முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நபார்டு 40-வது நிறுவன தினம் காணொளி மூலம் தலைமைச் செயலாளர் உரை

40-வது நிறுவன தினத்தை நபார்டு கொண்டாடியது








தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நபார்டு) 40-வது நிறுவன தின நிகழ்ச்சியில் காணொலி மூலம் உரையாற்றிய தமிழக அரசின் தலைமை செயலாளர் டாக்டர் வி இறையன்பு, 2021 நிதியாண்டில் நபார்டின் பங்களிப்பான ரூ 27,135 கோடி குறித்து பாராட்டு தெரிவித்ததோடு, நடப்பாண்டுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ள ரூ 40,000 கோடி குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், பல்வேறு பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதும் தான் தற்போதைய தேவை என்று தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தின் (டிக்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு ஹன்ஸ்ராஜ் வர்மா கூறினார்.

தனது நடவடிக்கைகளை நபார்டு விரிவுபடுத்தியுள்ளதாகவும், ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதி மற்றும் நபார்டு உள்கட்டமைப்பு வளர்ச்சி உதவி ஆகியவற்றின் கீழ் மாநிலத்தின் ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான நிதி உதவியை குறிப்பிடத்தகுந்த அளவு உயர்த்தியுள்ளதாகவும் நபார்டு தமிழ்நாடு மண்டல அலுவலகத்தின் தலைமை பொது மேலாளர் திரு எஸ் செல்வராஜ் தெரிவித்தார்.

விவசாயிகள் மீது சிறப்பு கவனம், வங்கி கடனை உயர்த்துதல், ஊரக உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கடந்த 40 ஆண்டுகளில் நபார்டு செய்துள்ள சாதனைகள் குறித்து நிகழ்ச்சியில் விளக்கப்பட்டது.

நபார்டின் மாவட்ட வளர்ச்சி அலுவலர்கள் மாவட்ட அளவில் உருவாக்கியுள்ள தக்கம் குறித்து ரிசர்வ் வங்கி தலைமை பொது மேலாளர் திரு சுமன் ரே எடுத்துரைத்தார்தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40-வது தொடக்க தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்நாட்டின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ், ``தமிழகத்தின் வளர்ச்சி பணிகளுக்காக நபார்டு வங்கி நடப்பு நிதியாண்டில் ரூ.40,000 கோடி வழங்கத் திட்டமிட்டிருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

விவசாயம் மற்றும் கிராமப்புற வேளாண்மையல்லாத தொழில்களை வளர்க்கும் நோக்கத்துடன் 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி அன்று நிறுவப்பட்ட நபார்டு வங்கி (தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி தற்போது 40 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இந்தியக் கிராமப்புறங்களில் வேளாண்மை மற்றும் பிற பொருளியல் செயல்பாடுகளுக்கான கடன் குறித்த கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தினை நோக்கமாகக் கொண்டிருக்கும் நபார்டு வங்கி, கிராம வளர்ச்சிக்கானத் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக முதலீடு மற்றும் உற்பத்தி கடன்களை வழங்குகிறது. விவசாயிகளின் வளர்ச்சிக்கும் கிராமப்புற மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருக்கும் நபார்டு வங்கியின் 40 வது ஆண்டுத் தொடக்க விழா காணொளிக் காட்சி வாயிலாக  நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி வழியாக உரை நிகழ்த்திய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ``கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.27,135 கோடி கடன் உதவி வழங்கியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ. 40,000 கோடி வழங்கத் திட்டமிட்டிருக்கிறது. அதற்காக எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

அடுத்ததாகப் பேசிய தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ், ``இன்று, ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்” என்றார்.

நபார்டு வங்கியின் தமிழ்நாடு மண்டல அலுவலக தலைமைப் பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் பேச்சில், ``நபார்டு வங்கி தனது பணிகளை விரிவுபடுத்தி, ஊரக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது." என்றார்.

குறிப்பாக விவசாயிகள் முன்னேற்றம், வங்கிக் கடனுதவியை அதிகரித்தல், ஊரக உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் நபார்டு வங்கி கடந்த நாற்பதாண்டு கால வரலாற்றில் முக்கியமான தருணங்கள் குறித்து ப் பகிர்ந்துகொண்டார் .

பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை அவர்களது செயல்பாடுகளுக்காக நபார்டின் 40-வது நிறுவன தின நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக இந்தியன் வங்கி செயல் இயக்குநர் திரு இம்ரான் அமின் சித்திக்கின் முன்னிலையில் நபார்டு மற்றும் இந்தியன் வங்கிக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. மாநிலத்தின் வளர்ச்சியில் இந்தியன் வங்கியின் பங்களிப்பு குறித்து அவர் விளக்கினார்.

கடற்பாசி விவசாயம் குறித்து நபார்டு தயாரித்த வங்கி திட்டம் ஒன்று நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...