செட்டிநாடென்பது எப்படி.வட்டார வழக்கு கலாச்சாரம் கொண்ட பகுதியோ அதுபோலவே கொங்கு என்பது கலாச்சாரம் அது நாடல்ல
தமிழ்நாட்டில் செட்டிநாடென்பது எப்படி ஒரு இராஜாவால் ஆளுமை இல்லாத வட்டார வழக்கு மொழி பழக்கவழக்கங்கள் அல்லது கலாச்சாரம் கொண்ட பகுதியோ அதுபோலவே கொங்கு நாடும் அதன் வட்டார வழக்கு கலாச்சாரம் கொண்ட பகுதியாகும்.
இது சேர,சோழ, பாண்டிய, பல்லவர் ஆளுமை கொண்டவர் ஆட்சியில் இருந்ததல்ல பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயருக்குப் பின்னர் வந்த அரசர்களின் பிரிவினை காரணமாக வட்டார வழக்கு மொழிப் பிரிவின் படி வந்த நிகழ்வு. கொங்கு வேளாளர் எனும் கவுண்டர் ஜாதிய மக்களைக் குறிக்கும் ஒரு பகுதியாக அல்லது மண்டலமாக பெயர் வழங்கப்பட்டது.
கொங்கு நாடு என வந்த வட்டார பேச்சு தமிழ் மொழி வழக்காக வந்தது இங்கு பெரும்பாலும் இவர்களுக்கு இணையான அதிகம் வாழும் அருந்தியர் இனக்குழு கன்னடம் பேசும் மக்கள் கர்நாடக எல்லையில். வாழ்ந்த மக்கள் சோழர் ஆட்சியில் தமிழ் உச்சரிப்பு காரணமாக கொங்கு மண்டலமென பகுதி பிரித்து வழங்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் தங்கள் நாட்டை ஏழு மண்டலங்களாகப் பிரித்தனர். கொங்கு பகுதியை அதிராச மண்டலம் என்று பெயரிட்டு கொங்காள்வான் வழி சிற்றரசர்கள் ஆண்டானர். 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு தோன்றியது. இதனை உரையாசிரியர் காலமென்பர். கார்மேகக்கோனார் கொங்கு மண்டல சதகத்தை எழுதினார். கொங்கு நாட்டுப் பிரிவுகளையும், ஊர்தொகையையும் இதில் விரிவாகக் கூறினார். ஏழாம் நூற்றாண்டில் இப்பிரிவிருந்தது. 13 ஆம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசு கொங்கு பகுதியை 24 நாடுகளாகப் பிரித்தாண்டது. விஜயநகர நாயக்க மன்னர்கள் பிரதிநிதிகளாக இருந்தாண்டனர். ஊர்த்தலைவர்கள் பெயரால் ஊர்கள் அமைந்தன. தற்கால அமைப்புப்படி சுதந்திர காலத்திற்கு முன் கோயமுத்தூர், சேலம், கரூர், நாமக்கல், பல்லடம், பழனி, தாராபுரம், தர்மபுரி ஆகியன கொங்கு என அதிலடங்கியிருந்தன ஒரத்தநாடு துவங்கி பாப்பா நாடு வரை 48 தன்னாட்சி கள்ளர் நாடுகள் உள்ளது போல 24 தன்னாட்சி நாடுகளாக கொங்கு பகுதியில் அமைந்துள்ள பாளையம் என்னும் பெயர்
பூந்துறை நாடு, தென்கரை நாடு, காங்கேய நாடு, பொங்கலூர் நாடு, ஆரை நாடு, வரக்கா நாடு, திருஆவினன்குடி நாடு, மணநாடு, தலையூர் நாடு, தட்டயூர் நாடு, பூவாணிய நாடு, அரைய நாடு, ஒடுவங்கநாடு, வடகரைநாடு, கிழங்கு நாடு, நல்லுருக்கா நாடு, வாழவந்தி நாடு, அண்ட நாடு, கொங்கால நாடு, காவழக்கால நாடு, ஆனைமலை நாடு, இராசிபுர நாடு, கஞ்சிக் கோயில் நாடு ,குறும்பு நாடு எனவும் இவை அனைத்தும்
மலைகளும் கோட்டைகளும் சுழ அமைப்புக் கொண்ட ஒதியமலை, குருந்தமலை சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி, பாலமலை, பெருமாள் மலை, ஆனைமலை, பொன்மலை,திருமூர்த்தி மலை, தென்சேரிமலை, அழகுமலை, குமார மலை, ஊதியூர்மலை, சிவன் மலை, சென்னிமலை, பெருமாள் மலை, தவளகிரி, குன்றத்தூர், பாலமலை, ஊராட்சிக் கோட்டை மலை, மாதேசுவரன் மலை, மோரூர் மலை, கொங்கணமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை, கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை, ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை. உள்ளிட்ட பல மலைகளுமுள்ளன. கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம், பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு,காங்கேயம், கரூர், விஜயமங்கலம்,அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர், நெருஞ்சிப் பேட்டை, மேட்டூர், சரம்பள்ளி , காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அமதன் கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை, பெண்ணகரம்,பெரும்பாலை,சோழப்பாவு,தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை, ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல், 300 அடி உயரத்திலும், சங்ககிரி - 1500 அடி உயரத்திலும், சதுரகிரி - 3048 அடி உயரத்திலும், கனககிரி - 3423 அடி உயரத்திலும், மகாராசக்கடை - 3383 அடி உயரத்திலும், தட்டைக்கல் துர்க்கம் - 2029 அடி உயரத்திலும். இரத்தினகிரி - 2800 அடி உயரத்திலும், சூலகிரி - 2981 அடி உயரத்திலும், அமைந்துள்ளது கொங்கு பகுதியில் கோட்டைகளாம்.
