பிரதமர் அலுவலகம்
கர்நாடக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட திரு பி எஸ் பொம்மைக்கு பிரதமர் வாழ்த்து கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட திரு பி எஸ் பொம்மை அவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், “கர்நாடகாவின் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட திரு பி எஸ் பொம்மை அவர்களுக்கு வாழ்த்துகள். நீண்டகால சட்டமன்ற, நிர்வாக அனுபவத்தை அவர் பெற்றுள்ளார். நமது அரசால் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் அற்புதமான பணிகளை அவர் தொடர்வார் என்று நான் நம்புகிறேன். செயல்திறன்மிக்க பதவிக் காலத்திற்கு நல்வாழ்த்துகள்”, என்று கூறியுள்ளார்.
கருத்துகள்