சுயவிளம்பரத்துக்காக சமூகவலைதளங்களில் அவதூறு பதிவுகள் - தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் எச்சரிக்கை
சுயவிளம்பரத்துக்காக சமூகவலைதளங்களில் அவதூறு பதிவுகள் - தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரிக்கை
சிலர் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்திலும் மலிவான தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். அவ்வாறு
சுயவிளம்பரத்துக்காக சமூகவலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைதளத்தில் ஆபாச பேச்சு, அவதூறுக் கருத்துக்களை பதிவிட்டு வந்த சில யூடியூபர்கள் மீது குவிந்த புகாரை அடுத்து காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டது. சமூகவலைத்தளத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், சிலர் சுய விளம்பரத்திற்காகவும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் சமூகவலைதளத்தில் எல்லை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள
அறிக்கையில், “ சமூகவலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் சிலர் சுய விளம்பரத்துக்காக சமூகவலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து , சட்டம் ஒழுங்குப் பிரச்னையை தூண்டி வருகின்றனர்.
குறிப்பிட்ட சிலர் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும். குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன.
காவல்துறையைப் பொறுத்தவரை, சமூகவலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களைத் தூண்டும் வகையிலும் , பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தால் அதற்குக் காரணமாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சட்ட நடவடிக்கைகள் எப்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2021 மே மாதம் முதல் தற்போது வரையில் மாநிலம் முழுவதும் சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறுப் பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள்
மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்திலும் மட்டுமே காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணியின் தலைவரும் மூத்த பத்திரிகையாளருமான என்.ராம், மூத்த பத்திரிகையாளர்கள் ஆர்.பகவான் சிங், நக்கீரன் வார இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால், பெண் ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் லட்சுமி சுப்பிரமணியன், இந்துஜா ரகுநாதன், அமைப்பாளர் பீர் முகமது ஆகியோர் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் மீது நடந்து முடிந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என முதல்வர் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்தனர். தமிழகத்தில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்றும் பத்திரிகையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார். சுயவிளம்பரத்துக்காக சமூகவலைதளங்களில் அவதூறு பதிவுகள் - தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரிக்கை
சிலர் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்திலும் மலிவான தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். அவ்வாறு
சுயவிளம்பரத்துக்காக சமூகவலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகவலைதளத்தில் ஆபாச பேச்சு, அவதூறுக் கருத்துக்களை பதிவிட்டு வந்த சில யூடியூபர்கள் மீது குவிந்த புகாரை அடுத்து காவல்துறை கைது நடவடிக்கையில் ஈடுபட்டது. சமூகவலைத்தளத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், சிலர் சுய விளம்பரத்திற்காகவும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் சமூகவலைதளத்தில் எல்லை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள
அறிக்கையில், “ சமூகவலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் சிலர் சுய விளம்பரத்துக்காக சமூகவலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து , சட்டம் ஒழுங்குப் பிரச்னையை தூண்டி வருகின்றனர்.
குறிப்பிட்ட சிலர் கருத்து சுதந்திரம் எனும் பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும். குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன.
காவல்துறையைப் பொறுத்தவரை, சமூகவலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களைத் தூண்டும் வகையிலும் , பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தால் அதற்குக் காரணமாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சட்ட நடவடிக்கைகள் எப்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2021 மே மாதம் முதல் தற்போது வரையில் மாநிலம் முழுவதும் சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறுப் பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்திலும் மட்டுமே காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்