முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கூடுதலாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது



பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் குறித்து இந்திய உணவு கழகத்தின் (தென் மண்டலம்) தலைமை இயக்குநர் திரு ஆர் டி நஸீம், தமிழக பொது மேலாளர் திரு ஜே எஸ் சிஜூ ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு கூடுதலாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று திரு நஸீம் தெரிவித்தார்.

“கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து ஏழைகளை பாதுகாப்பதற்காகவும், உணவின்றி யாரும் வாடக்கூடாது என்பதை உறுதி செய்யும் நோக்கிலும், பிரதமரின் ஏழைகள் நலன் காக்கும் இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்தை கடந்த வரும் ஏப்ரல் மாதம் இந்திய அரசு தொடங்கியது,” என்று அவர் கூறினார்.

இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம், கொரோனா இரண்டாம் அலையை கருத்தில் கொண்டு இந்தாண்டு நவம்பர் வரை மாண்புமிகு பிரதமரால் மேலும் நீட்டிக்கப்பட்டது என்று கூறிய திரு நஸீம், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தகுதியுடைய 3.57 கோடி மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ இலவச அரிசி/கோதுமை ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் கிடைக்கும் படி இத்திட்டத்தை இந்திய அரசு வகுத்துள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த இரு மாதங்களாக கூடுதல் அரிசியை தமிழ் நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பொரேஷனுக்கு கொடுத்துள்ளோம். அடுத்த ஐந்து மாதங்களுக்கு (ஜூலை முதல் நவம்பர் வரை) ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை முற்றிலும் இலவசமாக வழங்க இந்திய உணவு கழகம் தயராக உள்ளது. அவற்றை எடுத்தும் செல்லும் பணியை மாநில அரசும் தொடங்கி விட்டது என்று திரு நஸீம் கூறினார்.

தமிழ்நாட்டிற்கு சாதாரணமாகவே 3 லட்சம் டன் அரிசி மற்றும் கோதுமை தேவைப்படுவதாகவும், அதற்கு கூடுதலாக 1.78 லட்சம் டன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுவைக்கு இது வரை மூன்று கட்டங்களாக 16.5 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன (15 லட்சத்து 78 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி மற்றும் 72 ஆயிரத்து 830 மெட்ரிக் டன் கோதுமை) இதற்காக இந்திய அரசு ரூ. 7588 கோடியை செலவிட்டுள்ளது.

அடுத்த ஐந்து மாதங்களில் 9 லட்சம் டன்கள் வழங்கப்படும். இதன் மதிப்பு ரூ. 3325 கோடி ஆகும் என்று அவர் மேலும் கூறினார்.

வழக்கமாக வழங்கப்படும் உணவு தானிய வகைகளை விட இது இருமடங்கு கூடுதலான அளவு என்பதால் இதன் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் மாபெரும் சவாலாக விளங்குகிறது. இத்தகைய சவாலை எதிர்கொண்டு ஊரடங்கு கால இக்கட்டான தருணங்களில் உணவு தானியங்களை மாநிலத்தின் அந்தந்தப் பகுதிகளில் கொண்டு சேர்ப்பதில் இந்திய உணவுக் கழகம் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு உள்ளது என்றும் அவர் விளக்கினார்.

நடப்பாண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சுமார் 36 லட்சம் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் உள்ள இந்திய உணவுக் கழக கிடங்குகளில் மாநில அரசு 17 லட்சத்து 6 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை சேமித்து வைக்கக்கூடிய அளவிற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் திரு நஸீம் கூறினார்.

நாடு முழுவதும் உணவு தானிய விளைச்சல் மிகச் சிறப்பாக இருப்பதால் வரும் மாதங்களில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதில் எந்தவித சிரமமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 19 லட்சத்து 44 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் அரிசியும் 75 ஆயிரத்து 776 டன் கோதுமை பஞ்சாபில் இருந்தும் தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்தத் திட்டத்திற்காக கூடுதலாக இந்த உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. கையிருப்பில் 30 லட்சம் டன் தானியங்கள் உள்ளன. திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த இந்த கூடுதல் தானியங்கள் உதவும் என்று அவர் தெரிவித்தார்

செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிகை தகவல் அலுவலகம், சென்னை, இயக்குநர், திரு குருபாபு பலராமன் உடனிருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த