இந்திய அரசின் “மீன்பிடித்துறை ஒழுங்குமுறை மசோதா” இந்திய அரசு நடைமுறைப்படுத்தும் நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கனிமொழி கருனாநிதியின் கடிதம் கூறும் கருத்து என்ன.
மீன் பிடித் தொழிலில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் தமிழ்நாட்டு இங்கு 2.5 லட்சம் மீனவர்கள், 6200 மீன்விசைப் படகுகள், 50 ஆயிரத்து 360 பாரம்பரியக் கலன்களைக் கொண்டு அண்மைக்கடல் மற்றும் தூரக்கடல் பகுதிகளில் மீன்பிடிக்கின்றனர். நாட்டின் மீன் உற்பத்தியைப் பெருக்குவதற்கென 1970 ஆம் ஆண்டுகளில் கொண்டு வந்த நீலப்புரட்சித் திட்டம் திட்டத்தின்படி, விசைப்படகுகள் வாங்கக் கடனுதவி, டீசலுக்கு மானியம் போன்றவை கடந்த 35 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா, விசைப்படகுகள் மற்றும் பாரம்பரியப் படகு வகைகளுக்கிடையே உள்ள பாரதூரமான வேறுபாடுகளையோ, அவற்றின் மீன்பிடித் திறன்களையோ கருத்தில் கொள்ளாமல் அனைத்தையும் “மீன்பிடிக் கலன்” என ஒரே வார்த்தையில் வரையறுத்து, அனைவரையும் மீனவர்கள் என்று பொதுவில் வகைப்படுத்தி விதிமுறைகளையும் தண்டனைகளையும் வகுத்துள்ளதாகவும்.
இச்சட்டப்படி, எல்லா வகைப் படகுகளும் மத்திய அரசிடம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறும்போதே பிடிக்கப்போகும் மீன் இனங்கள், எந்த இடத்தில் எத்தனை மாதங்கள் மீன்பிடிக்கப்படும், எந்த முறையில் மீன்பிடிப்பு நடக்கும் முதலான அனைத்தையும் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்; என்ன நோக்கத்துக்காக மீன் பிடிக்கப்படுகிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்; இதற்கான அனுமதிகளையும் மீனவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் காலந்தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்க வேண்டும். பிழைப்புக்கா, வணிகத்துக்கா, ஆய்வுக்கா என்ற காரணங்கள் கூறவேண்டும் அரசு. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து வரும் கடலை மீனவர்களிடம் இருந்து பிரித்து, மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பறிக்கப்படுமென அச்சம் மீனவர்களிடம் வந்திருப்பதைக் காண முடிகிறது.
நாட்டின் பாதுகாப்புக் காரணத்தையோ அல்லது அரசு தீட்டும் கடல் அல்லது மீன்வளம் சார்ந்த திட்டத்தைக் காட்டியோ மீனவர்களுக்குத் தரப்படும் அனுமதிகளையும் சலுகைகளையும் ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்குள்ளது. திடீரென சில குறிப்பிட்ட வகை மீனினங்களைப் பிடிக்கக் கூடாது எனக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் அரசுக்கு அதிகாரமுள்ளது.
விதிமுறைகளை மீறும் மீனவர்களுக்குத் தரப்படவுள்ள தண்டனைகளையும் சட்டம் பட்டியலிட்டுள்ளது. மீன்பிடிப் படகில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் மீன்கள் இருக்குமானால், படகு பறிமுதல் செய்யப்படும். படகை விடுவிக்க வேண்டுமானால் படகின் மதிப்பில் பாதியைப் பிணைத் தொகையாகக் கட்ட வேண்டும். அப்படகில் இருந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சோதனைக்கு அனுமதிக்க விடாமல் தடுப்பவர்களுக்கு, பத்து லட்சம் ரூபாய் வரை அபராதமும்; பன்னிரண்டு கடல் மைல் தாண்டினால் ஒன்பது லட்சம் அபராதமும்; படகின் சொந்தக்காரருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் உண்டு. மீன்களும் பறிமுதல் செய்யப்படும். படகின் நீளம் 12 மீட்டருக்கு மேல் இருந்தாலும் தண்டனை உண்டு.
கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவதால், 12 கடல்மைல்களைத் தாண்டி மீன்பிடிக்கச் செல்லாவிட்டால் பிழைக்கவே முடியாது என்பதுதான் மீனவர்களின் இன்றைய நிலைமையாக உள்ளது என்பது மீனவர்கள் வாதம் விசைப்படகேறி, கடலில் நெடுந்தொலைவு பயணித்து, பல நாட்கள் தங்கியிருந்து, மீன் பிடிக்க ஒரு முறை கடலோடிப் போய்வரும் செலவு மட்டுமே ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஆகிற நிலையில், இவ்வாறான கட்டுப்பாடுகளை அரசு கொண்டுவருமாயின் மீனவர்கள் இனி கடல் இருக்கும் திசைப்பக்கம் போக முடியாது.
விதிமுறைகளை மீறும் மீனவரைக் கைது செய்தல், படகு மற்றும் மீன்பிடிக் கருவிகளைப் பறித்தல் போன்றவற்றிற்கு இழப்பீடும் கோரமுடியாது. சந்தேகத்தின் பேரில் தவறான நபர்களைப் பிடித்தாலும், அவற்றிற்காக கடலோரக் காவல்படையைக் குற்றம் சாட்ட முடியாத படிக்கு இச்சட்டம் கடலோரக்காவல் படைக்கு எல்லையற்ற அதிகாரத்தைக் கொடுக்கிறது எனவும்.
ஏற்கெனவே மீனவர்களின் வாழ்விடங்கள் உல்லாச விடுதிகள் கட்டுவதற்கென கரையோரங்களிருந்து அப்புறப்படுத்தப்பட்டும் வருகிறது எனவும். தீவிரமாகியிருக்கும் உலகமயத்தினால் அதிகரிக்கும் கப்பல் போக்குவரத்து, கடலோர நகரங்களிலிருந்து தினமும் கடலில் கொட்டப்படும் நச்சுக்கழிவுகள், சாக்கடைகள், அனல் மின்நிலையச் சாம்பல்கள் போன்றவையும், ஏற்கெனவே இருந்த மீன்வளத்தை அழித்துக் கொண்டு வரும் சூழ்நிலையில், மீனவர்களின் மேல்
இந்திய அரசு, “ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட பிற நாட்டு அமைப்புகளுக்கு மீன்களையும் மீன் பொருள்களையும் ஏற்றுமதி செய்வதென்றால், இந்தியாவில் அதற்கான ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்க வேண்டுமென்ற அந்நாடுகளின் எதிர்பார்ப்புக்கிணங்கவும், இந்தியாவின் மீனவர் உரிமைகளை நிலைநாட்டவும் இந்தச் சட்டம் தேவை” எனக் கூறுகிறது.
வேளாண்மைத் துறை அமைச்சகமோ, கடல்வழியாக பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதல்கள் போல இனி நடைபெறாமல் தடுக்க, நமக்கு உரிமையுள்ள கடல் பரப்பை நிர்ணயிப்பதும், அதில் நமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதும் அவசியம் என்பதால் இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகச் சொல்கிறது. .
