தமிழ்நாட்டின் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்கள் பயணிக்க வழங்கும் கட்டணமில்லா பேருந்துச் சீட்டு அச்சிடப்பட்டு, ஜூன் மாதம் 21 ஆம் தேதி முதல் திருநங்கைகள்,
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து, நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு நாளை முதல் இலவச பயணச் சீட்டு வழங்க போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த வழித்தடத்தில், எந்தெந்தப் பிரிவில், எத்தனை பேர் பயணித்தனர் என்ற, கணக்கை பெறும் வகையில் இந்த சீட்டு வழங்கப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள்