முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதாரிக்கவில்லை: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்


 உள்துறை அமைச்சகம்

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதாரிக்கவில்லை: மக்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

சட்டவிரோதக் குடியேற்றத்தை இந்தியா ஆதாரிக்கவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந் ராய் தெரிவித்தார்.

மக்களவையில் அவர் இன்று எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது:

செல்லுபடியாகக் கூடியப் பயண ஆவணங்கள் இன்றி, நாட்டில் நுழையும் வெளிநாட்டினர் சட்விரோதக் குடியேறிகளாகக் கருதப்படுகின்றனர். எந்தவித சட்டவிரோதக் குடியேற்றத்தையும் இந்தியா ஆதரிக்கவில்லை.

மியான்மரில் உள்நாட்டு நிலவரம் காரணமாக, மியான்மர் மக்கள், இந்தியப் பகுதிக்குள் சட்டவிரோதமாக ஊடுருவுகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக நுழைபவர்களை கண்காணித்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணிப்பூர், மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடந்த மார்ச் 10ம் தேதி அன்று அறிவுறுத்தல் வழங்கியது.

காசி மொழி சேர்ப்பு பற்றி பரிசீலனை: 

இந்திய அரசியல் சாசனத்தின் 8வது அட்டவனையில் காசி மொழியை சேர்க்க வேண்டும் என அவ்வப்போது கோரிக்கைகள் விடப்பட்டன. இது தொடர்பானத் திட்டத்தை மத்திய அரசு பெற்றது. வட்டார மொழிகள் மற்றும் மொழிகளுக்கான அளவுகோல்களை நிர்ணயிப்பது சிரமம். மக்களின் உணர்வுகளை மனிதில் வைத்து, இது போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.

நக்சல் தாக்குதல்:

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில், நக்சல் நடவடிக்கைகள் குறைந்துள்ளன. சத்தீஸ்கரில் மாநில போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில், பாதுகாப்புப் படை வீரர்கள் 22 பேர் கொல்லப்பட்டனர்.

நக்சலைட்டுகளின் கடத்தல்: 

இந்தாண்டில் இதுவரை ஜார்கண்ட்டில் 2 கடத்தல் சம்பவங்களும், கடந்தாண்டில், ஜார்கண்ட், பீகார், சத்தீஸ்கரில் 6 கடத்தல் சம்பவங்களும் நடந்துள்ளன. 

கைதிகளுக்குக் கட்டாயக் கல்வி:

சிறைக் கைதிகளின் நலன்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது  மாநில அரசுகளின் பொறுப்பு. ஆனாலும், மத்திய உள்துறை அமைச்சகம் அவ்வப்போது ஆலோசனைகளை வழங்கி வருகிறது. சிறைகளில் சிறப்புப் படிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும், கைதிகளின் கல்விக்குத் திறந்தவெளி பல்கலைக்கழகம் மற்றும் தொலைதூரக் கல்வி  திட்டங்களைப் பிரபலப்படுத்தும் பயிலரங்குகளை நடத்த வேண்டும் எனவும் மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

திஷா மசோதா:

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சில குறிப்பிட்டக் குற்றங்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க  ‘ஆந்திர பிரதேசம் திசா மசோதா’ குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளிடம் பெறப்பட்ட ஆலோசனைகள் ஆந்திர பிரதேச அரசுடன் பகிரப்பட்டுள்ளது. ஆந்திர அரசிடமிருந்து இதற்கான விளக்கம் பெறப்படவில்லை.

காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு நிதியுதவி:

மாநில அரசுகளின் காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு, மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இதன் மூலம் ஆயுதங்கள், உளவு உபகரணங்கள், வாகனங்கள், கட்டுமானங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாநிலங்களின் காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு கடந்த 2019-20ம் நிதியாண்டில், ரூ.65.98 கோடி வழங்கப்பட்டது.

மாநிலங்களின் எல்லைப் பிரச்னை:

ஹரியானா-ஹிமாச்சல் பிரதேசம், லடாக் - ஹிமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா- கர்நாடகா, அசாம் -அருணாச்சலப் பிரதேசம், அசாம் - நாகாலாந்து, அசாம் -மேகாலாயா, அசாம் - மிசோரம் ஆகியவை இடையே எல்லை பிரச்னை தொடர்பாக  எதிர்ப்பு மற்றும் மோதல் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இவற்றை மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மூலம்தான் தீர்க்க முடியும். பரஸ்பர புரிதல் அடிப்படையில், எல்லைப் பிரச்னைகளை சுமூகமாகத் தீர்ப்பதற்கான உதவிகளை மத்திய அரசு செய்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு  2021:

மக்கள் தொகை கணக்ககெடுப்பு சட்டம் 1948-ன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு -2021-ஐ வீடுகள் கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என  இரண்டு கட்டங்களாக  நடத்த மத்திய அரசு முடிவு செய்தது.  ஆனால் கொவிட் தொற்று காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் ஒத்திபோடப்பட்டன.

சிஏஏ விதிகள்:

குடியுரிமை திருத்த சட்டம் 2019(சிஏஏ) கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.  இதற்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கான கால வரம்பை 09/01.2022 வரை மேலும் நீட்டிக்க வேண்டும் என மக்களவை மற்றும் மாநிலங்களவைககான துணை சட்ட குழுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

பீகாருக்கு வெள்ள நிவாரணம்:

2020-21ம் நிதியாண்டில், பீகார் வெள்ள நிவாரணத்துக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து மத்திய அரசு ரூ.1255.27 கோடி வழங்கியது.  அதோடு, மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக, ரூ.1416 கோடி வழங்கப்பட்டது. மேலும், மாநில பேரிடர் நிவாரண நிதியில் மத்திய அரசின் பங்காக, முதல் தவணை ரூ.566.40 கோடி கடந்த ஏப்ரல் 29ம் தேதி அன்று  வழங்கப்பட்டது.






















                                                                                    ----

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த