முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவின் உலகளாவிய உச்சிமாநாடு 2021-ல் பிரதமரின் உரை

பிரதமர் அலுவலகம் கோவின் உலகளாவிய உச்சிமாநாடு 2021-ல் பிரதமரின் உரை

மேன்மைமிகு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், சுகாதார தொழில் வல்லுநர்கள் மற்றும் உலகெங்கும் உள்ள நண்பர்கள் அனைவருக்கும்

வணக்கம்!


கோவின் உலகளாவிய உச்சிமாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான நிபுணர்கள் எங்களுடன் கலந்து கொண்டிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில், அனைத்து நாடுகளிலும் பெருந்தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 100 ஆண்டுகளில் இதற்கு  ஈடான நிகழ்வு எதுவுமில்லை. எத்துணை ஆற்றல் மிக்க நாடாக இருப்பினும், அதனால் தனியே இதுபோன்ற சவாலை எதிர்கொள்ள முடியாது என்பதை அனுபவம் எடுத்துக் காட்டியுள்ளது. மனிதநேயம் மற்றும் மனித காரணங்களுக்காக நாம் ஒன்றிணைந்து பணியாற்றி, ஒன்றாக முன்னேற வேண்டும் என்பதே கொவிட்-19 பெருந்தொற்று நமக்குக் கற்றுக் கொடுத்துள்ள மிகப்பெரிய பாடமாகும். நமது சிறந்த நடைமுறைகள் பற்றி ஒருவரிடமிருந்து மற்றொருவர் கற்றுக்கொண்டு, மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். பெருந்தொற்றின் துவக்கம் முதலே இந்தப் போராட்டத்தில் எங்களது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்களை சர்வதேச சமூகத்துடன் பகிர்வதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது. பல்வேறு தடைகளையும் கடந்து எங்களால் இயன்ற அளவு உலக நாடுகளுடன் பகிர நாங்கள் முயல்கிறோம். சர்வதேச நடைமுறைகளிலிருந்து கற்றுக் கொள்ளவும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

நண்பர்களே,

கொவிட்-19 தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்தில் தொழில்நுட்பம் ஒருங்கிணைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக, மென்பொருள் என்பது வள கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு துறை. அதனால் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானதால் எங்கள் கோவிட் தடமறிதல் மற்றும் கண்காணிப்பு செயலியை திறந்த ஆதாரமாக மாற்றினோம். சுமார் 200 மில்லியன் பயன்பாட்டாளர்களுடன், இந்த ‘ஆரோக்கிய சேது' செயலி, மேம்பாட்டாளர்களுக்கான தயார்நிலையிலான தொகுப்பாக விளங்குகிறது.

இந்தியாவில் பயன்படுத்தப்படுவதால், வேகம் மற்றும் அளவிற்கு நிஜ உலகில் இது சோதனை செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.

நண்பர்களே,

பெருந்தொற்றிலிருந்து மனித சமூகம் வெற்றிகரமாக மீள்வதற்கு தடுப்பூசியே சிறந்த நம்பிக்கை. தடுப்பூசி உத்தி குறித்து திட்டமிடத் தொடங்கியது முதலே, இந்தியாவில் நாங்கள்  மின்னணு வாயிலான அணுகுமுறையை பின்பற்ற முடிவு செய்தோம். இன்றைய உலகமயமாகிய உலகில்,  பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டுமேயானால், இது போன்ற மின்னணு அணுகுமுறை அவசியமானது ஆகும். அனைத்திற்கும் மேலாக, பொதுமக்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டதை அவர்களால் நிரூபிக்கப்பட வேண்டும். அதுபோன்ற ஆதாரங்கள் பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கவேண்டும்.  எப்போது, எங்கே, யாரால் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டோம் என்ற ஆவணத்தையும் பொதுமக்கள் பெற்றிருக்க வேண்டும். தடுப்பூசியின் ஒவ்வொரு டோசின் விலைமதிப்பற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு டோசையும் தடம் அறிந்து, அவை வீணாவதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. மின்னணு அணுகுமுறை இல்லாமல் இவை அனைத்தும் சாத்தியமல்ல.

