முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதாரிக்கவில்லை: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்


 உள்துறை அமைச்சகம்

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதாரிக்கவில்லை: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதாரிக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் தெரிவித்தார்.

மக்களவையில் அவர் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

செல்லுபடியாகக் கூடியப் பயண ஆவணங்கள் இன்றி, நாட்டில் நுழையும் வெளிநாட்டினர் சட்விரோதக் குடியேறிகளாகக் கருதப்படுகின்றனர். எந்தவித சட்டவிரோதக் குடியேற்றத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை.

மியான்மரில் உள்நாட்டு நிலவரம் காரணமாக, மியான்மர் மக்கள், இந்தியப் பகுதிக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக நுழைபவர்களை கண்காணித்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணிப்பூர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடந்த மார்ச் 10ம் தேதி அன்று அறிவுறுத்தல் வழங்கியது.

காசி மொழி சேர்ப்பு பற்றி பரிசீலனை: 

இந்திய அரசியல் சாசனத்தின் 8வது அட்டவனையில் காசி மொழியை சேர்க்க வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் விடப்பட்டன. இது தொடர்பானத் திட்டத்தை மத்திய அரசு பெற்றது. வட்டார மொழிகள் மற்றும் மொழிகளுக்கான அளவுகோல்களை நிர்ணயிப்பது சிரமம். மக்களின் உணர்வுகளை மனிதில் வைத்து, இது போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

நக்சல் தாக்குதல்:

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில், நக்சல் நடவடிக்கைகள் குறைந்துள்ளன. சத்தீஸ்கரில் மாநில போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், பாதுகாப்புப் படை வீரர்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்.

நக்சலைட்டுகளின் கடத்தல்: 

இந்தாண்டில் இதுவரை ஜார்கண்ட்டில் 2 கடத்தல் சம்பவங்களும், கடந்தாண்டில், ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கரில் 6 கடத்தல் சம்பவங்களும் நடந்துள்ளன. 

கைதிகளுக்குக் கட்டாயக் கல்வி:

சிறைக் கைதிகளின் நலன்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது  மாநில அரசுகளின் பொறுப்பு. ஆனாலும், மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருகிறது. சிறைகளில் சிறப்புப் படிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், கைதிகளின் கல்விக்குத் திறந்தவெளி பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூரக் கல்வி  திட்டங்களைப் பிரபலப்படுத்தும் பயிலரங்குகளை நடத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

திஷா மசோதா:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சில குறிப்பிட்டக் குற்றங்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க  ‘ஆந்திர பிரதேசம் திசா மசோதா’ குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் பெறப்பட்ட ஆலோசனைகள் ஆந்திர பிரதேச அரசுடன் பகிரப்பட்டுள்ளது. ஆந்திர அரசிடமிருந்து இதற்கான விளக்கம் பெறப்படவில்லை.

காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு நிதியுதவி:

மாநில அரசுகளின் காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு, மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இதன் மூலம் ஆயுதங்கள், உளவு உபகரணங்கள், வாகனங்கள், கட்டுமானங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநிலங்களின் காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு கடந்த 2019-20ம் நிதியாண்டில், ரூ.65.98 கோடி வழங்கப்பட்டது.

மாநிலங்களின் எல்லைப் பிரச்னை:

ஹரியானா-ஹிமாச்சல் பிரதேசம், லடாக் - ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா- கர்நாடகா, அசாம் -அருணாச்சலப் பிரதேசம், அசாம் - நாகாலாந்து, அசாம் -மேகாலாயா, அசாம் - மிசோரம் ஆகியவை இடையே எல்லை பிரச்னை தொடர்பாக  எதிர்ப்பு மற்றும் மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இவற்றை மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மூலம்தான் தீர்க்க முடியும். பரஸ்பர புரிதல் அடிப்படையில், எல்லைப் பிரச்னைகளை சுமூகமாகத் தீர்ப்பதற்கான உதவிகளை மத்திய அரசு செய்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு  2021:

மக்கள் தொகை கணக்ககெடுப்பு சட்டம் 1948-ன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு -2021-ஐ வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என  இரண்டு கட்டங்களாக  நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.  ஆனால் கொவிட் தொற்று காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திபோடப்பட்டன.

சிஏஏ விதிகள்:

குடியுரிமை திருத்த சட்டம் 2019(சிஏஏ) கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.  இதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான கால வரம்பை 09/01.2022 வரை மேலும் நீட்டிக்க வேண்டும் என மக்களவை மற்றும் மாநிலங்களவைககான துணை சட்ட குழுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

பீகாருக்கு வெள்ள நிவாரணம்:

2020-21ம் நிதியாண்டில், பீகார் வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு ரூ.1255.27 கோடி வழங்கியது.  அதோடு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக, ரூ.1416 கோடி வழங்கப்பட்டது. மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக, முதல் தவணை ரூ.566.40 கோடி கடந்த ஏப்ரல் 29ம் தேதி அன்று  வழங்கப்பட்டது.






















                                                                                    ----

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...