சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கையென.அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்.
தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிலுள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்.
சீர்காழியில் நடந்த நிகழ்வில் மேலும் தெரிவித்ததாவது. தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிலுள்ள சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பி.கே. சேகர் பாபு தெரிவித்தார்.
மயிலாடுதுறை மாவட் டம் சீர்காழி வட்டம் மேலையூரில் இந்து சமய அற நிலையத்துறையின் நிர்வாகத்தில் இயங்கும் பூம்புகார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்த. பின்னர் அவர் அளித்த தகவலில்: தமிழக முதல்வரின் ஆலோசனை
யின் பேரில் இந்து சமய அறநிலையதுறையின் நிர்வாகத்தில் இயங்கும் பள்ளி, கல்லூரிகளை ஆய்வு செய்து வருகிறோம் இக்கல்லூரியில் 2000 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களின் குழந்தைகள் பயில்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் இந்தக் கல்லூரி கேட்பாரற்று படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆய்வின்போது போதிய ஆசிரியர்கள், பணியாளர்கள் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
தேவையான நிதியைப் பெற்று தனியார் கல்லூரி, பள்ளிகளை விட இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் இயங்கும் கல்லூரி, பள்ளிகளில் தரம் உயர்ந்த கல்வியை தரும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் முழு ஒத்துழைப்புத் தர வேண்டுமென்று அவர் கூறினார். மேலும்
தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிலுள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநி லையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுமா? என கேட்கப்பட்டதற்கு, சிதம்பரம் நடராஜர் கோவில் தொடர்பாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தியுள்ளோம். இது தொடர்பாக முதல்வர் தனிகவனமெடுத்து வருகிறார். தகுந்த நேரத்
தில் தகுந்த நடவடிக்கை வருமென்றார்.
கருத்துகள்