன் வாழலாம் .
கருத்துகள்