1990 ஆம் ஆண்டுகளில் முன்னால் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அரசால் அறிவிக்கப்பட்ட மீன்வளக் கொள்கை, ‘கூட்டு முயற்சி’ எனும் பெயரில் பன்னாட்டு ஆலைக் கப்பல்கள் இந்தியக் கடல்களில் மீன்பிடிக்க உரிமம் வழங்கியது. இம் முடிவுதான், மீனவர்களின் வாழ்வாதாரத்தின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் படிப்படியான தாக்குதலைத் தொடுத்திட வழிகோலியது எனவும். இந்தியக் கடல் எல்லைக்குள் நிறுத்தப்பட்டுள்ள இந்நிறுவனங்களின் கப்பல்கள், நவீனக் கருவிகளைக் கொண்டு முட்டை, குஞ்சு வேறுபாடின்றி அப்படியே மீன் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து, மீன்களை ரகம் வாரியாகப் பிரித்தெடுத்து இன்னொரு கப்பலுக்குக் கைமாற்றி விடுகின்றன எனவும். எஞ்சிய மீன்குஞ்சுகளையும், முட்டைகளையும், சில சமயங்களில் துடுப்பு வெட்டப்பட்ட சுறாவின் உடல்களையும் கழிவாகக் கடலில் கொட்டிவிடுகின்றன. மீன்வளத்தின் ஆதாரமான முட்டைகளைத் துப்புரவாகத் துடைத்தொழித்து வரும் மீன்பிடி கப்பல்களின் அகோரப் பசிக்கு இடையூறாக இருக்கும் இந்திய மீனவர்களை முற்றிலுமாக கடலிலிருந்து துரத்த வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சட்டம், அதற்காகக் கடுமையான நிபந்தனைகளையும், தண்டனைகளையும் வரையறுத்துள்ளதாகவும் பலர் விவாதம் செய்து வருகின்றனர் அதே நேரத்தில் மீனவர்களை அத்தொழிலில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கில் மாற்றுத் தொழில் கற்றுத் தரும் நூற்றுக்கணக்கான தன்னார்வக் குழுக்கள், சுனாமி பேரழிவுக்குப் பிறகு இந்தியக் கடற்கரை நெடுக வலை விரித்துள்ளன. ரொட்டி தயாரிப்பு, செங்கல் தயாரிப்பு போன்ற சிறுதொழில்களுக்கு மீனவர்களை மாற்றும் திட்டத்தில் நாகப்பட்டினம், காஞ்சிபுரம் மாவட்டங்களின் கரையோரங்களில் இயங்கி வருவதாக. ஒரே நேரத்தில் அடக்குமுறை சட்டம் மூலமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ள பரவலான மக்களுக்கு
மீன் பிடித் தொழிலில் இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தை வகிக்கும் தமிழ்நாட்டிலுள்ள 2.5 லட்சம் மீனவர்களின் நிலை குறித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம் இப்போது மீனவ மக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியது. கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது "புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு
புதிய மீன்பிடி மசோதா ஆலோசனை கூட்டத்தில் கருத்துக்களை கடிதம் மூலம் அமைச்சரிடம் தெரிவித்து உள்ளேன். அதில் பல மாற்று கருத்துக்கள் உள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு மசோதா கொண்டு வரும் போதும், மாநில உரிமைகளை தட்டிப் பறிப்பதை முக்கியமான விஷயமாக வைத்து இருக்கிறார்கள். அதனை எதிர்த்து இருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அரசுக்குதான், அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சினைகள் தெரியும். ஆகையால் மாநிலத்துக்கு உரிமைகளை விட்டுத்தர வேண்டும். மிகவும் கடுமையான தண்டனைகள் அந்த சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. அதனை எதிர்க்கிறோம். மீனவர்களை பழிவாங்கும் நிலைக்கு கொண்டு செல்லுமே தவிர, பிரச்சினைகளுக்கு தீர்வாகாது."
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
இராமாயண காலத்தில் குகன் வழி வந்த பரதவ மக்கள் மட்டுமே மீனவர்கள் ஆனால் இப்போது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நிலை வேறு அங்கு மீன்பிடி செய்வதில் ஒரு மதம் சார்ந்த மக்கள் தான் அதிகம் வேறு மக்கள் மீன் பிடித்தல் என்பது அவர்களை மீறி இயலாது என்பதை அனைவரும் அறிவோம். தற்போது இந்த புதியஒழுங்கு முறை சட்டம் அதை மாற்றியமைக்கப் போகிறது என்பதை நாம் உற்று நோக்கும் நிலையில் உள்ளோம் இந்தியாவில் இனி இந்தச் சட்டம் புராதன மீனவன் மீன்பிடிக்க வழியமைத்தால் வரவேற்கலாம்.
கருத்துகள்