முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நபார்டு 40-வது நிறுவன தினம் காணொளி மூலம் தலைமைச் செயலாளர் உரை

40-வது நிறுவன தினத்தை நபார்டு கொண்டாடியது








தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) 40-வது நிறுவன தின நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய தமிழக அரசின் தலைமை செயலாளர் டாக்டர் வி இறையன்பு, 2021 நிதியாண்டில் நபார்டின் பங்களிப்பான ரூ 27,135 கோடி குறித்து பாராட்டு தெரிவித்ததோடு, நடப்பாண்டுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ள ரூ 40,000 கோடி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் தான் தற்போதைய தேவை என்று தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தின் (டிக்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஹன்ஸ்ராஜ் வர்மா கூறினார்.

தனது நடவடிக்கைகளை நபார்டு விரிவுபடுத்தியுள்ளதாகவும், ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும் நபார்டு உள்கட்டமைப்பு வளர்ச்சி உதவி ஆகியவற்றின் கீழ் மாநிலத்தின் ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நிதி உதவியை குறிப்பிடத்தகுந்த அளவு உயர்த்தியுள்ளதாகவும் நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் திரு எஸ் செல்வராஜ் தெரிவித்தார்.

விவசாயிகள் மீது சிறப்பு கவனம், வங்கி கடனை உயர்த்துதல், ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கடந்த 40 ஆண்டுகளில் நபார்டு செய்துள்ள சாதனைகள் குறித்து நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.

நபார்டின் மாவட்ட வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட அளவில் உருவாக்கியுள்ள தக்கம் குறித்து ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் திரு சுமன் ரே எடுத்துரைத்தார்தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40-வது தொடக்க தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாட்டின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், ``தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்காக நபார்டு வங்கி நடப்பு நிதியாண்டில் ரூ.40,000 கோடி வழங்கத் திட்டமிட்டிருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி அன்று நிறுவப்பட்ட நபார்டு வங்கி (தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி தற்போது 40 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பிற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தினை நோக்கமாகக் கொண்டிருக்கும் நபார்டு வங்கி, கிராம வளர்ச்சிக்கானத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக முதலீடு மற்றும் உற்பத்தி கடன்களை வழங்குகிறது. விவசாயிகளின் வளர்ச்சிக்கும் கிராமப்புற மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும் நபார்டு வங்கியின் 40 வது ஆண்டுத் தொடக்க விழா காணொளிக் காட்சி வாயிலாக  நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வழியாக உரை நிகழ்த்திய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ``கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.27,135 கோடி கடன் உதவி வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ. 40,000 கோடி வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

அடுத்ததாகப் பேசிய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ், ``இன்று, ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்” என்றார்.

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக தலைமைப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் பேச்சில், ``நபார்டு வங்கி தனது பணிகளை விரிவுபடுத்தி, ஊரக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது." என்றார்.

குறிப்பாக விவசாயிகள் முன்னேற்றம், வங்கிக் கடனுதவியை அதிகரித்தல், ஊரக உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் நபார்டு வங்கி கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் முக்கியமான தருணங்கள் குறித்து ப் பகிர்ந்துகொண்டார் .

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை அவர்களது செயல்பாடுகளுக்காக நபார்டின் 40-வது நிறுவன தின நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக இந்தியன் வங்கி செயல் இயக்குநர் திரு இம்ரான் அமின் சித்திக்கின் முன்னிலையில் நபார்டு மற்றும் இந்தியன் வங்கிக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. மாநிலத்தின் வளர்ச்சியில் இந்தியன் வங்கியின் பங்களிப்பு குறித்து அவர் விளக்கினார்.

கடற்பாசி விவசாயம் குறித்து நபார்டு தயாரித்த வங்கி திட்டம் ஒன்று நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,