மஹா விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள் ஒன்றாக இந்து சமய வைணவர்களால் கிருஷ்ணரின் பிறப்பு. தமிழ் வருடம் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் நல்லிரவில் சிறையில் பிறந்த கிருஷ்ணருக்கு கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் வழிபாடு, பால கிருஷ்ணராகவும், கோபாலனாகவும் நான்காம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே அறியலாம். சிலப்பதிகாரத்தில் திருமால் இரண்டாம் நூற்றாண்டில் அறியலாம். பத்தாம் நூற்றாண்டின் மத்தியில் பக்தி இயக்கத்தின் மூலம் கிருஷ்ணர் வழிபாடு உச்சமடைந்தது. ஒடிசாவில் ஜெகன்னாதர், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவில் விட்டலர், கேரளாவில் குருவாயூரப்பன், துவாரகையில், துவாரகாதீசர், இமயத்தில் பத்ரிநாதரென பல பெயர் வடிவங்களில் வழிபடுகின்றனர்.
1960 களில் உருவான இஸ்கான் அமைப்பு கிருஷ்ண வழிபாட்டை மேற்கத்திய நாடுகளில் பரவச் செய்தது. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஆழ்வார்களால் திருமால் என்ற கண்ணன் பிரபலமாக வழிபடப்பட்ட நிகழ்வுண்டு.
பூர்வாஙக வரலாறு என்பது பண்டைய குரு நாட்டின் பேரரசர் யயாதியின் மகன் யதுவின் வழிவந்த விருஷ்ணி என்பாரின் வழித்தோன்றல்கள் ஆவார். அதுவே விருஷ்ணி குலமாகும். விருஷ்ணியின் இரண்டு மனைவிகளான காந்தாரியும், மாத்திரியும். விருஷ்ணிக்கு மாந்தாரிக்கும் பிறந்த மகன் தேவமிதுசா. அவரது மகன் தான் வசுதேவர் துவாரகையில் வாழ்ந்தவர். யயாதி - தேவயானியின் மூத்த மகன் யது தன் மகள் தேவயானியின் தோழிப் பெண்னான சர்மிஷ்டையின் யயாதியை மணந்து குழந்தைகளை பெற்றதனால், சுக்கிராச்சாரியால் சபத்தால் கிழவனாக யயாதி தவறுக்கு வருந்தியதால், உனது கிழத்தன்மையை உனது மகன்களில் ஒருவனுக்கு கொடுத்து, இழந்த கிழத்தன்மையை மீண்டும் பெறலாம் என சாபத்திற்கான பரிகாரமும் கூற.
யயாதியின் கிழத்தன்மையை ஏற்க மறுத்த காரணத்தினால்,யதுவும், அவனது வழித்தோன்றல்களும் இனி அரசாளும் உரிமையில்லாது போக யயாதி அளித்த சாபத்தால், யதுவின் வழித்தோன்றல்கள் நாட்டை ஆள இயலாது ஆடு, மாடு மேய்த்து பால், தயிர், வெண்ணெய் விற்பனை செய்து வாழ்ந்தனர். அவர்களே யது குல ஜாதவ் எனும் வடபுல யாதவர்கள். இது
யது குலத்தில், விருஷ்ணிகள், அந்தகர்கள், போஜர்கள், குகுரர்கள் என நான்கு உட்பிரிவுகள் கிளைகள் உறுவாகியது நிகழ்வு.விருஷ்ணி குலத்தின் சூரசேனரின் மகன் வசுதேவர் - தேவகி இணையருக்கு மதுராவில் கம்பால் சிறை வைக்கப்பட்ட நிலையில் எட்டாவது குழந்தையாக கிருட்டிணன் பிறந்தார். தாய்மாமன் கம்சனிடமிருந்து காக்க, கிருஷ்ணர் பிறந்த நாளன்றே இவரை வசுதேவர் யமுனை ஆற்றுக்குப் அப்பால் உள்ள கோகுலத்தில் குடியிருந்த யாதவ குலத்தினரான நந்தகோபர் - யசோதையிடம் ஒப்படைத்த பின்னர் யாதவர்களின் தலைவர் நந்தகோபர் - யசோதாயால் வளர்க்கப்பட்ட நிலையில் கோகுலம் வாழ்ந்த யாதவர்கள் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர்.
தமிழ்நாடு வாழ் மக்கள் 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சில இடங்களில் தான் வட மானிலத்தில் கொண்டாடுவது போல கிருஷ்ணருக்கு விழா எடுத்து உரியடித் திருவிழா கொண்டாடப்படுகிறது. வைணவர் இல்லங்கள் மற்றும் 108 திவ்ய தேசங்களில் கொண்டாடிய நிலையில் மேலும் இது 1992 க்குப் பின் விழா பொது வெளியில் நடத்தி வழிபடும் சூழல் வந்தது. தமிழகத்தில் வைணவநெறி வாழும் மக்கள் அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள். குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
கருத்துகள்