மத்திய பட்டியலிலுள்ள ஒபிசி உள்-வகைப்படுத்தலை ஆய்வு செய்ய அரசமைப்பின் 340-வது பிரிவின் படி அமைந்த ஆணையத்தின் கால அவகாசத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அமைச்சரவை மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்தலை ஆய்வு செய்ய அரசமைப்பின் 340-வது பிரிவின் படி அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் கால அவகாசத்தை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்
மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்தலை ஆய்வு செய்ய அரசமைப்பின் 340-வது பிரிவின் படி அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் கால அவகாசத்தை 11-வது முறையாக நீட்டிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 2021 ஜூலை 31 முதல் 2022 ஜனவரி 31 வரை ஆறு மாத காலத்திற்கு ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்படும்.
பயன்: கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதன் மூலம், பல்வேறு பங்குதாரர்களுடனான கலந்தாலோசனைக்கு பிறகு ஆணையத்தால் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க முடியும்
செயல்பாட்டு பட்டியல்: 2021 ஜூலை 31 முதல் 2022 ஜனவரி 31 வரை ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள ஆணையத்தின் கால அவகாசம் தொடர்பான உத்தரவு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் வெளியிடப்படும்.
கருத்துகள்