சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையான ஐந்து ஆசிரியைகள் தப்பியோட்டம். பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களென 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் எழுந்ததனையடுத்து அவரைக் கைது செய்த காவல்துறை, சிறையில் அடைத்தனர். முன்னாள் மாணவிகள் 18 பேர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார் அளித்த நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போக்ஸோ சட்டத்தின் படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு உள்ள நிலையில் ஆதாரங்களைத் திரட்ட சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரம் காட்டி வரவே பள்ளியிலுள்ள சில ஆசிரியர்கள் சிவசங்கர் பாபாவிடம் தங்களை அழைத்துச் சென்றதாக மாணவிகள் சிலர் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில், பள்ளியில் பணிபுரியும் ஐந்து ஆசிரியர்களுக்கு சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்பிய நிலையில். விசாரணைக்குப் பயந்து ஐந்து ஆசிரியர்களும் வீட்டைப் பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். சிபிசிஐடி வழங்கும் சம்மனைப் பெறாமல் காயத்ரி, பிரவீனா உள்ளிட்ட ஐந்து ஆசிரியைகள் தப்பியதால் .வீடு பூட்டப்பட்டு இருந்த காரணத்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி கேளம்பாக்கம் பழனி கார்டனில் உள்ள ஐந்து ஆசிரியைகளின் வீடுகளில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
விசாரணைக்குப் பயந்து தப்பி ஓடிய ஐந்து ஆசிரியைகளைப் பிடிக்க சிபிசிஐடி காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவின் பள்ளியில் பயிலும் 100 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் சிபிசிஐடி காவல்துறையினர் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு பத்து பத்து பேராக சம்மன் அனுப்பி விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
கருத்துகள்