முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

74-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் இந்திய காட்சிக்கூடத்தை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர்

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

ராஜ்குமார் ஹிரானியின் பிகே திரைப்படம் தற்போது இந்திய தேசிய திரைப்பட காப்பகத்தில் சேர்ப்பு

ராஜ்குமார் ஹிரானியின் பிகே(2014) திரைப்படத்தின் அசல் கேமிரா நெகட்டிவ், தங்களின் சேகரிப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய திரைப்பட  காப்பகம் அறிவித்துள்ளது.

பிரபல சினிமா தயாரிப்பாளர் ராஜ்குமர் ஹிரானி, 2014ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட தனது பிகே திரைப்படத்தின் அசல் கேமிரா நெகட்டிவை, மும்பையில்  இந்திய தேசிய திரைப்பட காப்பக இயக்குனர் பிரகாஷ் மேக்டமிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து ராஜ்குமார் ஹிரானி கூறுகையில், ‘‘ஒரு திரைப்படத்தின் நெகட்டிவை பாதுகாப்பது முக்கியம். எனது பிகே படத்தின் நெகட்டிவ் புனேவில் உள்ள இந்திய தேசிய திரைப்பட ஆவண காப்பகத்தில் (NFAI)பாதுகாக்கப்படும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். திரைப்படங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது திரைப்படத் தயாரிப்பாளரின் கடமை.  இதற்கு சினிமா தயாரிப்பாளர்கள், என்எப்ஏஐ அமைப்புக்கு ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றார்.

என்எப்ஏஐ இயக்குனர், பிரகாஷ் மேக்டம் கூறுகையில், ‘‘திரு ஹிரானியுடன் எங்கள் தொடர்பு தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது முந்தைய படங்கள் என்எப்ஏஐ-ஆல் பாதுகாக்கப்படுகின்றன. எங்கள் சேகரிப்பில், பிகே படத்தை சேர்ப்பது மிகச் சிறப்பானது. இது செல்லுலாய்டு கேமிராவில் படம் பிடிக்கப்பட்டது. இதை டிஜிட்டலுக்கு மாற்றுவது இந்தியாவில் 2013-14ம் ஆண்டு நடந்தது. ஆகையால், இந்த படத்தை பாதுகாப்பது முக்கியமானது’’ என்றார்.

இந்த படத்தின் ஒரிஜினில் கேமிரா நெகட்டிவ் தவிர, பிகே திரைப்படத்தின் 300 பதிவுகள், 3 இடியட்ஸ் திரைப்படத்தின் பதிவுகளும் பாதுகாத்து வைப்பதற்காக ஒப்படைக்கப்பட்டன.




74-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் இந்திய காட்சிக்கூடத்தை காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர்

பெருந்தொற்றிலிருந்து உலகம் விரைவில் மீண்டு மக்கள் மீண்டும் திரையரங்குகளுக்கு வரத் தொடங்குவார்கள் என்று 74- வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவைத் தொடங்கி வைத்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிக்கியுடன் இணைந்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த 74-வது கேன்ஸ் திரைப்படத் திருவிழாவில் இந்திய காட்சிக் கூடத்தின் காணொலி வாயிலான திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இரண்டாவது ஆண்டாக காட்சிக்கூடங்கள் காணொலி வாயிலாக நடத்தப்பட்டாலும், இதில் இடம்பெற்றுள்ள படைப்புத்திறன், திறமை, தொழில்நுட்பம் ஆகிய அனைத்தும் உண்மையானது என்றும், இவற்றில் மிக சிறந்தவற்றையே இந்தியா வழங்குவதாகவும் கூறினார். “வருங்கால உலக திரைப்படம் குறித்து விவாதிக்கும் தளமாக இந்த மெய்நிகர் இந்திய காட்சிக்கூடம் செயல்படலாம்”, என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் 500 தளங்களுடன்  ஏராளமான சர்வதேசத் திரைப்படங்கள் இந்தியாவில் படமாக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும் பல சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்களை ஈர்ப்பதற்காக இந்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார். “அனைத்து விதமான அனுமதிகளையும் ஒருங்கே வழங்குவதற்கு ஏதுவாக எளிதாக்கும் அலுவலகத்தையும் தற்போது நாம் தொடங்கியுள்ளோம்”, என்றார் அவர்.

பல்வேறு ஆங்கில திரைப்படங்களுக்குத் தேவையான காட்சி விளைவுகள் உயிரூட்டுதல், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், உலகத் திரைப்படங்களுக்கு இந்தியா அளித்து வரும் ஆதரவு அதிகரித்து வருவதாகவும் திரு ஜவடேகர் தெரிவித்தார். “கேன்ஸ் திரைப்படத் திருவிழா, படைப்பாற்றல் மற்றும் திறமைக்கான திருவிழா என்ற போதும் அதே வேளையில் வர்த்தகத்திற்கான தளமும் கூட. கேன்ஸ் திரைப்பட சந்தை உலகெங்கும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்குகிறது. பெருந்தொற்றுக்குப் பிறகு, திரைப்படங்கள் மிகப்பெரிய வர்த்தகத்தை ஈட்டுவதோடு, ஓடிடி தளங்களுக்காகவும் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.

பிரான்ஸ் நாட்டிற்கான இந்திய தூதர் திரு ஜாவேத் அஷ்ரஃப் பேசுகையில், இந்திய திரைப்படங்களை உலகிற்கு காட்சிப்படுத்தும் சாளரம் என்ற முக்கியத்துவத்தை  கேன்ஸ் திரைப்படத் திருவிழா பெற்றிருக்கிறது என்று கூறினார். கொவிட் தொற்றினால் ஏற்பட்டுள்ள இடர்பாடுகள் நீங்கிய பிறகு சர்வதேச திரைப்படத் துறையினருடன் மீண்டும் இணையும் ஓர் வாய்ப்பை இந்தத் திருவிழா மற்றுமொருமுறை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார். “சர்வதேச கூட்டணியை ஊக்குவிப்பதற்கும், உள்நாட்டு திரைப்படத் துறையில் ஓடிடி மின்னணு தளங்களின் தாக்கத்துடன் திரைப்படங்களை படமாக்குவதற்கு இந்தியாவை உகந்த இடமாக ஊக்குவிக்கவும் வாய்ப்பளிக்கப்படும். நமது பன்முகத்தன்மை, பாரம்பரியத்தின் பிம்பமாக இந்திய திரைப்படம் விளங்குகிறது. திரைப்படங்களை போன்று இந்தியாவை ஒருங்கிணைப்பது வேறு எதுவுமில்லை. சுதந்திர தேசமாக நமது பயணம், இந்திய திரைப்படங்களால் திறம்பட எடுத்துரைக்கப்பட்டுள்ளது”, என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிக அதிக திரைப்படங்களைத் தயாரிக்கும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்று தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அமித் காரே கூறினார். “பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு இடையையும் நமது கலாச்சார மற்றும் திரைப்பட பாரம்பரியத்தை, திரைப்படத் தயாரிப்பின் மேம்பட்ட அம்சங்களுடன் இந்திய காட்சிக் கூடத்தில் நாம் காட்சிப்படுத்துகிறோம்”, என்று அவர் தெரிவித்தார். திரு சத்யஜித் ரேவின் நூற்றாண்டு கொண்டாட்டங்களுடன் இந்தியாவின் 75-வது சுதந்திர தினமும் இந்த ஆண்டும் கொண்டாடப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த