முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடல்

பிரதமர் அலுவலகம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் கலந்துரையாடினார்


விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் சகஜமாக பேசினார்

135 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் நாட்டின் ஆசிர்வாதங்கள்: பிரதமர்

சிறப்பான பயிற்சி முகாம்கள், சாதனங்கள், சர்வதேச வெளிப்பாடு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன: பிரதமர்



புதிய சிந்தனை மற்றும் புதிய அணுகுமுறையுடன் நாடு எப்படி தங்களுடன் துணை நிற்கிறது என்பதை விளையாட்டு வீரர்கள் இன்று பார்த்தனர்: பிரதமர்

முதல் முறையாக, விளையாட்டின் பல பிரிவுகளில் ஒலிம்பிக் போட்டிக்கு ஏராளமான வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்: பிரதமர்

இந்தியா முதல் முறையாக தகுதிபெற்ற பல விளையாட்டுகள் உள்ளன: பிரதமர்

இந்தியாவுக்காக உற்சாகப்படுத்துவது நாட்டு மக்களின் கடமை: பிரதமர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய விளையாட்டு வீரர்கள் குழுவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்பதை முன்னிட்டு, வீரர்களை ஊக்குவிக்கும் முயற்சிதான் பிரதமரின் கலந்துரையாடல். இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாகூர், இணையமைச்சர் திரு நிசித் பிரமனிக், சட்ட அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

சகஜமாக கலந்துரையாடிய பிரதமர், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார், குடும்ப உறுப்பினர்கள் செய்த தியாகங்களுக்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். வில் அம்பு வீராங்கனை தீபிகா குமாரியிடம் பேசிய பிரதமர், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். தீபிகா குமாரியின் பயணம், மாங்காய் பறிப்பது முதல் வில் அம்பு போட்டி வரை வந்துள்ளதை பிரதமர் குறிப்பிட்டார். விளையாட்டு வீராங்கனையாக அவரது பயணம் பற்றி பிரதமர் விசாரித்தார்.  சிக்கலான சூழ்நிலையை சந்தித்தபோதிலும், வில் அம்பு போட்டியில் பிரவீன் ஜாதவ் தொடர்ந்து இருந்ததை பிரதமர் பாராட்டினார். அவரது குடும்பத்தினருடன் கலந்துரையாடிய பிரதமர், அவர்களின் முயற்சிகளை பாராட்டினார். அந்த குடும்பத்தினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி மராத்தியில் பேசினார்.

ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்கும் வீரர் நீரஜ் சோப்ராவுடன் பேசிய பிரதமர், இந்திய ராணுவத்துடன் அவரது அனுபவம் குறித்தும், காயத்திலிருந்து அவர் மீண்டது குறித்தும் விசாரித்தார். எதிர்பார்ப்பை கண்டுகொள்ளாமல், தன்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படும்படி அந்த வீரரை திரு நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்துடன் பேசிய பிரதமர் திரு மோடி, அவரது பெயருக்கான அர்த்தத்தை கேட்டு பேச்சை தொடங்கினார். பிரகாசம் என அறிந்ததும், விளையாட்டு திறன்கள் மூலம் ஒளியை பரப்பும்படி அவருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். விளையாட்டு வீரர்களின் பின்னால் இந்தியா இருப்பதால், அச்சமின்றி முன்னேறும் படி அவரை பிரதமர் கேட்டுக் கொண்டார். குத்துச் சண்டையை தேர்வு செய்தது ஏன் என குத்துச் சண்டை வீரர் ஆசிஷ் குமாரிடம் பிரதமர் கேட்டார். கொரோனாவுடன் போராடி பயிற்சியை தொடர்ந்தது எப்படி என அவரிடம் பிரதமர் கேட்டார். தந்தையை இழந்தபோதிலும், தனது இலக்கில் இருந்து அவர் விலகாமல் இருந்ததை பிரதமர் பாராட்டினார்.  சோகத்தில் இருந்து மீள்வதில் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆதரவாக இருந்ததை அந்த வீரர் நினைவுகூர்ந்தார். இதேபோன்ற சூழலில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டல்கரும் தனது தந்தையை இழந்த சம்பவத்தையும், தனது விளையாட்டு மூலம் அவர் தனது தந்தைக்கு புகழஞ்சலி செலுத்தியதையும்  பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்தார்.

