முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரதமர் இன்று வாரணாசி சென்று.வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்

பிரதமர் அலுவலகம் இன்று பிரதமர் வாரணாசி சென்றார்

ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் திறந்து வைத்து, அடிக்கல் நாட்டினார் .இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாரணாசிக்குப் பயணம் மேற்கொண்டார். தமது பயணத்தின் போது பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.

முற்பகல் 11 மணிக்கு, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவு, கோடௌலியாவில் பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்தம், கங்கை ஆற்றில் சுற்றுலா வளர்ச்சிக்கான ரோ ரோ கப்பல்கள், வாரணாசி காசிபூர் நெடுஞ்சாலையில் மூன்று வழி மேம்பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல திட்டங்களை பிரதமர் திறந்து வைத்தார். ரூ. 744 கோடி மதிப்பிலான திட்டங்கள் பயன்பாட்டிற்கு வரும். மேலும் ரூ. 839 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் மற்றும் பொது பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மத்திய பெட்ரோ ரசாயனங்கள் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் திறன் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மையம், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 143 ஊரக திட்டங்கள், கார்கியான்வில் ஒருங்கிணைக்கப்பட்ட மாம்பழம் மற்றும் காய்கறி கிடங்கு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

பகல் 12:15 மணிக்கு, ஜப்பான் ஆதரவுடன் கட்டமைக்கப்பட்டுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையமான ருத்ராக்ஷை பிரதமர் திறந்து வைத்தார். அதன்பிறகு, பிற்பகல் 2 மணிக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தாய் மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவை அவர் ஆய்வு செய்தார். மேலும் கொவிட் தொடர்பான தயார்நிலை குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். 









கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், காசி மற்றும் உத்தரப் பிரதேசம் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்

பூர்வாஞ்சல் பகுதியின் மிகப் பெரிய மருத்துவ மையமாக காசி மாறிவருகிறது

கங்கை தாய் மற்றும் காசியின் சுத்தம் மற்றும் அழகுதான் விருப்பம் மற்றும் முன்னுரிமை: பிரதமர்

இப்பகுதியில் ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைப்பெறுகின்றன: பிரதமர்

உத்தரப் பிரதேசம் நாட்டின் முன்னணி முதலீடு தலமாக வேகமாக வளர்ந்து வருகிறது: பிரதமர்

சட்ட விதிகள் மற்றும் வளர்ச்சி மீதான கவனம் ஆகியவை இத்திட்டத்தின் பயன்களை உத்தரப் பிரதேச மக்கள் பெறுகின்றனர் என்பதை உறுதி செய்கிறது: பிரதமர்

கொரோனா தொற்றுக்கு எதிராக உத்தரப் பிரதேச மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பிரதமர் நினைவுபடுத்தினார்

வாரணாசியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை,  பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.  பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவ வசதி,  கொதௌலியாவில் பல அடுக்கு வாகன நிறுத்தம், கங்கை ஆற்றில் படகு போக்குவரத்து, வாரணாசி - காசிபூர் நெடுஞ்சாலையில் 3 வழி பாலம் உட்பட பல பொது திட்டங்கள்  மற்றும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.  இந்த திட்டங்களின் மதிப்பு சுமார் ரூ.744 கோடி.

ரூ.839 கோடி மதிப்பிலான பல திட்டங்கள் மற்றும் பொதுப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பெட்ரோ கெமிக்கல் மற்றும் தொழில்நுட்ப மத்திய மையத்தின் (CIPET) திறன் மற்றும் தொழில்நுட்ப உதவி மையம், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 143 ஊரக திட்டங்கள், கர்க்கியான் பகுதியில் மாம்பழம் மற்றும் காய்கறிகளின் ஒருங்கிணைந்த பேக்கிங் இல்லம் ஆகியவை இந்த திட்டங்களில் அடங்கியுள்ளன. 

