முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்கில் வெற்றி தினத்தில், பாராமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை

பாதுகாப்பு அமைச்சகம் கார்கில் வெற்றி தினத்தில், பாராமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை









கார்கில் 22ம் ஆண்டு வெற்றி தினத்தில், பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  அவருடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் ஷின்ஹா, சினார் படைப்பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே ஆகியோர் உடன் சென்றனர்.

1999ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு, பாரமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

பாரமுல்லா ராணுவப் பிரிவு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், குடியரசுத் தலைவரை வரவேற்று, பாரமுல்லாவின் வரலாறு மற்றும் சுதந்திரத்துக்குப்பின் இங்கு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை விளக்கினார்.

அதன்பின் மேதகு குடியரசுத் தலைவர், பாரமுல்லா பிரிவு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாரமுல்லா பயணத்துக்குப்பின், குல்மார்க் சென்ற குடியரசுத் தலைவர், அங்குள்ள போர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார்.  அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு விவரிக்கப்பட்டது.பிரதமர் அலுவலகம்

கார்கில் வெற்றி நாளில், தமது இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி

பிரதமர் திரு.நரேந்திர மோடி, தேசத்தை காக்கும் பணியில் கார்கிலில் தமது இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கு, கார்கில் வெற்றி நாளில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரை வாயிலாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “ நாம் அவர்களது தியாகத்தை நினைவு கூர்கிறோம். நாம் அவர்களது வீரத்தை நினைவு கூர்கிறோம். தேசத்தை காக்கும் பணியில், கார்கிலில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்கும், கார்கில் வெற்றி நாளான இன்று நாம் அஞ்சலி செலுத்துகிறோம். அவர்களது துணிவு ஒவ்வொரு நாளும் நமக்கு உத்வேகம் ஊட்டுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு மனதின் குரல் நிகழ்ச்சியில் கூறியவற்றை இங்கு பகிர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சகம்

கார்கில் வெற்றி தினத்தில், பாராமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை

கார்கில் 22ம் ஆண்டு வெற்றி தினத்தில், பாரமுல்லாவில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  அவருடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் ஷின்ஹா, சினார் படைப்பிரிவு தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே ஆகியோர் உடன் சென்றனர்.

1999ம் ஆண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு, பாரமுல்லாவில் உள்ள டேகர் போர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர்  மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

பாரமுல்லா ராணுவப் பிரிவு தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், குடியரசுத் தலைவரை வரவேற்று, பாரமுல்லாவின் வரலாறு மற்றும் சுதந்திரத்துக்குப்பின் இங்கு மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கைகளை விளக்கினார்.

அதன்பின் மேதகு குடியரசுத் தலைவர், பாரமுல்லா பிரிவு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பாரமுல்லா பயணத்துக்குப்பின், குல்மார்க் சென்ற குடியரசுத் தலைவர், அங்குள்ள போர் பயிற்சி பள்ளியை பார்வையிட்டார்.  அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு விவரிக்கப்பட்டது.உள்துறை அமைச்சகம்

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கார்கில் போரில் பங்குபெற்ற துணிச்சல் நிறைந்த அனைத்து வீரர்களையும் தமது டிவிட்டர் பதிவு ஒன்றில் நினைவுக் கூர்ந்துள்ள அவர், “உங்களது ஈடு இணையில்லா வீரம், துணிச்சல் மற்றும் தியாகம் ஆகியவை கார்கிலின் அணுகமுடியாத மற்றும் சவால் மிகுந்த உயரங்களில் மூவர்ண கொடியை மீண்டும் வெற்றிகரமாக பறக்க வைத்தன,” என்று குறிப்பிட்டார்.

“நாட்டின் பெருமையை தக்க வைத்த உங்களின் அர்பணிப்புக்கு நாடு நன்றியுடன் தலை வணங்குகிறது,” என்று அவர் மேலும் பதிவிட்டுள்ளார்.             பாதுகாப்பு அமைச்சகம்

கார்கில் வெற்றி தினத்தில், தேசிய போர் நினைவு சின்னத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மரியாதை

கார்கில் வெற்றியின் 22வது ஆண்டு தினத்தில் தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், உயிர் நீத்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று(ஜூலை 26ம் தேதி)  நன்றி தெரிவித்தார்.  கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் மோதலில், ஆபரேஷன் விஜய் நடவடிக்கையின் போது நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தேசிய போர் நினைவிடத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில், திரு ராஜ்நாத் சிங் குறிப்பிடுகையில், ‘‘ இந்திய பாதுகாப்பு படையினரின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறவாது’’ என்றார். அவர்களின் வீரத்துக்கு நாடு நன்றியுடன் எப்போதும் கடன்பட்டுள்ளது, அவர்களின் கொள்கைகளை நாடு எப்போதும் பின்பற்றும் என அவர் மேலும் கூறினார். 

இது குறித்து சுட்டுரையில் கருத்து தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர், ‘‘ தைரியமான வீரர்களின் உன்னத தியாகம், வரும் தலைமுறையினரையும் ஊக்குவிக்கும்’’ என  கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதாரியா, ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே, பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை  தலைவர் வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயின் ஆகியோர் தேசிய போர்வீரர் நினைவு சின்னத்தில் உயிர்நீத்த வீரர்களுக்காக மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.

கார்கில் மோதலில், இந்திய ராணுவ வீரர்கள், விமானப்படை உதவியுடன், கார்கில் மலைப் பகுதியில் மோசமான வானிலையிலும் எதிரிகளுடன் சண்டையிட்டு விரட்டியடித்தனர்.  இந்த முக்கியமான தருணத்தில், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கார்கில் வெற்றியை கொண்டாடி, உயிர்நீத்த வீரர்களை பெருமை மிக்க நாடு நினைவுக்கூர்கிறது.பாதுகாப்பு அமைச்சகம்

அந்தமான் & நிக்கோபார் பிரிவால் கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது

1999-ல் நடைபெற்ற கார்கில் போரில் இந்தியாவின் வெற்றியை குறிக்கும் விதமாக பிர்ச்குன்ஜ் ராணுவ மையத்தில் 2021 ஜூலை 26 அன்று கார்கில் வெற்றி தினம் அந்தமான் & நிக்கோபார் பிரிவால் கொண்டாடப்பட்டது.

அந்தமான் & நிக்கோபார் பிரிவின் அனைத்து கூறுகளை சேர்ந்த கூட்டுப்பணியினர், கார்கில் போரில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து பாதுகாப்பு படைகளின் பாரம்பரியத்தை காத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அந்தமான் & நிக்கோபார் பிரிவின் தளபதி, லெப்டினெண்ட் ஜெனரல் அஜய் சிங் மலரஞ்சலி செலுத்தினார். அந்தமான் & நிக்கோபார் தீவுகளை சேர்ந்த முன்னாள் படை வீரர்களும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

படையினரிடையே உரையாடிய அந்தமான் & நிக்கோபார் பிரிவின் தளபதி, அனைத்து நேரங்களிலும் தயாராக இருந்து இணைந்து செயலாற்றுமாறும், இதன் மூலம் களத்தில் நன்மைகள் விளையும் என்றும் கூறினார். கொவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த