முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டணியை மேம்படுத்துவதில் அமைச்சகம் மிக முக்கிய பங்காற்றுகிறது மத்திய அமைச்சர் தகவல்:

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டணியை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மிக முக்கிய பங்காற்றுகிறது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்


மாநிலங்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

வாழ்வதற்கு சிறந்த அறிவியல் பூர்வமான இடமாக உலகை மேம்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளில் பல்வேறு அறிவியல் சார்ந்த அமைச்சகங்களும் துறைகளும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றன. எரிசக்தி, நீர், மருத்துவம் மற்றும் விண்வெளி உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டணியை மேம்படுத்துவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.

தூய்மையான எரிசக்தி மற்றும் நீர் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப இயக்கத் திட்டங்கள் கவனம் செலுத்தி வருகின்றன. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அடங்கிய வெளிநாடுகளில் வசிக்கும் விஞ்ஞானிகள், கல்வியாளர்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து முக்கியத் துறைகளில் உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கூட்டணிகளை வலுப்படுத்துவதற்கான திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு இளம் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சூரிய ஒளி சக்தி, தரமான எரிசக்தியைக் கட்டமைத்தல், உயரிய மற்றும் மேம்பட்ட இணைப்பு மற்றும் தண்ணீர் ஆராய்ச்சி உள்ளிட்டத் துறைகளில் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. விமான உயிரி எரிவாயுவில் உலகளாவிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டணியை அமைப்பதற்காக அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றத்தின் (சிஎஸ்ஐஆர்) வாயிலாக தொழில்நுட்ப மையமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. சிஎஸ்ஐஆர் அமைப்பு, அமெரிக்காவின் பசிபிக் இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் டைமெதைல் வினையூக்கியின் விநியோகத்திற்கு ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. மேலும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் அது சம்பந்தமான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவின் சுற்றுச்சூழல் சுகாதார அறிவியலுக்கான தேசிய நிறுவனத்துடன் சிஎஸ்ஐஆர் அமைப்பு மற்றும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தியாவில் மருத்துவ ஆராய்ச்சியின் மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பிற்கு ஆதரவளிப்பதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் மேலுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் விண்வெளி சார்ந்த நவீன வசதிகளைக் கட்டமைக்கும் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நாட்டில் அதிகரிப்பதற்காக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கொள்கை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தொழில்துறை மற்றும் புதிய நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அடிப்படை ஆராய்ச்சி, பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளில் கவனம் செலுத்தி, கொவிட்-19 சம்பந்தமான சவால்களை எதிர் கொள்வதற்காக வலுவான தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, பிரேசில், டென்மார்க், எகிப்து, இஸ்ரேல், ஜப்பான், போர்ச்சுகல், கொரியா, நார்வே, ரஷ்யா, செர்பியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து கொவிட்-19 தொற்றுக்கு எதிரான தீர்வுகளை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேம்பட்ட மருத்துவச் சோதனைகளுக்கான கூட்டணி என்ற முன்முயற்சியின் கீழ், அண்டை நாடுகளில் மருத்துவச் சோதனையை வலுப்படுத்துவதற்காக உயிரி தொழில்நுட்பத் துறை, வெளியுறவு அமைச்சகத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. உலகளாவிய தடுப்பூசி உற்பத்தி முனையமாக பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் படி இந்நாள்வரை கோவாக்ஸ் திட்டத்தின் வாயிலாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட சுமார் 19.86 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற நடவடிக்கைகளால் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள், மருத்துவ பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சி, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு யோகாவை அடிப்படையாகக் கொண்ட திட்டம் போன்ற தனித்துவம் வாய்ந்த முயற்சிகளால் இந்தியா பிற நாடுகளிலிருந்து தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் வேறுபட்டுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...