உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குறைந்தால் 155260 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம் சைபர் பிரிவு காவல்துறை தகவல்.
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் குறைந்தால் 155260 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம் சைபர் பிரிவு காவல்துறை தகவல்.
வேலூர் மாவட்டத் திலுள்ளவர்களின் வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் பாதுகாப்பான பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் பொருட்டு ஓடிபி
மூலமாக பரிவர்த்தனைகள் மேற் கொள்வது வழக்கம். இதனை தவறாகப் பயன்படுத்தி உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் பயப்பட வேண்டாம். உடனடியாக 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு பணப் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களைத் தெரிவித்தால் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்களால்
எடுக்கப்பட்ட பணத்தை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது
இந்தச் சேவை மத்திய அரசின் உள் துறையின் மூலம் கட்டமைக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறது. இது முற்றிலும் இலவச சேவையாக வழங்கப்படுகிறது. பொது மக்கள் இச்சேவையைப்
பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் அபர்ணா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தொரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்