நண்பர்களே,

இந்திய நாகரிகம், உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாகக் கருதுகிறது. இந்தத் தத்துவத்தின் அடிப்படை உண்மையை ஏராளமான மக்களுக்கு பெருந்தொற்று உணர்த்தியுள்ளது. அதனால் தான் கோவின் என்று நாங்கள் அழைக்கும்  தடுப்பூசிக்கான எங்களது தொழில்நுட்பத் தளம், திறந்த ஆதாரமாக இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பல்வேறு நாடுகளிலும் அது பயன்பாட்டிற்கு வரும். உங்கள் அனைவருக்கும் இந்தத் தளத்தை அறிமுகப்படுத்துவதற்கான முதல் படியாக இந்த உச்சிமாநாடு அமைந்துள்ளது. இந்தத் தளத்தின் வாயிலாக தான் 350 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை இந்தியா செலுத்தியுள்ளது. ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 9 மில்லியன் மக்களுக்கு நாங்கள் தடுப்பூசியை செலுத்தினோம். லேசான காகிதங்களை ஆதாரமாக அவர்கள் எடுத்துச் செல்லத் தேவையில்லை. அனைத்து தகவல்களும் மின்னணு வடிவத்தில் உள்ளன. இவற்றிற்கெல்லாம் மேலாக, தங்களது உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்ற வகையில் இந்த மென்பொருளை எந்த நாட்டிற்கு தகுந்தவாறும் வடிவமைத்துக் கொள்ளலாம். இதன் தொழில்நுட்ப தகவல்கள் குறித்து இன்றைய உச்சிமாநாட்டில் விரிவாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இதனை தொடங்குவதற்கு நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எனவே உங்களை காத்திருக்கவைக்க நான் விரும்பவில்லை. ஆதலால், மிகவும் ஆக்கபூர்வமான விவாதங்கள் இன்று நடைபெறுவதற்கு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன். ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற அணுகுமுறையின் வழிகாட்டுதலின்படி இந்த பெருந்தொற்றை மனித சமூகம் நிச்சயம் வெற்றிகொள்ளும்

நன்றி. மிக்க நன்றி. என் பிரதமர அவரது கருத்திலிருந்து

கொவிட்-19ஐ எதிர்த்து போராட, உலகிற்கு டிஜிட்டல் பொது நன்மையாக கோவின் இணையளத்தை இந்தியா வழங்குவதால், கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் உரை

கோவின் இணையதளம் அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் வகையில் மாற்றித் தரப்படுகிறது: பிரதமர்

200 மில்லியன் பேர் பயன்படுத்தும் ஆரோக்கிய சேது செயலி, மேம்படுத்துபவர்களுக்கு தயார்நிலையில் கிடைக்கும் தொகுப்பாக உள்ளது: பிரதமர்

100 ஆண்டுகளில் இது போன்ற பெருந்தொற்று ஏற்படவில்லை மற்றும் எவ்வளவு பெரிய சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், இதுபோன்ற சவாலை தனியாக தீர்க்க முடியாது: பிரதமர்

நாம் இணைந்து பணியாற்றி முன்னேற வேண்டும்: பிரதமர்

தடுப்பூசி உத்திக்கு திட்டமிடும்போது, முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையை இந்தியா பின்பற்றியது: பிரதமர்

பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆதாரம், எப்போது, எங்கு, யாரால் தடுப்பூசி போடப்பட்டது என்பதை நிருபிக்க மக்களுக்கு உதவுகிறது: பிரதமர்

தடுப்பூசி பயன்பாட்டை கண்காணிக்கவும் மற்றும் வீணாவதை குறைக்கவும், டிஜிட்டல் அணுகுமுறை உதவுகிறது: பிரதமர்

‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்ற அணுகுமுறை மூலம் மனித இனம் நிச்சயம் இந்த பெருந்தொற்றை வெல்லும்: பிரதமர்

கொவிட்-19ஐ எதிர்த்து போராட,  உலகிற்கு டிஜிட்டல் பொது நன்மையாக  கோவின்  தளத்தை இந்தியா வழங்கியதால், கோவின் உலகளாவிய மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். 