விளையாட்டு வீரர்கள் பலருக்கு முன்மாதிரியாக இருப்பதற்காக குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம்-ஐ பிரதமர் பாராட்டினார். குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, தொற்று நேரத்தில் விளையாட்டையும் அவர் தொடர்ந்தது குறித்து பிரதமர் விசாரித்தார். அவருக்கு பிடித்த குத்து மற்றும் வீரர் குறித்தும் பிரதமர் கேட்டார். சிறப்பாக செயல்பட அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுடன் பேசிய பிரதமர், ஐதராபாத் கச்சிபவுலியில் அவர் பெற்ற பயிற்சி குறித்தும் விசாரித்தார்.  அவரது பயிற்சியில் உணவின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் கேட்டார். குழந்தைகளை விளையாட்டு வீரர்களாக ஆக்க விரும்பும் பெற்றோர்களுக்கு, என்ன ஆலோசனை மற்றும் உதவி குறிப்புகள் கூற விரும்புகிறீர்கள் என பி.வி.சிந்துவின் பெற்றோரிடம் பிரதமர் கேட்டார். ஒலிம்பிக்கில் வெற்றி பெற பி.வி.சிந்துவுக்கு  வாழ்த்து தெரிவித்த பிரதமர், ஒலிம்பிக் போட்டியில் இருந்து திரும்பி வருகையில் அவர்களை வரவேற்கும்போது, அவருடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக பிரதமர் கூறினார். 

விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது ஏன் என துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனில் வாலறிவனிடம் பிரதமர் கேட்டார். அகமதாபாத்தில் வளர்ந்த அவரிடம் குஜராத்தியில் பேசிய பிரதமர் அவரது பெற்றோர்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்தார். மணிநகர் பகுதி எம்.எல்.ஏ.வாக திரு நரேந்திர மோடி இருந்ததால், தனது ஆரம்ப காலங்கள் பற்றியும் இளவேனில் நினைவு கூர்ந்தார். அவர் படிப்பு மற்றும் விளையாட்டு பயிற்சி இரண்டையும் எப்படி சமன் செய்தார் என்பது குறித்தும் பிரதமர் விசாரித்தார்.

துப்பாக்கி சுடும் வீரர் சவுரப் சவுதரியிடம் பேசிய பிரதமர், கவனம் மற்றும் மனதை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கு குறித்தும் பேசினார். முந்தைய ஒலிம்பிக் போட்டிக்கும், தற்போதைய ஒலிம்பிக் போட்டிக்கும் உள்ள வித்தியாசம், கொரோனா தொற்றின் தாக்கம் பற்றி பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலிடம் பிரதமர் கேட்டார். அவரது பரந்த அனுபவம், ஒட்டுமொத்த விளையாட்டு குழுவுக்கும் உதவும் என திரு நரேந்திர மோடி கூறினார். மற்றொரு டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, ஏழை குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிப்பதற்காக அவரை புகழ்ந்தார். விளையாடும்போது அவர் தனது மூவர்ண பட்டை  அணிவதை பிரதமர் குறிப்பிட்டார். நடனம் மீதான அவரது ஆர்வம் விளையாட்டுகளில் மன அழுத்தமாக உள்ளதா எனவும் பிரதமர் கேட்டார்.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட்டிடம் பேசிய பிரதமர், குடும்ப மரபு காரணமாக, உயர்ந்த எதிர்பார்ப்புகளை அவர் எப்படி சமாளிக்கிறார் என கேட்டார். அவரது சவால்களை குறிப்பிட்டு, அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என பிரதமர் கேட்டார். அவரது தந்தையிடம் பேசிய பிரதமர், இத்தகைய புகழ்பெற்ற மகள்களை வளர்ப்பதற்கான வழிகளை பிரதமர் கேட்டார். நீச்சல் வீரர் சஜன் பிரகாஷிடம் பேசிய பிரதமர், பலத்த காயத்திலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

ஹாக்கி வீரர் மன்ப்ரீத் சிங்கிடம் பேசிய பிரதமர் கூறுகையில், இவருடன் பேசுவது, ஹாக்கி பிரபலங்கள் மேஜன் தயன் சந்த் போன்றோரிடம் பேசுவதை ஞாபகப்படுத்துவதாக உள்ளது என்றார்.  அவரது குழு, பாரம்பரியத்தை தொடர்ந்து காப்பாற்றும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் பேசிய பிரதமர், டென்னிஸ் விளையாட்டின் பிரபலம் அதிகரித்து வருவதை குறிப்பிட்டார், மற்றும் புதிய வீரர்களுக்கு சானியா மிர்சாவின் அறிவுரை குறித்தும் பிரதமர் கேட்டார். டென்னிஸில் சானியா மிர்சாவுடன்  விளையாடும் வீராங்கனையுடன், அவரது சமன்நிலை குறித்தும் பிரதமர் விசாரித்தார். கடந்த 5-6 ஆண்டுகளில் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா கண்ட மாற்றம் குறித்தும் பிரதமர் கேட்டார். சமீப காலங்களில் இந்தியா தன்னம்பிக்கையை பார்ப்பதாகவும், அது செயல்பாட்டில் பிரதிபலிக்கும் என சானியா மிர்சா கூறினார்.

