பாமக நிறுவனர் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்புப் பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம் என மின்துறை அமைச்சர் சாடல்
தமிழ்நாடு மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் அறிவிப்பில் கூறியுள்ளதாவது:. கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்பது மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள்
நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன - என்று இதனையும் ஒரு காரணமாகச் சொன்னேன்.
அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் பாமக நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்புப் பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்!
அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்!
பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள்.
எந்தச் சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று!
திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்!
83553 இடையூறு மரக்கிளைகள்
36737 பழுது மின் கம்பங்கள்
25260 சாய்ந்த மின் கம்பங்கள்
29995 தாழ்வு மின் கம்பிகள்
32164 தாங்கு மின் கம்பிகள்
1023 பழுது மின் பெட்டிகள்
33356 பழுது இன்சுலேட்டர்கள்
1030 துணை மின் நிலையங்கள்..
இவைகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒன்பது மாதங்களாக எவ்வித பராமரிப்பும் செய்யப்படாமலிருந்து
அவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டிய. பராமரிக்க வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது..,
இவற்றை சரி செய்தால்தான் தங்கு தடையற்ற மின்சாரம் கிடைத்திடும்.
இதன் காரணமாக ஜூன் மாதம் 19 ஆம் தேதி துவங்கி பத்து நாட்கள் பகுதி வாரியாகப் பிரித்து பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது...
அப்பொழுது அந்தந்த பகுதியில் மட்டும் 2 மணி நேரம் மின்சாரம் இருக்காது.எனபது அமைச்சர் தரப்புத் தகவல்
கருத்துகள்