முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மூத்த தலைவர்கள் குறித்து அவதூறு கிஷோர் கே.சுவாமி கைது

சமூக வலைதளத்தில் முன்னால் முதலமைச்சர்கள் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டதாக கிஷோர் கே.சாமி கைது; 3 பிரிவுகளில் வழக்கு, நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு!கிளப் கவுஸில் 7 நாட்களுக்கும் மேலாக "அரேஸ்ட் கிஷோர் கே சாமி"எனும் தலைப்பில் தான் கிஷோர் பேசினார்



அவதூறு பரப்பியதாக காஞ்சிபுரம் வடக்கு திமுக ஐடி விங் சார்பில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஐ.டி விங் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கடந்த 10 ஆம் தேதி புகார் கொடுத்திருந்தார். தமிழக முன்னாள் முதல்வர்கள் குறித்தும், தற்போதய தமிழக முதல்வர் குறித்தும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சகர் என்ற போர்வையில் தொடர்ந்து அவதூறான கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால், கிஷோர் கே சுவாமி மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். 

இந்த புகாரின் பேரில் கிஷோர் சுவாமி சங்கர் நகர் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தாம்பரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்தார் நீதிபதி. இதையடுத்து கிஷோர் சாமி, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை யினர் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 153 பிரிவின்கீழ் கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b) பிரிவின்கீழ், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், செக்ஷன் 505( 1) (c) படி ஒரு சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என மொத்தம் 3 பிரிவுகளில் கிஷோர் கே சுவாமி மீது வழக்கு பாய்ந்துள்ளது.

 @sansbarrier என்ற இவரது டுவிட்டர் கணக்கு மூலமாக தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வந்தார். வலதுசாரி எண்ணம் கொண்டவராவார். திமுக தலைவர்களை மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தது வாடிக்கையாகவே இருந்தது. இவர் சென்னை கே.கே.நகர் சிவன் பார்க் அருகில் வசிக்கும் நபராவார்.மதுப் பழக்கம் கொண்டவர்.

தமிழகத்தின் முன்னோடியான தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பிய யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் கைதுக்கு பின் கிளப் ஹவுஸ் தளத்தில் அவர் நடத்திய சமீபத்திய வாதங்களும் முக்கிய காரணமாகின்றன.

பாஜக ஆதரவாளராக முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் மாறிய நபர் கிஷோர்.கே.சாமி   கைது

பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைப் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டதாக யூ டியூபர் கிஷோர் கே சாமி கைது செய்யப்பட்டார். அதேபோல், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாகவும் இவர் மீது சில வருடங்களுக்கு முன் புகார் வைக்கப்பட்டது.

அப்போதே இவரை கைது செய்ய வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன ஆனால் இவர் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 அவதூறு பேச்சு காரணமாக 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

 திமுக ஆட்சிக்கு வந்தவுடனே, முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள் என்று பல முறை கிஷோர் கே சுவாமி சமூக வலைத்தளங்களில் சவால் விட்டு வந்தார் . தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமாரிடம், தன்னைக் கைது செய்யும்படி சவால் விட்ட நிலையில் தமிழ்நாடு அரசு, இவரை தேவையில்லாத காரணங்களுக்கு எல்லாம் கைது செய்ய முடியாது என்பதால், அமைதி காத்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அறிஞர் அண்ணா குறித்து இவர் பதிவிட்ட தவறான போஸ்ட் ஒன்று  சர்ச்சையானது. இந்த போஸ்டை தொடர்ந்து கிஷோர் கே சாமி சார்பாக கிளப் ஹவுஸ் தளத்தில் விவாதம் ஒன்றும் நடந்தது.

கிளப் ஹவுஸ் செயலியில், கிஷோர் கே சாமியை கைது செய்ய வேண்டும் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. இதை நடத்தியதே கிஷோர் கே சாமிதான் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னை முடிந்தால் கைது செய்யுங்கள் என்று கிஷோர் கே சாமி அதில் சவால் விட்டார். அவரின் ஆதரவாளர்கள் சிலரும்கூட கிஷோர் கே சாமிக்கு ஆதரவாகப் பேசி இருந்தனர்.

என்னை எல்லாம் கைது செய்ய முடியாது என்பது போல இந்த கிஷோர் கே சாமி வாதத்தில் சவால் விட்டு இருந்தார். இந்த தலைப்பில் ஒரு நாள் மட்டுமல்ல இரண்டு நாட்கள் வாதம் நடந்தது. தலைவர்களை பற்றி ஒரு நபர் பொய்யான அவதூறு பேசிவிட்டு, துணிச்சலாக கிளப் ஹவுசில் இப்படி சவாலும் விட்டது பரபரப்பானது. பொறுமையாக இருந்த தமிழ்நாடு அரசு இந்த கிளப் ஹவுஸ் வாதத்திற்கு பின்புதான் காவல்துறை இவரை இன்று காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து ஜூன் 28 வரை செங்கல்பட்டு சிறையில் அடைக்கும் வகையில் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...