அனைத்து நாடுகளிலும் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களுக்கு அவரது இரங்கலை தெரிவித்து தனது உரையை பிரதமர் தொடங்கினார். 100 ஆண்டுகளில் இது போன்ற பெருந்தொற்று ஏற்படவில்லை என்றும்,  எவ்வளவு பெரிய சக்திவாய்ந்த நாடாக இருந்தாலும், இது போன்ற  சவாலை தனியாக தீர்க்க முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 தொற்றிலிருந்து மனித இனம் கற்றுக் கொண்ட மிகப் பெரிய பாடம், நாம் இணைந்து பணியாற்றி முன்னேற வேண்டும் என்பதுதான். சிறந்த முறைகளை நாம் ஒருவருக்கொருவர் கற்று வழிகாட்ட வேண்டும் என பிரதமர் கூறினார்.

நமது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் வளங்கள்  அனைத்தையும் உலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், உலக நடைமுறைகளை கற்பதில் இந்தியா ஆர்வமாக உள்ளது எனவும் கூறினார்.

பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, மென்பொருள் என்பது வளங்கள்  தடைகள் இல்லாத ஒரு பகுதி என்றார். அதனால்தான் இந்தியா,  தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமானவுடன், தனது கோவிட் கண்காணிப்பு மற்றும் கண்டுபிடிப்பு செயலியை அனைத்து நாடுகளும்   பயன்படுத்தும் விதமாக்கியது. 200 மில்லியன் பேர் பயன்படுத்தும் ஆரோக்கிய சேது செயலி, மேம்படுத்துபவர்களுக்கு தயார்நிலையில் கிடைக்கும் தொகுப்பாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் பயன்படுத்தப்பட்டதால், இது நிஜ உலகில் வேகம் மற்றும் அதிக அளவிற்கு சோதனை செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம் என உலக பார்வையாளர்களிடம் பிரதமர் கூறினார்.

தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாகவும், இதற்கு திட்டமிடும்போது முற்றிலும் டிஜிட்டல் அணுகுமுறையை பின்பற்ற இந்தியா முடிவு செய்ததாகவும் பிரதமர் கூறினார். இது, அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க உதவுகிறது, தொற்றுக்கு பிந்தைய உலகில் இயல்புநிலையை விரைவுப்படுத்துகிறது. பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஆதாரம்,  எப்போது, எங்கு, யாரால் தடுப்பூசி போடப்பட்டது என்பதை நிருபிக்க  மக்களுக்குஉதவுகிறது. தடுப்பூசி பயன்பாட்டை கண்காணிக்கவும் மற்றும் வீணாவதை குறைக்கவும், டிஜிட்டல் அணுகுமுறை உதவுகிறது என்றும் பிரதமர் கூறினார்.

ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம் என்ற இந்திய தத்துவத்தை கருத்தில் கொண்டு, கோவின் தளம் பிறநாடுகளும் பயன்படுத்தும் வகையில் தயார்படுத்தப்படுகிறது.  விரைவில், இது எந்த உலக நாடுகளுக்கும் கிடைக்கும்.

இந்த கோவின் தளத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்த இன்றைய மாநாடு முதல் நடவடிக்கை என திரு நரேந்திர மோடி வலியுறுத்தி கூறினார். கோவின் இணையதளம் மூலம், இந்தியா 350 மில்லியன் தடுப்பூசி டோஸ்களை போட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு,  ஒரே நாளில் 9 மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், அதை நிருபிக்க எந்த துண்டு சீட்டையும் எடுத்துச் செல்லத் தேவையில்லை. அது டிஜிட்டல் வடிவிலேயே கிடைக்கிறது. 

விருப்பமுள்ள நாடுகளின் உள்நாட்டு தேவைக்கேற்ப இந்த மென்பொருளின் தனிப் பயனாக்கத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.  ‘ஒரே பூமி, ஒரே சுகாதாரம்’ என்ற அணுகுமுறை மூலம் மனித இனம் நிச்சயம் இந்த பெருந்தொற்றை வெல்லும் என்ற நம்பிக்கையுடன்  பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த