காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் முன்னால் முதல்வர் வீர்பத்ர சிங் மறைவு பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்.
இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திரு.வீரபத்ர சிங் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
பிரதமர் திரு.நரேந்திர மோடி, இமாச்சலப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திரு.வீரபத்ர சிங் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில், “நிர்வாகத்திலும், சட்டமன்ற விவகாரங்களிலும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவரான திரு.வீரபத்ர சிங் அவர்களின் அரசியல் பயணம் மிக நீண்டது. இமாச்சலப் பிரதேசத்தின் நலனுக்காக அவர் முக்கியப் பங்காற்றினார். அம்மாநில மக்களுக்காக அயராது உழைத்தார். அவரது மறைவால் நான் துயருற்றேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தின் நான்காவது முதல்வரானவர். 9 முறை எம்.எல்.ஏ, 5 முறை எம்.பியாகவும், 5 முறை முதல்வராகவும் பதவி வகித்தவர். 87 வயதான வீர்பத்ர சிங் ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவர் காலமானார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்