தமிழகத்தின் முதியோர் இல்லங்கள் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகளில், விதி பிரிவு 12 (3)-ன் கீழ் 31 ஜூலை 2021-க்குள் பதிவு செய்யப்பட வேண்டும்
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து முதியோர் இல்லங்களும் (கட்டணம் அல்லது கட்டணமில்லா), தனியார் அல்லது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நடத்திடும் அனைத்து முதியோர் இல்லங்களும், முதியோர்களுக்கான குத்தகை விடுதிகள் மற்றும் வாடகை விடுதிகளும் 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நல விதிகளில், விதி பிரிவு 12 (3) ன் கீழ் 31 ஜூலை 2021க்குள் பதிவு செய்யப்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும், அரசாணை (நிலை) எண்.83. சமூகநல மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 23 நவம்பர் 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள நெறி முறைகளின் படி முதியோர் மற்றும் குழந்தை
கள் பாதுகாப்பு இல்லங்களைப் பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுகிறதென
மகளிர் விடுதிகள் நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதிகளை 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின் பிரிவுகள் 3 மற்றும் 4 ன் படி விடுதிகள் நடத்துபவர்கள் 31 ஜூலை 2021 க்குள் உரிமம் பெற்றுள்ளவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது. அரசாணை (நிலை) எண்.31, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, 26 ஜூன் 2014 மற்றும் அரசாணை (நிலை) எண். 12, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, நாள் 21 பிப்ரவரி 2015 ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ள நெறிமுறைகளின் படி இவ்விடுதிகளைப் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது.
மேற்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றத் தவறுபவர்கள் மீது சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இந்நேர்வில், மேலும் விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சமூக நல அலுவலகத்தினை அணுகலாம் என தெரிவிக்கப்படுகிறது.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை9. செய்தி வெளியீடு எண்:368 ன் படியான அறிவிப்பு
கருத்துகள்