14 ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகளிருந்தன. இவர்கள் தமிழ் மொழி பேசும் நிலையில் கொங்குத் தமிழ் அல்லது கோயம்புத்தூர் தமிழ் என்பது பேசப்படும் வட்டார வழக்கு மொழியாகும். இவ்வட்டார வழக்கு மொழியை கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி,கரூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டத்தின் வட பகுதி மாவட்டங்களில் வசிக்கும் மக்களால் பேசப்படுகிறது. இவ்வழக்கு இதற்கு முன்பு ”காங்கி” என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
கொங்கு என்ற சொல்லுக்குத் கங்க என்பது பொருள். எனவே கங்கர் பேசும் மொழியாதலால், காங்கி எனப்பெயர்பெற்றது என சொல்லப்படுகிறது. இம்மொழிக்கு சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின் தான் கொங்குத் தமிழ் என்று பெயர் மாற்றப்பட்டது. அதற்கு முன் அவ்வாறு பெயர் இல்லை.மேலும் இவர்கள் வாழ்ந்த இடத்தை கொங்கு நாடு எனவும் அப்போது தான் அழைத்தனர்.
தமிழின் சிறப்பு 'ழ' என்பது போல் கொங்குத் தமிழின் சிறப்பு 'ற' மற்றும் 'ங்' என்பனவாகும். என்னுடைய, உன்னுடைய என்பதை என்ற, உன்ற என்றும், என்னடா என்பதை என்றா என்பார்கள். சாப்பிட்டுவிட்டு, குளித்துவிட்டு என்பனவற்றை சாப்டுபோட்டு, "தண்ணிவார்த்துகுட்டு”, 'தண்ணிஊத்திக்கிட்டு' என்று கூறுவார்கள். இதையே மரியாதை என்று அவர்கள் கூறினர் கொங்கு தமிழ். என்றனர் ஏனுங்கோ, சொல்லுங்கோ, வாங்கோ, போங்கோ என்று எதிலும் 'ங்கோ' போட்டுப் பேசுவார்கள். பெரியவர்களிடம் பேசும் போது 'ங்கோ' என்பதற்கு பதில் 'ங்' போட்டும் செற்றொடரை முழுமையாக முடிக்காமல் பேசுவார்கள். முழுமையாக முடிக்காமலா சொல்லுங், வாங், போங், சரிங், இல்லீங் என்று 'கோ' வை சொல்லாமல் மொழியை பேச்சில் பாதி விழுங்கி விடுவார்கள். எப்படி பேச்சு வழக்கில் சமஸ்கிருதம் தமிழ் மொழி கலப்பு வந்தது எனப் பார்த்தால் சமஸ்கிருதமாக்கப்பட்ட
தமிழ்ச் சொற்கள். பல இன்றும் ஆங்கிலக் கலப்பு தமிழ் மொழி பேசுவோர் போல தமிழில் சமஸ்கிருதம் கலந்த நிகழ்வுண்டு. பூவை புஷ்பமாக்கி, அழகை சுந்தராக்கி, முடியை கேசமாக்கி, தீயை அக்னியாக்கி, காற்றை வாயுவாக்கி, பிணத்தை சவமாக்கி, கெட்டதை பாவமாக்கி, முகத்தை வதனமாக்கி, அறிவைப் புத்தியாக்கி, அவையை சபையாக்கி, ஆசானைக் குருவாக்கி, இசையை சங்கீதமாக்கி, குண்டத்தை யாகமாக்கி, பெரியதை மஹாவாக்கி, மக்களை ஜனங்களாக்கி, நிலத்தை பூலோகமாக்கி, அமிழ்தை அமிர்தமாக்கி, அருள்மிகுவை ஶ்ரீ ஆக்கி, ஆடையை வஸ்திரமாக்கி, உணவை போஜனமாக்கி, உணர்வற்றதை ஜடமாக்கி, ஓவியத்தை சித்திரமாக்கி, கலையை சாஸ்திரமாக்கி, விண்ணை ஆகாயமாக்கி, குளியலை ஸ்நானமாக்கித், தொழுதலை பூஜையாக்கி, தண்ணீரைத் தீர்த்தமாக்கி, மாணவனை சிஷ்யனாக்கி, வேண்டுதலை பிராத்தனையாக்கி, முறைகளை