இந்திய விளையாட்டு வீரர்களிடம் பேசும்போது, தொற்று காரணமாக அவர்களுக்கு விருந்தளிக்க முடியவில்லை என பிரதமர் வருத்தம் தெரிவித்தார். கொரோனா தொற்று, வீரர்களின் பயிற்சியை மாற்றியதோடு, ஒலிம்பிக் ஆண்டையும் மாற்றிவிட்டது என பிரதமர் குறிப்பிட்டார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும்படி மனதின் குரல் நிகழ்சியில் நாட்டு மக்களிடம் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார்.  #Cheer4India ஹேஸ்டாக் பிரபலத்தையும் அவர் குறிப்பிட்டார்.  நாடு அவர்களின் பின்னால் உள்ளதாகவும், அவர்ளுக்கு நாட்டு மக்களின் ஆசிர்வாதங்கள்  உள்ளன எனவும் அவர் கூறினார். நமோ செயலியில் மக்கள் உள்ளே சென்று விளையாட்டு வீரர்களை மக்கள் உற்சாகப்படுத்தலாம் என்றும், அதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். ‘‘135 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்கள், விளையாட்டு களத்தில் நுழையும் முன் உங்கள் அனைவருக்கும் நாட்டின் ஆசிர்வாதங்கள்’’ என பிரதமர் கூறினார்.

விளையாட்டு வீரர்களிடம் உள்ள பொதுவான பண்புகள், தைரியம், நம்பிக்கை மற்றும் நேர்மறை என பிரதமர் குறிப்பிட்டார். அனைத்து வீரர்களும் ஒழுங்கு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதி என்ற பொதுவான காரணிகளை கொண்டுள்ளனர் என அவர் கூறினார். விளையாட்டு வீரர்களிடம் உறுதி மற்றும் போட்டித்திறன் ஆகிய இரண்டும் உள்ளதை பிரதமர் குறிப்பிட்டார். புதிய இந்தியாவிலும் இதே பண்புகள் உள்ளன. புதிய இந்தியாவை விளையாட்டு வீரர்கள் பிரதிபலிக்கின்றனர் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை அடையாளப்படுத்துகிறார்கள் என பிரதமர் கூறினார்.

புதிய சிந்தனை மற்றும் புதிய அணுகுமுறையுடன், விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவரின் பின்னால் நாடு துணை நிற்பதை விளையாட்டு வீரர்கள் இன்று கண்டனர் என பிரதமர் கூறினார். இன்று உங்களின் உந்துதல் நாட்டுக்கு முக்கியம். வீரர்கள் முழு திறனுடன் சுதந்திரமாக விளையாடவும், தங்கள் விளையாட்டு மற்றும் நுட்பத்தை மேம்படுத்தவும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.  விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் சமீபகாலத்தில் கொண்டு வரப்பட்ட மாற்றங்களையும் பிரதமர் குறிப்பிட்டார்.

விளையாட்டு வீரர்களுக்கு  சிறப்பான பயிற்சி முகாம்கள் மற்றும் சிறந்த சாதனங்கள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என பிரதமர் கூறினார்.  தற்போது விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் சர்வதேச வெளிப்பாடு அளிக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களின் ஆலோசனையால், விளையாட்டு தொடர்பான நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், குறுகிய காலத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு அதிக அளவிலான வீரர்கள் தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். இதற்கு உடல் தகுதி இந்தியா, கேலோ இந்தியா போன்ற பிரசாரங்களும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன என அவர் கூறினார். முதல் முறையாக, இந்திய வீரர்கள் அதிக அளவிலான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர் என அவர் கூறினார். முதல் முறையாக இந்தியா பல விளையாட்டுகளில் தகுதி பெற்றுள்ளது.

இளம் இந்தியாவின் நம்பிக்கையையும் ஆற்றலையும் பார்த்து, வெற்றி மட்டுமே, புதிய இந்தியாவின் வழக்கமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று என்று பிரதமர் கூறினார். சிறப்பாக விளையாடும்படி விளையாட்டு வீரர்களுக்கு அறிவுரை கூறிய பிரதமர், இந்தியாவுக்காக உற்சாகப்படுத்தும்படி அவர் நாட்டு மக்களை கேட்டுக் கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...