40-வது நிறுவன தினத்தை நபார்டு கொண்டாடியது
தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) 40-வது நிறுவன தின நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய தமிழக அரசின் தலைமை செயலாளர் டாக்டர் வி இறையன்பு, 2021 நிதியாண்டில் நபார்டின் பங்களிப்பான ரூ 27,135 கோடி குறித்து பாராட்டு தெரிவித்ததோடு, நடப்பாண்டுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ள ரூ 40,000 கோடி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் தான் தற்போதைய தேவை என்று தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தின் (டிக்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஹன்ஸ்ராஜ் வர்மா கூறினார்.
தனது நடவடிக்கைகளை நபார்டு விரிவுபடுத்தியுள்ளதாகவும், ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும் நபார்டு உள்கட்டமைப்பு வளர்ச்சி உதவி ஆகியவற்றின் கீழ் மாநிலத்தின் ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நிதி உதவியை குறிப்பிடத்தகுந்த அளவு உயர்த்தியுள்ளதாகவும் நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் திரு எஸ் செல்வராஜ் தெரிவித்தார்.
விவசாயிகள் மீது சிறப்பு கவனம், வங்கி கடனை உயர்த்துதல், ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கடந்த 40 ஆண்டுகளில் நபார்டு செய்துள்ள சாதனைகள் குறித்து நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.
நபார்டின் மாவட்ட வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட அளவில் உருவாக்கியுள்ள தக்கம் குறித்து ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் திரு சுமன் ரே எடுத்துரைத்தார்தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40-வது தொடக்க தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாட்டின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், ``தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்காக நபார்டு வங்கி நடப்பு நிதியாண்டில் ரூ.40,000 கோடி வழங்கத் திட்டமிட்டிருக்கிறது'' எனத் தெரிவித்தார்.
விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி அன்று நிறுவப்பட்ட நபார்டு வங்கி (தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி தற்போது 40 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பிற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தினை நோக்கமாகக் கொண்டிருக்கும் நபார்டு வங்கி, கிராம வளர்ச்சிக்கானத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக முதலீடு மற்றும் உற்பத்தி கடன்களை வழங்குகிறது. விவசாயிகளின் வளர்ச்சிக்கும் கிராமப்புற மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும் நபார்டு வங்கியின் 40 வது ஆண்டுத் தொடக்க விழா காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வழியாக உரை நிகழ்த்திய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ``கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.27,135 கோடி கடன் உதவி வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ. 40,000 கோடி வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
அடுத்ததாகப் பேசிய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ், ``இன்று, ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்” என்றார்.
நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக தலைமைப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் பேச்சில், ``நபார்டு வங்கி தனது பணிகளை விரிவுபடுத்தி, ஊரக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது." என்றார்.
குறிப்பாக விவசாயிகள் முன்னேற்றம், வங்கிக் கடனுதவியை அதிகரித்தல், ஊரக உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் நபார்டு வங்கி கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் முக்கியமான தருணங்கள் குறித்து ப் பகிர்ந்துகொண்டார் .
பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை அவர்களது செயல்பாடுகளுக்காக நபார்டின் 40-வது நிறுவன தின நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டன.
ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக இந்தியன் வங்கி செயல் இயக்குநர் திரு இம்ரான் அமின் சித்திக்கின் முன்னிலையில் நபார்டு மற்றும் இந்தியன் வங்கிக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. மாநிலத்தின் வளர்ச்சியில் இந்தியன் வங்கியின் பங்களிப்பு குறித்து அவர் விளக்கினார்.
கடற்பாசி விவசாயம் குறித்து நபார்டு தயாரித்த வங்கி திட்டம் ஒன்று நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.
கருத்துகள்