முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குழந்தைத் திருடர்களுக்கு 2019 ஆம் ஆண்டில் விருது வழங்கிய முன்னால் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி

கொரோனாவில் இறந்ததாக நாடகமாடி, காப்பகத்திலிருந்த 2 குழந்தைகளை விற்பனை செய்த 4 பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்து



காவல்துறையினர்விசாரித்து வருகின்றனர். தலைமறைவான காப்பக உரிமையாளர் சிவக்குமார் உள்ளிட்ட இருவரைத் தேடும் தனிப்படை சென்னையில் முகாமிட்டுள்ளனர்.  மதுரையிலுள்ள இதயம் டிரஸ்ட் நடத்தும் காப்பகத்தில் சமூக ஆர்வலராகச் சேர்த்த ஆதரவற்ற பெண் ஐஸ்வர்யாவின் ஒரு வயது ஆண் குழந்தை கொரோனாவால் இறந்து விட்டதாகப் போலி ஆவணம் தயாரித்து காப்பக உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் கொடுத்துள்ளனர். இது தெரிந்து அசாருதீன் என்பவர் குழந்தையை மீட்டுத்தரும்படி மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் புகார் அளித்தார்.



ஆட்சியர் உத்தரவில் தனிப்படை காவல்துறை, காப்பக நிர்வாகிகளில் ஒருவரான கலைவாணியை பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில் ஐஸ்வர்யாவின் ஆண் குழந்தை மாணிக்கம் மதுரை இஸ்மாயில்புரம் 4 வது தெரு கண்ணன் - பவானி தம்பதியிடமிருந்து மீட்கப்பட்டது. கண்ணன் மதுரை மேல ஆவணி மூல வீதியில் நகைக்கடை நடத்துகிறார். இந்தத் தம்பதியிடம், ஐஸ்வர்யாவின் குழந்தை மாணிக்கத்தை காப்பக உரிமையாளர்  சிவக்குமார், ருபாய் ஐந்து லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.  இதே போல் மதுரை கல்மேடு பகுதியை சேர்ந்த அனீஸ் ராணி - சாதிக் தம்பதியிடம் விற்கப்பட்ட  கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீதேவியின் மற்றொரு இரண்டு வயதான பெண் குழந்தை தீபா என்ற தனம்மாளையும் மீட்டனர்

முறையான தத்து எடுக்காமல் சட்ட விரோதமாகக் குழந்தைகளை வாங்கிய கண்ணன் (வயது 50), மனைவி பவானி (வயது 45) மற்றும் அனீஸ் ராணி (வயது 36), கணவர் சாதிக் (வயது 38), காப்பக ஊழியர் கலைவாணி (வயது 36) மற்றும் குழந்தை விற்பனைக்கு புரோக்கராகச் செயல்பட்ட மதுரையைச் சேர்ந்த செல்வி, ராஜா ஆகிய ஏழு நபர்களை காவல்துறை கைது செய்தனர். காப்பகத்திலிருந்த வருகைப் பதிவேட்டில் 16 குழந்தைகளின் பெயர்களிருந்தது தெரிந்தது. இந்தப் பட்டியல்படி இரு குழந்தைகள் மீட்கப்பட்டபோதும், மேலும் 14 குழந்தைகளின் நிலை பற்றித் தெரியவில்லை. இந்தக் குழந்தைகளும் விற்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

மதுரை காவல்துறை அதிகாரி கூறுயபோது,‘காப்பகத்தை சிவக்குமார் 12 வருடங்களாக பதிவு செய்யாமல் நடத்தி வந்துள்ளார். மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளிடம்  தொடர்பு வைத்துக் கொண்டு, காப்பகத்திற்கென பெரிய தொகையை பலரிடமும் வசூல் செய்துள்ளார். காப்பகத்தில் 134 பேர் இருந்தனர். இதில் 26 முதியவர்கள் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் பல்வேறு அரசு, தனியார் இல்லங்களிலும்  தங்க வைக்கப்பட்டு, காப்பகம் சீலிடப்பட்டது.  காப்பக உரிமையாளர் சிவக்குமார், நிர்வாகி மதார்ஷா தலைமறைவாகியுள்ளனர். இவர்களைத் தேடி இரண்டு தனிப்படைக் காவல்துறை சென்னை விரைந்துள்ளன. சிவகுமாரின் செல்போன் சிக்னல் விழுப்புரம் - சென்னை இடையே காட்டுகிறது.