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கடந்த சில மாதங்களாக, மாறுபட்ட கொரோனா வகை முழு வீச்சில் தாக்கியதை நினைவுக் கூர்ந்தார்.  இந்த சவாலை எதிர்கொள்வதில் உத்தரப் பிரதேசம் மற்றும் காசி மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். தொற்றை எதிர்கொள்வதில் உத்தரப் பிரதேச அரசு மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் புகழ்ந்தார்.  காசியில் கொரோனாவுக்கு எதிரான பணியில் இரவு, பகலாக செயல்பட்டு ஏற்பாடுகளை செய்த குழுவினர் மற்றும் நிர்வாகத்தினரையும் அவர் பாராட்டினார். ‘‘சிக்கலான நாட்களிலும், காசி ஓயாமல் பணியாற்றியது’’ என பிரதமர் குறிப்பிட்டார்.  கொவிட் இரண்டாம் அலையை கையாண்டதை, இதற்கு முன்  அழிவை ஏற்படுத்திய  மூளை  தொற்று பாதிப்புடன்  அவர் வேறுபடுத்தினார்.  மருத்துவ வசதிகள் மற்றும் அரசியல் விருப்பம் இல்லாத நிலையில் சிறு சவால்கள் கூட, பெரியளவில் உருவெடுக்கும். இன்று உத்தரப் பிரதேசத்தில், அதிக எண்ணிக்கையில் கொவிட் பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி பணிகள் நடைப்பெறுகின்றன என பிரதமர் கூறினார்.

உத்தரப் பிரதேசத்தில், விரைவாக மேம்படுத்தப்பட்டு வரும் மருத்துவ கட்டமைப்புகளை திரு நரேந்திர மோடி விவரித்தார்.  மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரித்துள்ளது.  பல மருத்துவ கல்லூரிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.  உத்தரப் பிரதேசத்தில் 550 ஆக்ஸிஜன் ஆலைகள் அமைக்கப்படுவதாகவும்,  அவற்றில் 14 இன்று தொடங்கப்பட்டதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார்.

குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளை அதிகரிக்க மாநில அரசு மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.  சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரூ.23,000 கோடி நிதியுதவி, உத்தரப் பிரதேசத்துக்கு உதவும் என அவர் கூறினார்.  பூர்வாஞ்சல் பகுதிக்கு, காசி மிகப் பெரிய மருத்துவ மையமாக மாறிவருகிறது என்றும் பிரதமர் கூறினார்.  முன்பு தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் மட்டும் கிடைத்த சிகிச்சைகள் தற்போது காசியில் கிடைக்கின்றன என அவர் கூறினார்.  இன்று தொடங்கப்பட்ட சில திட்டங்கள், வாரணாசியின் மருத்துவ கட்டமைப்பை மேலும் அதிகரிக்கும்.

பழங்கால காசி நகரில்  பல திட்டங்கள் பாதுகாப்புடன் நடந்து வருவதாக பிரதமர் கூறினார்.  நெடுஞ்சாலை, மேம்பாலம், ரயில்வே பாலங்கள், பாதாள வயரிங், குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினைகளை தீர்ப்பது போன்ற திட்டங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு இதற்கு முன் இல்லாத வகையில் அழுத்தம் கொடுக்கிறது. ‘‘தற்போது கூட ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்கள் நடைப்பெற்று கொண்டிருக்கின்றன’’ என பிரதமர் கூறினார்.

கங்கை மற்றும் காசியின் தூய்மை மற்றும் அழகு ஆகியவை  விருப்பமாகவும், முன்னுரிமையாகவும் இருக்கிறது.  இதற்காக, சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு, பூங்காக்கள் மற்றும் படித்துறைகள் அழகுபடுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  பாஞ்ச்கோஷி மார்க்கை அகலப்படுத்துவது, வாரணாசி காசிபூரில் பாலம் ஆகியவை பல கிராமங்கள் மற்றும் அதனையொட்டியுள்ள நகரங்களுக்கு உதவும் என பிரதமர் கூறினார்.

காசி முழுவதும் பொருத்தப்பட்டுள்ள பெரிய எல்இடி திரைகள் மற்றும் படித்துறைகளில்  உள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் பலகைகள்  பார்வையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.  இந்த எல்இடி திரைகள் மற்றும் தகவல் பலகைகள், காசியின் வரலாறு, கட்டிடக்கலை, கைவினைப் பொருட்கள், கலை போன்ற தகவல்களை பக்தர்களுக்கு கவரும் வகையில் அளிக்கும். 