ஆச்சாரமாக்கி, பத்தாம் நாளை தசமியாக்கி, திருவிழாவை உற்சவமாக்கி, பருவமடைதலை ருதுவாக்கி, உறக்கத்தை நித்திரையாக்கி, திருமணத்தை விவாகமாக்கி, பயணத்தை யாத்திரையாக்கி, செருப்பை பாதரட்ஷையாக்கி, படையலை நைவய்தியமாக்கி, பள்ளிகளை வித்யாலயமாக்கி, பிள்ளைப்பேறை பிரசவமாக்கி, வணக்கத்தை நமஸ்காரமாக்கி, அன்பளிப்பை தட்ஷணையாக்கி, ஒன்பதாம் நாளை நவமியாக்கி, அறிவியலை விஞ்ஞானமாக்கி, படிப்பித்தலை அப்பியாசமாக்கி, கருவறையை கர்ப்பகிரகமாக்கி, வேளாண்மையை விவசாயமாக்கி, குடமுழுக்கை கும்பாபிஷேகமாக்கி, எப்படி எப்படி அழகு தமிழ்ச் சொற்கள் அழிந்துள்ளன
அனைத்து இடங்களிலும் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த பலர் மறந்து ஆங்கிலம் தான் பேச அதற்கு தமிழில் என்ன சொல்ல வேண்டும் என கேட்கும் நிலையில்
தாய்மொழியாம் தமிழ் மொழியைப் பேணுவோம் கொங்கு என்பது ஒரு நாடல்ல வட்டார வழக்கு மொழி இன கலாசாரப் பகுதி என்பதே.ஒரு நாளிதழ் இன்று தனது செய்தி பிரசுரித்த மொழி வாரியாக பிரிக்க தமிழகத்தின் கொங்கு வட்டார வழக்கு மொழி பிரதேசம் குறித்து வந்த செய்தி பிரிவினைக்கு வழி வகுக்கும் செயல் அதை தமிழ் மொழி பேசும் யாவரும் ஆதரிக்கத் கூடாது என்பதே தமிழறிஞர்கள் பலர் கருத்து.பஞ்சாபில் காலிஸ்தான்,,மேற்கு வங்கத்தில் கூர்க்காலாந்து, அசாமில் போடோலாந்து, மகாராஷ்ட்ராவை பிரித்து விதர்பா,
உத்திரபிரதேசத்தைப் பிரித்து பூர்வாஞ்சல்,, ஹரித்பிரதேசம் உருவாக்க வேண்டுமென்ற தனி மாநில கோரிக்கைகளை முன்வைப்போர் எல்லாம் பிரிவினைவாதிகளாக ,தீவிரவாதிகளாக அந்தந்த மாநில அரசுகளால் அடையாளம் காணப்பட்டு எக்கசக்கமான வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆகவே.
தமிழகஅரசும் மற்ற மாநில அரசுகளைப் போல கருணையோ. இரக்கமோ காட்டாமல். தமிழகத்தில் பிரிவினை வாதக் கோரிக்கை வைப்போரின் மீது நடவடிக்கை வரவேண்டும் என்பதே பல தமிழகத்த் தலைவர்கள் கருத்து. பலர் தமிழகத்தில் இந்தத் தலைமுறையில் தமிழில் பெயர் வைப்பது கூடக் குறைகிறது காரணம் அதை நாகரீகமென நினைக்கும் மக்கள் தற்போது வைக்கும் பெயர்களை அவர்கள் அதற்கு அர்த்தம் தெரியாமல் வைக்கும் நிலை அதிகரித்துள்ளது அதில் சில யாஷிஹா ,கோபிஹா,தர்ஷினி,மஹிஷா,கேஷவ்,கிருஷ், அபர்ணா,நித்ரா, இப்படி பல இதன் உண்மையான அர்த்தம் தெரிந்தால் அவர்கள் வைக்கமாட்டார்கள்.ஆனால் பல நியூமராலஜி ஜோதிடர்கள் அதன் அர்த்தம் சொல்வதில்லை நல்ல தமிழ் பெயர் வைத்த நிகழ்வு தற்போது மாற்றம் பெற கலாச்சாரம் சீர்கெட்டதே காரணமாகும் அதே போல் தான் வட்டார வழக்கு கொண்ட ஒரு பகுதியை நாடு என அழைக்கப்படும் நிலை வரலாறு அறியாத தலைமுறைக்கு இது பதிவாகியுள்ளது. ஆனால் இதை வரலாற்று அறிஞர்கள் ஏற்கவில்லை, ரசிக்கவில்லை. என்பதே உண்மை.
.
கருத்துகள்