அவ்வப்போது செல்போனில் சிம் கார்டுகளை மாற்றிப் பயன்படுத்தி வருகிறார். மதார்ஷா செல்போனை அணைத்து வைத்துள்ளார். இருவரும் ஓரிரு நாளில் கைதாவார்கள்’’ என்றார். வழக்குரைஞர் முத்துக்குமார் கூறும்போது,‘காப்பக உரிமையாளர் கடந்த ஆட்சியில் அமைச்சர் ஒருவரிடம் ரூபாய் ஐந்து லட்சம் நிதி பெற்றுள்ளார். அதற்கு முறையாக கணக்குக் கொடுக்கவில்லை. குழந்தை விற்பனை நடந்திருப்பதால், வழக்கை சிபிசிஐடி காவல் பிரிவுக்கு மாற்ற வேண்டுமென்றார்.

காப்பக நிர்வாகியான குழந்தை திருட்டில் தொடர்புடைய கலைவாணிக்கு மாநில அளவில் சிறந்த சேவைக்கான.?! விருதினை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இதற்கும் முன்னதாக இந்த காப்பகத்தில் பணிபுரிந்த அருண்குமார் என்பவரும் மாநில விருது பெற்றுள்ளார். இதுதவிர மற்ற தலைமறைவான மேலும் ஒரு நிர்வாகி மதார்ஷாவிற்கு இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று  மாநில விருது வழங்குவதற்காக சமூக நலத்துறை, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை அனுப்பி வைத்துள்ளது. இந்த நிலையில் குழந்தை விற்பனையில் இந்த காப்பகம் சீல் வைக்கப்படும் நிலைக்குளாகியுள்ளது.

மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்த அனீஸ் ராணி- சாதிக். சில்வர் பட்டறை வைத்துள்ள தம்பதியிடம்  ரூபாய். 3 லட்சம் பணம், ஒன்றரை லட்சம்  செலவில் காப்பகத்தில் ஒரு ஷெட் போட்டுத் தரவும் ஒப்புதல் பெற்று 2 வயதுக் குழந்தை தீபாவை இவர்கள் விற்றுள்ளனர். குழந்தையை விலைக்கு வாங்கி அந்தத் தம்பதியினர் கடந்த வாரம் உறவினர்களை அழைத்து மொய் விருந்து நடத்தி, காதுகுத்தி, புதிய பெயர்  வைத்திருக்கிறார்கள் தமிழ்நாடு

சமூகநலத்துறை அமைச்சர் கீதாஜீவன் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் : குழந்தைகள்  விற்பனை விவகாரம் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள தனியார் குழந்தைகள்  காப்பகங்கள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள் உள்ளிட்டவைளில் சமூக நல அலுவலர்கள் மாவட்ட வாரியாக ஆய்வு நடத்தி 15  நாட்களுக்குள் அறிக்கை தரவேண்டுமென உத்தரவிட்டுள்ளதாகவும். கள ஆய்வின்போது காப்பகங்கள்  முறையாக அனுமதி பெற்றுச் செயல்படுகிறதா? குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை  பாதுகாப்பாக உள்ளனரா என ஆய்வு செய்து தரவும் உத்தரவிட்ட தகவல் தெரிவித்தார். அறிக்கையின்  அடிப்படையில் அனுமதியின்றிச் செயல்படும் காப்பகங்கள் மீது சட்ட ரீதியான  நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் கூறும்போது, குழு அமைத்து, மாவட்டத்தின் அனைத்துக் காப்பகங்களிலும் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. காப்பகத்தில் காணாமல் போன குழந்தைகள் குறித்தும் விசாரணை  நடந்து வருகிறது. போலி ஆவணம் தயாரித்த விவகாரத்தில் அரசு ஊழியர்கள்   உடந்தையாக இருந்திருந்தால், அவர்கள் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை   எடுக்கப்படும். சட்டத்திற்குப் புறம்பாக குழந்தையை யாரும் வாங்க வேண்டாம். குழந்தைகளை தத்தெடுக்க சட்டத்தில் இடமுள்ளது’’   என்றார்.           எடப்பாடி கே. பழனிச்சாமி முதல்வராக இருந்த போது 2019 ஆம் ஆண்டு இந்தத் திருடர்களைத் தேடிப் பிடித்து விருதுகள் கொடுத்த நிகழ்வு தான் இப்போது அரசியலில் லேட்டஸ்ட் டாக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...