காசி விஸ்வநாத் கோயிலில் உள்ள  கங்கை நதியின் படித்துறையில் நடக்கும் ஆரத்தி ஒளிபரப்பை, நகரத்தில் உள்ள அனைத்து பெரிய திரைகளிலும் காட்ட முடியும்.  இன்று தொடங்கப்பட்டுள்ள படகு சேவைகள், சுற்றுலாவை ஊக்குவிக்கும் மற்றும் ருத்ராட்ச மையம், இந்நகரத்தின் கலைஞர்களுக்கு உலகத் தரத்திலான தளத்தை அளிக்கும்.

காசியை, நவீன கால கற்கும் மையமாக மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் பேசினார்.  இன்று காசியில் மாதிரி பள்ளி, ஐடிஐ மற்றும் பல நிறுவனங்கள் உள்ளன. சிபெட் மையத்தின் திறன் மற்றும் தொழில்நுட்ப உதவி மையம், இப்பகுதியில் தொழில் வளர்ச்சிக்கு உதவும். நாட்டின் முன்னணி முதலீட்டு தலமாக உத்தரப் பிரதேசம் வேகமாக வளர்ந்து வருகிறது என பிரதமர் கூறினார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வர்த்தகம் செய்வதற்கு சிரமமான இடமாக உத்தரப் பிரதேசம் இருந்தது. தற்போது மேக் இன் இந்தியா திட்டத்துக்கு மிகச் சிறந்த இடமாக மாறி வருகிறது.  சமீபகாலமாக உத்தரப் பிரதேசத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில்,  யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார்.  பாதுகாப்பு வளாகம், பூர்வாஞ்சல் விரைவுச் சாலை, பண்டல்கண்ட் நெடுஞ்சாலை, கோரக்பூர் நெடுஞ்சாலை, கங்கா விரைவுச் சாலை போன்ற திட்டங்கள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் திரு நரேந்திர மோடி பட்டியலிட்டார்.

நாட்டின் வேளாண் கட்டமைப்பை நவீனப்படுத்த ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதி உருவாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இது நமது வேளாண் சந்தைகளுக்கும் பயனளிக்கும்.  நாட்டின் வேளாண் சந்தைகளை நவீனமாக மாற்றுவதில்  இது மிகப் பெரிய நடவடிக்கையாகும்.

உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ள புதிய வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்ட பிரதமர்,  இதற்கு முன்பும், திட்டங்கள் மற்றும் நிதிகள் திட்டமிடப்பட்டதாகவும், ஆனால், அவற்றுக்கு லக்னோவில் தடை விதிக்கப்பட்டதாகவும்  கூறினார்.  வளர்ச்சியின் முடிவுகள் அனைவருக்கும் சென்றடைவதை உறுதி செய்ய, உத்தரப் பிரதேச முதல்வர் மேற்கொண்ட முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். 

உத்தரப் பிரதேசத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக பிரதமர் கூறினார். ஒரு காலத்தில் மாபியா மற்றும் தீவிரவாதம் கட்டுப்பாடின்றி இருந்ததாகவும், தற்போது அவை சட்டத்தின் பிடியில் உள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

சகோதாரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் அச்சத்துடன் இருந்த நிலை  எல்லாம் தற்போது மாறிவிட்டதாக பிரதமர் கூறினார்.   இன்று உத்தரப் பிரதேச அரசு, வளர்ச்சியில் இயங்குகிறது என்றும், ஊழல் மற்றும் உறவினர்களுக்கு சலுகை போன்றவற்றால் இயங்கவில்லை எனவும் பிரதமர் கூறினார்.  அதனால்தான், உத்தரப் பிரதேசத்தில், திட்டங்களின் பயனை மக்கள் நேரடியாக பெறுகின்றனர். அதனால்தான் இன்று, புதிய தொழிற்சாலைகள் உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்கின்றன, வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என பிரதமர் கூறினார்.

கொரோனா மீண்டும் வலுப்பெற உத்தரப் பிரதேச மக்கள் அனுமதிக்க கூடாது என பிரதமர்  நினைவூட்டினார்.  கொரோனா தொற்று தற்போது குறைந்திருந்தாலும், கவனம் இன்றி இருந்தால், மிகப் பெரிய அலையை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார். கொவிட் நெறிமுறைகளை ஒவ்வொருவரும் கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும், அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த