முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

16 மாநிலக் கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அமைச்சரவை தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (ABRY) பதிவு செய்வதற்கான கடைசி தேதியை 2021 ஜூன் 30ம் தேதியிலிருந்து, 2022 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


16 மாநிலக் கிராமங்களில் பாரத் நெட்  திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்  அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைப்பெற்றது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன.

16 மாநிலங்களில் உள்ள கிராமங்களில், பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் மாற்றியைமக்கப்பட்ட பாரத் நெட் திட்ட உத்தியை அமல்படுத்த பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மக்கள் குடியிருக்கும் அனைத்து கிராமங்களிலும், பாரத் நெட் திட்டம் நீட்டிக்கப்படும்.  இந்த மாற்றியமைக்கப்பட்ட உத்தியில், சர்வதேச ஏலப் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்கள் பாரத் நெட்  திட்டத்தை  செயல்படுத்தும்.  இதில் கண்ணாடியிழை கேபிள் மூலம் இணையதள இணைப்பு வழங்கப்படும்.  பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்கு ரூ.19,041 கோடி மானியத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகலாந்து மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 3.61 லட்சம் கிராமங்களில் இணையதள இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள மாநிலங்களில் உள்ள கிராமங்களிலும் பாரத் நெட் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடன் உத்திரவாத திட்டம்:

கொரோனா 2ம் அலை காரணமாக பாதிக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளுக்கு கடன் உத்திரவாத திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் புதிய திட்டங்கள் மற்றும் விரிவாக்க திட்டங்களுக்கு ரூ.50,000 கோடி வரை நிதி உத்திரவாதம் வழங்கப்படும்.

மேலும், அவசரகால கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ், ரூ.1,50,000 கோடி வரை கூடுதல் நிதியளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இத்திட்டம், 2022, மார்ச் 31ம் தேதி வரை அனுமதிக்கப்பட்ட தகுதியான கடன்கள் அல்லது ரூ.50,000 கோடி வரை அனுமதிக்கப்பட்ட கடன்கள், இதில் எது முன்போ  அதற்கு இந்த திட்டம் பொருந்தும்.

அவசரகால கடன் உத்திரவாத திட்டம் தொடரும் திட்டம் ஆகும். இது 30.09.2021 வரை வழங்கப்பட்ட உத்திரவாத அவசரகால கடன் திட்டம் அல்லது இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி, இதில் எது முன்போ அதற்கு இத்திட்டம் பொருந்தும்.

இந்த திட்டங்கள், நாட்டில் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

தற்சார்பு இந்தியா வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பதிவுக்கான கடைசி தேதி நீட்டிப்பு:

தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் (ABRY) பயன்களை பெறும் பயனாளிகள் பதிவு செய்வதற்கான  கடைசி தேதியை 2021 ஜூன் 30ம் தேதியிலிருந்து, 2022 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நீட்டிப்பு மூலம், முறைசார்ந்த  தொழில் துறையில்  71.8 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 79,577 நிறுவனங்கள் மூலம் 21.42 லட்சம் பயனாளிகளுக்கு 18.06.2021-ம் தேதி வரை ரூ.902 கோடி வழங்கப்பட்டுள்ளது. பதிவுக் காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் செலவு ரூ.22,098 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வேலை அளிக்கும் நிறுவனங்களின் நிதிச்சுமையை குறைக்க இபிஎப்ஓ மூலம் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அனுமதி:  

இந்தியா மற்றும் காம்பியா  குடியரசு இடையே, பணியாளர் நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை புதுப்பிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய பணியாளர் அமைச்சகத்தின் நிர்வாக சீர்திருத்த துறை மற்றும் காம்பியா குடியரசு நாட்டின் பொதுச் சேவை ஆணையம் கையெழுத்திடுகிறது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் பணியாளர் நிர்வாகத்தை புரிந்து கொள்ளவும், நிர்வாக முறையை மேம்படுத்தவும் உதவும்.

 சுகாதாரத்துறை ஆராய்ச்சியில் இந்தியா மற்றும் மியான்மர் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மியான்மர் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கடந்த பிப்ரவரி மாதம் கையெழுத்திட்டன. இரு நாடுகள் இடையே சுகாதார ஆராய்ச்சி உறவை மேம்படுத்துவதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

சுகாதார ஆராய்ச்சி துறையில் இந்தியா மற்றும் நேபாளம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நேபாள சுகாதார ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை கடந்தாண்டு நவம்பர் 17ம் தேதி மற்றும் இந்தாண்டு ஜனவரி 4ம் தேதி கையெழுத்திட்டன. கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம். இரு நாடுகளில் நிலவும் சுகாதார பிரச்சினைகள், ஆயுர்வேதம்/பாரம்பரிய மருத்துவம் மற்றும் மூலிகைகள், தொற்று அற்ற நோய்கள் ஆகியவை குறித்த ஆராய்ச்சியில் இரு நாடுகளும் கூட்டாக செயல்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த