முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைக்க அரசின் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்



நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைப்பதற்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விளக்கம்

நாடாளுமன்ற மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர்கள் சாத்வி நிரஞ்சன் ஜோதி மற்றும் திரு அஷ்வினி குமார் சௌபே, கீழ்கண்ட தகவல்களை அளித்தனர்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுக்குள் வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அவ்வப்போது அரசு எடுத்து வருகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சமையல் எண்ணெய்களின் சர்வதேச விலைகள் 51 முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.

சமையல் எண்ணெய்களின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக, கச்சா பாமாயிலின் மீதான வரியை 5 சதவீதம் குறைத்து அரசு அறிவித்தது. வேளாண், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் துறையால் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (எண்ணெய் வித்துகள் மற்றும் எண்ணெய் பனை) எனும் மத்திய அரசு நிதியுதவி பெற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) சட்டம், 2020, அரசால் கொண்டுவரப்பட்டது. ஆனல், அதன் செயல்படுத்தலை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

நுகர்வோர் நலன் (மின்-வணிகம்) விதிகளில் திருத்தம், 2020, மின்-வர்த்தகத்தில் நியாயமில்லா வணிக நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும், ஒழுங்குமுறைச் செயல்பாடுகளை வலுப்படுத்தவும் முன்மொழியப்பட்டது. இது குறித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அரசு வரவேற்றுள்ளது.

வேளாண் பொருட்களின் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த குளிர் சங்கிலி மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட உள்கட்டமைப்புக்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு தோட்டக்கலை மற்றும் தோட்டக்கலை சாராத பொருட்கள் தகுதி பெறும். 2017-18-ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக ரூ 196.15 கோடி செலவிடப்பட்ட நிலையில், 2020-21-ம் ஆண்டில் ரூ 207.40 கோடி செலவிடப்பட்டுள்ளது.

குளிர் சங்கிலி திட்டத்தின் கிழ், தமிழகத்தில் 17 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 10 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, 7 திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் திட்டங்களின் மதிப்பு ரூ 523.97 கோடியாகவும், ஒப்புதல் அளிக்கப்பட்ட மானியம் ரூ 117.01 கோடியாகவும், வழங்கப்பட்டுள்ள மானியம் ரூ 70.80 கோடியாகவும், முதலீட்டின் மதிப்பீடு ரூ 406.96 கோடியாகவும், உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 10,200 ஆகவும், பலன் அடைந்த விவசாயிகளின் எண்ணிக்கை 162,384 கோடியாகவும் உள்ளது.

மொத்தமுள்ள 23.63 கோடி ரேஷன் அட்டைகளில் 21.92 கோடி (92.8 சதவீதம்) தேசிய அளவில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்ட சீர்திருத்தத்தின் கீழ் ரூ 37600 கோடி கூடுதல் கடன் வாங்க 2020-21-ம் ஆண்டில் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ 8,813.00 கோடி கடன் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ 37,600.00 கோடிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைகளை ஆதாருடன் இணைப்பதற்கான பணிகள் ஜார்கண்ட், மிசோராம், லடாக், நாகாலாந்து, மேற்கு வங்கம், அருணாச்சலப் பிரதேசம், அசாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் பல்வேறு காரணங்களினால் மெதுவாக நடைபெற்று வருகின்றன                            

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...