இயற்கை வேளாண்மைக்கு தேசிய விருது பெற்ற டாக்டர் தம்பதி
விவசாயத்தை முழுவதுமாக இயற்கை வழி வேளாண்மைக்கு மாற்ற வேண்டும் என்ற ஆவலை தமிழக அரசு சமீபமாக தெரியப்படுத்தியது. இதற்கான முன்னெடுப்புகளில்
தமிழக டாக்டர் தம்பதியினருக்கு சான்றளிக்கப்பட்ட இயற்கை வேளாண்மை (certified organic farming) மூலமாக அதிக மகசூல் செய்தமைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம்
கொல்லிமலையில் இனியா ஆர்கானிக் எஸ்டேட் வைத்திருப்பவர்கள் டாக்டர் சுசித்ரா டாக்டர் இளங்கோ தம்பதி
தங்களது எஸ்டேட்டினை உலக தரத்துடன் கூடிய, இயற்கை விவசாயம் சார்ந்த விவசாய தோட்டமாக மாற்ற வேண்டும் என்பதற்காக அறிவியல் பூர்வமான நுட்பங்களை ஆய்வு செய்வது, அதை செயல்படுத்தி பார்ப்பது, மேலும் விவசாய விஞ்ஞானிகளிடம் ஆலோசனை கேட்பது என்று ஆரம்பித்து முழு நேரமும் எஸ்டேட்டை தங்களுடைய நேரடி கண்காணிப்பில் வைத்திருந்தனர்.
அதுமட்டுமின்றி அவர்களின் எஸ்டேட்டில் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் தக்க தொடர் பயிற்சி கிடைக்குமாறு பார்த்துக் கொண்ட சமயத்தில் தான் Spice Board of India முழு வீச்சில் நாடு முழுக்க இயற்கை வழி வேளாண்மை செய்பவர்களிடையே ஒரு ஆய்வினை நடத்தியதன் முடிவில் அவர்களுக்கு ஒரு ஆச்சரியகரமான செய்தி காத்திருந்ததது, இயற்கை வழி வேளாண்மை (ஆர்கானிக் விவசாயம்) மூலமாக எடுக்கப்படும் மகசூல் ரசாயனங்கள் உரம் பயன்படுத்திய விவசாயத்தின் அளவிற்கு எடுக்க முடியும் என்று நிரூபித்திருப்பதுதான்.
இதனைப் பாராட்டும் விதமாக அகில இந்திய அளவிலான இயற்கை வழி வேளாண்மைக்கான முதல் பரிசினை
டாக்டர் தம்பதியினர் நடத்தும் இந்த ஆர்கானிக் எஸ்டேட்டில் கிடைக்கும் ஏலக்காய், குறுமிளகு, கிராம்பு ஆகியவை உலகில் கிடைக்கக் கூடிய முதல் தரமான விளை பொருட்களாக கிடைப்பதால்.
மருத்துவம் படித்து விட்டு அதனை வைத்து பணம் சம்பாதிக்க பலர் போல் வேண்டும் எனும் நோக்கமில்லாமல் - விவசாயத்தில் ஆர்கானிக் முறையில் இயற்கை விவசாயம் செய்து - சர்வதேசத் தரத்தில் இந்திய தரச்சான்றிதழ் வரை அனைத்தையும் பெற்று எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக இந்திய அளவில் முதல் பரிசையும் பெற்றுள்ள இந்த டாக்டர் தம்பதிகளை வாழ்த்துங்கள்
இனியா ஆர்கனிக் எஸ்டேட், கொல்லிமலை மற்றும் ஆத்தூர் தொலைபேசி:. +919443940569
கருத்துகள்