கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை, செப்டம்பர். 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு.
முன்னாள் முதல்வர் மறைந்த ஜெ. ஜெயலலிதாவின், நீலகிரி மாவட்டக், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்., 24 ஆம் தேதியில், நேபாளி காவலாளி ஓம் பகதுார், கொள்ளையரால் கொலை செய்யப்பட்டதுடன். முக்கிய ஆவணங்கள், பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு, ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடக்கிறது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது
குற்றம் சாட்டப்பட்ட சயான் ஆஜரானார். வாளையார் மனோஜ் ஆஜராகவில்லை. ஜாமினில் உள்ள எட்டு பேரும் ஆஜராகவில்லை. அப்போது, 'புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை' என, அரசு வழக்குறைஞர்கள் ஷாஜகான், கனகராஜ் சார்பில் தெரிவிக்கப்பட்ட வழக்கில், 35 வது சாட்சியான அனுபம் ரவி சார்பில் ஆஜரான வழக்குறைஞர் அனந்த கிருஷ்ணன், ''மறு விசாரணை செய்யக் கூடாதென தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுபம் ரவி மேல்முறையீடு செய்த மனு மீது தீர்ப்பு வரும் வரை விசாரணை நடத்தக் கூடாது,'' என்றார். வழக்கை நீதிபதி சஞ்சய் பாபா செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்த வழக்கில் சயானிடமும், இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடமும் காவல்துறையினர், சமீபத்தில் விசாரணை மேற்கொண்டதன் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்படவில்லை.\
அரசு வழக்குறைஞர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறுகையில், ''விசாரணை முடித்ததும் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதற்கு கால அவகாசம் தேவை எனத் தெரிவித்ததாகவும்''சாட்சிகளான கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்ட மூவரிடமும் விசாரணை நடக்கும்,'' என்றார்.
விசாரணை துவங்கியதும், அரசு வழக்குறைஞர் கனகராஜ், 35 வது சாட்சி அனுபம் ரவி தரப்பில் ஆஜரான அனந்தகிருஷ்ணன் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. நீதிபதி சஞ்சய் பாபா குறுக்கிட்டு, ''ஒரு வழக்கை அமைதியான முறையில் நடத்த நீதிமன்றம், அரசு தரப்பு, பொதுமக்கள், சமுதாயம் அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அனைவரும் அமைதியான முறையில் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்,'' என, அறிவுரை கூறினார். தொடர்ந்து விசாரணை அமைதியான முறையில் நடந்தது.
கருத்துகள்