பிரதமர் அலுவலகம் ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவாமயானந்தாஜி மகாராஜின் மறைவிற்கு பிரதமர் இரங்கல் ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவாமயானந்தாஜி மகாராஜின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
“சமூக அதிகாரமளித்தலில் கவனம் செலுத்தும் ஏராளமான பொதுசேவை முன்முயற்சிகளில் ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவாமயானந்தாஜி மகாராஜ் தீவிரமாக ஈடுபட்டார். கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத் துறைகளில் அவர் அளித்த பங்களிப்புகள் என்றும் நினைவுக் கூரப்படும். அவரது மறைவினால் மிகவும் துயரமடைந்தேன். ஓம் சாந்தி”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளார். மேலும்
திரு அம்ருத்பாய் கடிவாலாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“ஆர் எஸ் எஸ்-ன் குஜராத் பிராந்திய தலைவரான திரு அம்ருத்பாய் கடிவாலாவின் மறைவால் துயருற்றேன். அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுக் கூறப்படும். அவரது ஆத்மா சாந்தியடைய மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்... ஓம் சாந்தி,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்